MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4. 9 திருஅங்கமாலை
    பண் - சாதாரி
    திருச்சிற்றம்பலம்

    82 தலையே நீவணங்காய் - தலை
    மாலை தலைக்கணிந்து
    தலையா லேபலி தேருந் தலைவனைத்
    தலையே நீவணங்காய். 4.9.1
    83 கண்காள் காண்மின்களோ - கடல்
    நஞ்சுண்ட கண்டன்றன்னை
    எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
    கண்காள் காண்மின்களோ. 4.9.2
    84 செவிகாள் கேண்மின்களோ - சிவன்
    எம்மிறை செம்பவள
    எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
    செவிகள் கேண்மின்களோ. 4.9.3
    85 மூக்கே நீமுரலாய் - முது
    காடுறை முக்கணனை
    வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
    மூக்கே நீமுரலாய். 4.9.4
    86 வாயே வாழ்த்துகண்டாய் - மத
    யானை யுரிபோர்த்துப்
    பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
    வாயே வாழ்த்துகண்டாய். 4.9.5
    87 நெஞ்சே நீநினையாய் - நிமிர்
    புன்சடை நின்மலனை
    மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
    நெஞ்சே நீநினையாய். 4.9.6
    88 கைகாள் கூப்பித்தொழீர் - கடி
    மாமலர் தூவிநின்று
    பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
    கைகள் கூப்பித்தொழீர். 4.9.7
    89 ஆக்கை யாற்பயனென் - அரன்
    கோயில் வலம்வந்து
    பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
    வாக்கை யாற்பயனென். 4.9.8
    90 கால்க ளாற்பயனென் - கறைக்
    கண்ட னுறைகோயில்
    கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
    கால்க ளாற்பயனென். 4.9.9
    91 உற்றா ராருளரோ - உயிர்
    கொண்டு போம்பொழுது
    குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
    குற்றார் ஆருளரோ. 4.9.10
    92 இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்
    பல்கணத் தெண்ணப்பட்டுச்
    சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
    கிறுமாந் திருப்பன்கொலோ. 4.9.11
    93 தேடிக் கண்டுகொண்டேன் - திரு
    மாலொடு நான்முகனுந்
    தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
    தேடிக் கண்டுகொண்டேன். 4.9.12

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book