MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.100 திருவேகம்பம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    956 ஓதுவித் தாய்முன் அறவுரை
    காட்டி அமணரொடே
    காதுவித் தாய்கட்ட நோய்பிணி
    தீர்த்தாய் கலந்தருளிப்
    போதுவித் தாய்நின் பணிபிழைக்
    கிற்புளி யம்வளாரால்
    மோதுவிப் பாய்உகப் பாய்முனி
    வாய்கச்சி யேகம்பனே. 4.100.1
    957 எத்தைக்கொண் டெத்தகை ஏழை
    அமணொ டிசைவித்தெனைக்
    கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
    வித்தென்னைக் கோகுசெய்தாய்
    முத்தின் திரளும் பளிங்கினிற்
    சோதியும் மொய்பவளத்
    தொத்தினை யேய்க்கும் படியாய்
    பொழிற்கச்சி யேகம்பனே. 4.100.2
    958 மெய்யம்பு கோத்த விசயனோ
    டன்றொரு வேடுவனாய்ப்
    பொய்யம்பெய் தாவ மருளிச்செய்
    தாய்புர மூன்றெரியக்
    கையம்பெய் தாய்நுன் கழலடி
    போற்றாக் கயவர்நெஞ்சிற்
    குய்யம்பெய் தாய்கொடி மாமதில்
    சூழ்கச்சி யேகம்பனே. 4.100.3
    959 குறிக்கொண் டிருந்துசெந் தாமரை
    ஆயிரம் வைகல்வைகல்
    நெறிப்பட இண்டை புனைகின்ற
    மாலை நிறையழிப்பான்
    கறைக்கண்ட நீயொரு பூக்குறை
    வித்துக்கண் சூல்விப்பதே
    பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்
    காஞ்சியெம் பிஞ்ஞகனே. 4.100.4
    960 உரைக்குங் கழிந்திங் குணர்வரி
    யான்உள்கு வார்வினையைக்
    கரைக்கு மெனக்கை தொழுவதல்
    லாற்கதி ரோர்களெல்லாம்
    விரைக்கொண் மலரவன் மால்எண்
    வசுக்கள்ஏ காதசர்கள்
    இரைக்கும் அமிர்தர்க் கறியவொண்
    ணானெங்கள் ஏகம்பனே. 4.100.5
    961 கருவுற்ற நாள்முத லாகவுன்
    பாதமே காண்பதற்கு
    உருகிற்றென் னுள்ளமும் நானுங்
    கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
    திருவொற்றி யூரா திருவால
    வாயா திருவாரூரா
    ஒருபற் றிலாமையுங் கண்டிரங்
    காய்கச்சி யேகம்பனே. 4.100.6
    962 அரிஅயன் இந்திரன் சந்திரா
    தித்தர் அமரரெல்லாம்
    உரியநின் கொற்றக் கடைத்தலை
    யார்உணங் காக்கிடந்தார்
    புரிதரு புன்சடைப் போக
    முனிவர் புலம்புகின்றார்
    எரிதரு செஞ்சடை ஏகம்ப
    என்னோ திருக்குறிப்பே. 4.100.7
    963 பாம்பரைச் சேர்த்திப் படருஞ்
    சடைமுடிப் பால்வண்ணனே
    கூம்பலைச் செய்த கரதலத்
    தன்பர்கள் கூடிப்பன்னாள்
    சாம்பலைப் பூசித் தரையிற்
    புரண்டுநின் றாள்சரணென்
    றேம்பலிப் பார்கட் கிரங்குகண்
    டாய்கச்சி யேகம்பனே. 4.100.8
    964 ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு
    மானினி யல்லமென்னிற்
    சான்றுகண் டாய்இவ் வுலகமெல்
    லாந்தனி யேனென்றென்னை
    ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத்
    தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
    சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப
    மேய சுடர்வண்ணனே. 4.100.9
    965 உந்திநின் றாருன்றன் ஓலக்கச்
    சூளைகள் வாய்தல்பற்றித்
    துன்றிநின் றார்தொல்லை வானவ
    ரீட்டம் பணியறிவான்
    வந்துநின் றாரய னுந்திரு
    மாலும் மதிற்கச்சியாய்
    இந்தநின் றோமினி எங்ஙன
    மோவந் திறைஞ்சுவதே. 4.100.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book