MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.104 திருநாகைக்காரோணம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    993 வடிவுடை மாமலை மங்கைபங்
    காகங்கை வார்சடையாய்
    கடிகமழ் சோலை சுலவு
    கடல்நாகைக் காரோணனே
    பிடிமத வாரணம் பேணுந்
    துரகநிற் கப்பெரிய
    இடிகுரல் வெள்ளெரு தேறுமி
    தென்னைகொல் எம்மிறையே. 4.104.1
    994 கற்றார் பயில்கடல் நாகைக்கா
    ரோணத்தெங் கண்ணுதலே
    விற்றாங் கியகரம் வேல்நெடுங்
    கண்ணி வியன்கரமே
    நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித்
    தகர நின்கரமே
    செற்றார் புரஞ்செற்ற சேவக
    மென்னைகொல் செப்புமினே. 4.104.2
    995 தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
    வேள்வி தொழிற்படுத்த
    காமன் பொடிபடக் காய்ந்த
    கடல்நாகைக் காரோணநின்
    நாமம் பரவி நமச்சிவா
    யவென்னும் அஞ்செழுத்துஞ்
    சாமன் றுரைக்கத் தருதிகண்
    டாயெங்கள் சங்கரனே. 4.104.3
    996 பழிவழி யோடிய பாவிப்
    பறிதலைக் குண்டர்தங்கள்
    மொழிவழி யோடி முடிவேன்
    முடியாமைக் காத்துக்கொண்டாய்
    கழிவழி யோதம் உலவு
    கடல்நாகைக் காரோணவென்
    வழிவழி யாளாகும் வண்ணம்
    அருளெங்கள் வானவனே. 4.104.4
    997 செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை
    வெண்ணகைத் தேமொழியார்
    வந்து வலஞ்செய்து மாநட
    மாட மலிந்தசெல்வக்
    கந்த மலிபொழில் சூழ்கடல்
    நாகைக்கா ரோணமென்றுஞ்
    சிந்தைசெய் வாரைப் பிரியா
    திருக்குந் திருமங்கையே. 4.104.5
    998 பனைபுரை கைம்மத யானை
    யுரித்த பரஞ்சுடரே
    கனைகடல் சூழ்தரு நாகைக்கா
    ரோணத்தெங் கண்ணுதலே
    மனைதுறந் தல்லுணா வல்லமண்
    குண்டர் மயக்கைநீக்கி
    எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி
    யான்செயும் இச்சைகளே. 4.104.6
    999 சீர்மலி செல்வம் பெரிதுடை
    யசெம்பொன் மாமலையே
    கார்மலி சோலை சுலவு
    கடல்நாகைக் காரோணனே
    வார்மலி மென்முலை யார்பலி
    வந்திடச் சென்றிரந்து
    ஊர்மலி பிச்சைகொண் டுண்பது
    மாதிமை யோவுரையே. 4.104.7
    1000 வங்கம் மலிகடல் நாகைக்கா
    ரோணத்தெம் வானவனே
    எங்கள் பெருமானோர் விண்ணப்பம்
    உண்டது கேட்டருளீர்
    கங்கை சடையுட் கரந்தாயக்
    கள்ளத்தை மெள்ளவுமை
    நங்கை அறியிற்பொல் லாதுகண்டா
    யெங்கள் நாயகனே. 4.104.8
    இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 4.104.9
    1001 கருந்தடங் கண்ணியுந் தானுங்
    கடல்நாகைக் காரோணத்தான்
    இருந்த திருமலை யென்றிறைஞ்
    சாதன் றெடுக்கலுற்றான்
    பெருந்தலை பத்தும் இருபது
    தோளும் பிதிர்ந்தலற
    இருந்தரு ளிச்செய்த தேமற்றுச்
    செய்திலன் எம்மிறையே. 4.104.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book