MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.113 தனி - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1050 வெள்ளிக் குழைத்துணி போலுங்
    கபாலத்தன் வீழ்ந்திலங்கு
    வெள்ளிப் புரியன்ன வெண்புரி
    நூலன் விரிசடைமேல்
    வெள்ளித் தகடன்ன வெண்பிறை
    சூடிவெள் ளென்பணிந்து
    வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம்
    பூசிய வேதியனே. 4.113.1
    1051 உடலைத் துறந்துல கேழுங்
    கடந்துல வாததுன்பக்
    கடலைக் கடந்துய்யப் போயிட
    லாகுங் கனகவண்ணப்
    படலைச் சடைப்பர வைத்திரைக்
    கங்கை பனிப்பிறைவெண்
    சுடலைப் பொடிக்கட வுட்கடி
    மைக்கண் துணிநெஞ்சமே. 4.113.2
    1052 முன்னே யுரைத்தால் முகமனே
    யொக்குமிம் மூவுலகுக்
    கன்னையும் அத்தனு மாவா
    யழல்வணா நீயலையோ
    உன்னை நினைந்தே கழியுமென்
    னாவி கழிந்ததற்பின்
    என்னை மறக்கப் பெறாயெம்
    பிரானுன்னை வேண்டியதே. 4.113.3
    1053 நின்னையெப் போது நினையலொட்
    டாய்நீ நினையப்புகிற்
    பின்னையப் போதே மறப்பித்துப்
    பேர்த்தொன்று நாடுவித்தி
    உன்னையெப் போதும் மறந்திட்
    டுனக்கினி தாயிருக்கும்
    என்னையொப் பாருள ரோசொல்லு
    வாழி இறையவனே. 4.113.4
    1054 முழுத்தழல் மேனித் தவளப்
    பொடியன் கனகக்குன்றத்
    தெழிற்பெருஞ் சோதியை எங்கள்
    பிரானை யிகழ்ந்திர்கண்டீர்
    தொழப்படுந் தேவர் தொழப்படு
    வானைத் தொழுதபின்னை
    தொழப்படுந் தேவர்தம் மால்தொழு
    விக்குந்தன் தொண்டரையே. 4.113.5
    1055 விண்ணகத் தான்மிக்க வேதத்
    துளான்விரி நீருடுத்த
    மண்ணகத் தான்திரு மாலகத்
    தான்மரு வற்கினிய
    பண்ணகத் தான்பத்தர் சித்தத்
    துளான்பழ நாயடியேன்
    கண்ணகத் தான்மனத் தான்சென்னி
    யானெங் கறைக்கண்டனே. 4.113.6
    1056 பெருங்கடல் மூடிப் பிரளயங்
    கொண்டு பிரமனும்போய்
    இருங்கடல் மூடி இறக்கும்
    இறந்தான் களேபரமுங்
    கருங்கடல் வண்ணன் களேபர
    முங்கொண்டு கங்காளராய்
    வருங்கடல் மீளநின் றெம்மிறை
    நல்வீணை வாசிக்குமே. 4.113.7
    1057 வானந் துளங்கிலென் மண்கம்ப
    மாகிலென் மால்வரையுந்
    தானந் துளங்கித் தலைதடு
    மாறிலென் தண்கடலும்
    மீனம் படிலென் விரிசுடர்
    வீழிலென் வேலைநஞ்சுண்
    டூனமொன் றில்லா ஒருவனுக்
    காட்பட்ட உத்தமர்க்கே. 4.113.8
    1058 சிவனெனும் நாமந் தனக்கே
    யுடையசெம் மேனியெம்மான்
    அவனெனை ஆட்கொண் டளித்திடு
    மாகில் அவன்றனையான்
    பவனெனு நாமம் பிடித்துத்
    திரிந்துபன் னாளழைத்தால்
    இவனெனைப் பன்னாள் அழைப்பொழி
    யானென் றெதிர்ப்படுமே. 4.113.9
    1059 என்னையொப் பாருன்னை எங்ஙனம்
    காண்பர் இகலியுன்னை
    நின்னையொப் பார்நின்னைக் காணும்
    படித்தன்று நின்பெருமை
    பொன்னையொப் பாரித் தழலை
    வளாவிச்செம் மானஞ்செற்று
    மின்னையொப் பார மிளிருஞ்
    சடைக்கற்றை வேதியனே. 4.113.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book