MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.19 திருவாரூர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    187 சூலப் படையானைச் சூழாக வீழருவிக்
    கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப்
    பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய
    ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே. 4.19.1
    188 பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையிற்
    புக்கவூர்ப் பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தாய்க்
    கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோ
    டக்கணிந்த அம்மானை நான்கண்ட தாரூரே. 4.19.2
    189 சேய உலகமுஞ் செல்சார்வு மானானை
    மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனை
    வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
    ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே. 4.19.3
    190 ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
    மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின்
    நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்ப
    ஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே. 4.19.4
    191 தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறிப்
    பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
    தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில்
    பூங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே. 4.19.5
    192 எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்
    நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை அந்திவாய்ச்
    செம்பட் டுடுத்துச் சிறுமா னுரியாடை
    அம்பட் டசைத்தானை நான்கண்ட தாரூரே. 4.19.6
    193 போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு
    வேழத் துரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ
    ஊழித்தீ யன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர்
    ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே. 4.19.7
    194 வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத்
    துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர்
    நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித்
    தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே. 4.19.8
    195 காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
    நீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன்
    பேரமுத முண்டார்கள் உய்யப் பெருங்கடல்நஞ்
    சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே. 4.19.9
    196 தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
    கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
    ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
    ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே. 4.19.10
    197 மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற்
    றுஞ்சாப்போர் வாளரக்கன் றோள்நெரியக் கண்குருதிச்
    செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பில் பால்வெண்ணீற்
    றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே. 4.19.11

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book