MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.21 திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம்
    பண் - குறிஞ்சி
    திருச்சிற்றம்பலம்

    208 முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
    பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
    வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
    அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.1
    209 நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும்
    பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
    மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்
    கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.2
    210 வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள்
    சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச்
    சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள்
    ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.3
    211 குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
    பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார்
    வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
    அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.4
    212 நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
    பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்
    கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந்
    தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.5
    213 விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
    தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
    எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்
    கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.6
    214 செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
    மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்
    இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்
    அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.7
    215 முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல
    வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்
    பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ
    அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.8
    216 துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
    இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்
    நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
    அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.9
    217 பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச்
    சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்
    தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும்
    ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book