MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.23 கோயில் - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    229 பத்தனாய்ப் பாட மாட்டேன்
    பரமனே பரம யோகீ
    எத்தினாற் பத்தி செய்கேன்
    என்னைநீ இகழ வேண்டா
    முத்தனே முதல்வா தில்லை
    அம்பலத் தாடு கின்ற
    அத்தாவுன் ஆடல் காண்பான்
    அடியனேன் வந்த வாறே. 4.23.1
    230 கருத்தனாய்ப் பாட மாட்டேன்
    காம்பன தோளி பங்கா
    ஒருத்தரா லறிய வொண்ணாத்
    திருவுரு வுடைய சோதீ
    திருத்தமாந் தில்லை தன்னுட்
    டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
    நிருத்தம்நான் காண வேண்டி
    நேர்பட வந்த வாறே. 4.23.2
    231 கேட்டிலேன் கிளைபி ரியேன்
    கேட்குமா கேட்டி யாகில்
    நாட்டினேன் நின்றன் பாதம்
    நடுப்பட நெஞ்சி னுள்ளே
    மாட்டினீர் வாளை பாயு
    மல்குசிற் றம்ப லத்தே
    கூட்டமாங் குவிமு லையாள்
    கூடநீ யாடு மாறே. 4.23.3
    232 சிந்தையைத் திகைப்பி யாதே
    செறிவுடை அடிமை செய்ய
    எந்தைநீ அருளிச் செய்யாய்
    யாதுநான் செய்வ தென்னே
    செந்தியார் வேள்வி ஓவாத்
    தில்லைச்சிற் றம்ப லத்தே
    அந்தியும் பகலும் ஆட
    அடியிணை அலசுங் கொல்லோ. 4.23.4
    233 கண்டவா திரிந்து நாளுங்
    கருத்தினால் நின்றன் பாதங்
    கொண்டிருந் தாடிப் பாடிக்
    கூடுவன் குறிப்பி னாலே
    வண்டுபண் பாடுஞ் சோலை
    மல்குசிற் றம்ப லத்தே
    எண்டிசை யோரு மேத்த
    இறைவநீ யாடு மாறே. 4.23.5
    234 பார்த்திருந் தடிய னேன்நான்
    பரவுவன் பாடி யாடி
    மூர்த்தியே என்பன் உன்னை
    மூவரில் முதல்வன் என்பன்
    ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்
    தில்லைச்சிற் றம்ப லத்துக்
    கூத்தாவுன் கூத்துக் காண்பான்
    கூடநான் வந்த வாறே. 4.23.6
    235 பொய்யினைத் தவிர விட்டுப்
    புறமலா அடிமை செய்ய
    ஐயநீ அருளிச் செய்யாய்
    ஆதியே ஆதி மூர்த்தி
    வையகந் தன்னில் மிக்க
    மல்குசிற் றம்ப லத்தே
    பையநின் னாடல் காண்பான்
    பரமநான் வந்த வாறே. 4.23.7
    236 மனத்தினார் திகைத்து நாளும்
    மாண்பலா நெறிகள் மேலே
    கனைப்பரால் என்செய் கேனோ
    கறையணி கண்டத் தானே
    தினைத்தனை வேதங் குன்றாத்
    தில்லைச்சிற் றம்ப லத்தே
    அனைத்துநின் னிலயங் காண்பான்
    அடியனேன் வந்த வாறே. 4.23.8
    237 நெஞ்சினைத் தூய்மை செய்து
    நினைக்குமா நினைப்பி யாதே
    வஞ்சமே செய்தி யாலோ
    வானவர் தலைவ னேநீ
    மஞ்சடை சோலைத் தில்லை
    மல்குசிற் றம்ப லத்தே
    அஞ்சொலாள் காண நின்று
    அழகநீ யாடு மாறே. 4.23.9
    238 மண்ணுண்ட மால வனும்
    மலர்மிசை மன்னி னானும்
    விண்ணுண்ட திருவு ருவம்
    விரும்பினார் காண மாட்டார்
    திண்ணுண்ட திருவே மிக்க
    தில்லைச்சிற் றம்ப லத்தே
    பண்ணுண்ட பாட லோடும்
    பரமநீ யாடு மாறே. 4.23.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book