MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.25 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
    249 வெண்ணிலா மதியந் தன்னை
    விரிசடை மேவ வைத்து
    உண்ணிலாப் புகுந்து நின்றங்
    குணர்வினுக் குணரக் கூறி
    விண்ணிலார் மீயச் சூரர்
    வேண்டுவார் வேண்டு வார்க்கே
    அண்ணியார் பெரிதுஞ் சேயார்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.25.1
    250 பாடினார் மறைகள் நான்கும்
    பாயிருள் புகுந்தென் உள்ளங்
    கூடினார் கூட லால
    வாயிலார் நல்ல கொன்றை
    சூடினார் சூடல் மேவிச்
    சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீ
    றாடினார் ஆடல் மேவி
    அதிகைவீ ரட்ட னாரே. 4.25.2
    251 ஊனையே கழிக்க வேண்டில்
    உணர்மின்கள் உள்ளத் துள்ளே
    தேனைய மலர்கள் கொண்டு
    சிந்தையுட் சிந்திக் கின்ற
    ஏனைய பலவு மாகி
    இமையவர் ஏத்த நின்று
    ஆனையின் உரிவை போர்த்தார்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.25.3
    252 துருத்தியாங் குரம்பை தன்னில்
    தொண்ணூற்றங் கறுவர் நின்று
    விருத்திதான் தருக வென்று
    வேதனை பலவுஞ் செய்ய
    வருத்தியால் வல்ல வாறு
    வந்துவந் தடைய நின்ற
    அருத்தியார்க் கன்பர் போலும்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.25.4
    253 பத்தியால் ஏத்தி நின்று
    பணிபவர் நெஞ்சத் துள்ளார்
    துத்திஐந் தலைய நாகஞ்
    சூழ்சடை முடிமேல் வைத்து
    உத்தர மலையர் பாவை
    உமையவள் நடுங்க அன்று
    அத்தியின் உரிவை போர்த்தார்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.25.5
    254 வரிமுரி பாடி யென்றும்
    வல்லவா றடைந்து நெஞ்சே
    கரியுரி மூட வல்ல
    கடவுளைக் காலத் தாலே
    சுரிபுரி விரிகு ழலாள்
    துடியிடைப் பரவை யல்குல்
    அரிவையோர் பாகர் போலும்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.25.6
    255 நீதியால் நினைசெய் நெஞ்சே
    நிமலனை நித்த மாகப்
    பாதியாம் உமைதன் னோடும்
    பாகமாய் நின்ற எந்தை
    சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச்
    சுண்ணவெண் ணீற தாடி
    ஆதியும் ஈறு மானார்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.25.7
    256 எல்லியும் பகலு மெல்லாந்
    துஞ்சுவேற் கொருவர் வந்து
    புல்லிய மனத்துக் கோயில்
    புக்கனர் காம னென்னும்
    வில்லிஐங் கணையி னானை
    வெந்துக நோக்கி யிட்டார்
    அல்லியம் பழன வேலி
    அதிகைவீ ரட்ட னாரே. 4.25.8
    257 ஒன்றவே யுணர்தி ராகில்
    ஓங்காரத் தொருவ னாகும்
    வென்றஐம் புலன்கள் தம்மை
    விலக்குதற் குரியீ ரெல்லாம்
    நன்றவன் நார ணனும்
    நான்முகன் நாடிக் காண்குற்
    றன்றவர்க் கரியர் போலும்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.25.9
    258 தடக்கையால் எடுத்து வைத்துத்
    தடவரை குலுங்க ஆர்த்துக்
    கிடக்கையால் இடர்க ளோங்கக்
    கிளர்மணி முடிகள் சாய
    முடக்கினார் திருவி ரலான்
    முருகமர் கோதை பாகத்
    தடக்கினார் என்னை யாளும்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.25.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book