MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.28 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்
    278 முன்பெலாம் இளைய காலம்
    மூர்த்தியை நினையா தோடிக்
    கண்கண இருமி நாளுங்
    கருத்தழிந் தருத்த மின்றிப்
    பின்பக லுணங்கல் அட்டும்
    பேதைமார் போன்றேன் உள்ளம்
    அன்பனாய் வாழ மாட்டேன்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.28.1
    279 கறைப்பெருங் கண்டத் தானே
    காய்கதிர் நமனை யஞ்சி
    நிறைப்பெருங் கடலைக் கண்டேன்
    நீள்வரை யுச்சி கண்டேன்
    பிறைப்பெருஞ் சென்னி யானே
    பிஞ்ஞகா இவைய னைத்தும்
    அறுப்பதோர் உபாயங் காணேன்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.28.2
    280 நாதனா ரென்ன நாளும்
    நடுங்கின ராகித் தங்கள்
    ஏதங்கள் அறிய மாட்டார்
    இணையடி தொழுதோம் என்பார்
    ஆதனா னவனென் றெள்கி
    அதிகைவீ ரட்ட னேநின்
    பாதநான் பரவா துய்க்கும்
    பழவினைப் பரிசி லேனே. 4.28.3
    281 சுடலைசேர் சுண்ண மெய்யர்
    சுரும்புண விரிந்த கொன்றைப்
    படலைசேர் அலங்கல் மார்பர்
    பழனஞ்சேர் கழனித் தெங்கின்
    மடலைநீர் கிழிய வோடி
    அதனிடை மணிகள் சிந்துங்
    கெடிலவீ ரட்ட மேய
    கிளர்சடை முடிய னாரே. 4.28.4
    282 மந்திர முள்ள தாக
    மறிகட லெழுநெய் யாக
    இந்திரன் வேள்வித் தீயில்
    எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்
    சிந்திர மாக நோக்கித்
    தெருட்டுவார் தெருட்ட வந்து
    கந்திரம் முரலுஞ் சோலைக்
    கானலங் கெடிலத் தாரே. 4.28.5
    இப்பதிகத்தில் 6,7,8,9-ம் செய்யுட்கள்
    சிதைந்து போயின. 4.28.6-9
    283 மைஞ்ஞல மனைய கண்ணாள்
    பங்கன்மா மலையை யோடி
    மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க
    விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
    கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு
    காதலால் இனிது சொன்ன
    கின்னரங் கேட்டு கந்தார்
    கெடிலவீ ரட்ட னாரே. 4.28.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book