MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.30 திருக்கழிப்பாலை - திரு நேரிசை

    திருச்சிற்றம்பலம்

    294 நங்கையைப் பாகம் வைத்தார்
    ஞானத்தை நவில வைத்தார்
    அங்கையில் அனலும் வைத்தார்
    ஆனையின் உரிவை வைத்தார்
    தங்கையின் யாழும் வைத்தார்
    தாமரை மலரும் வைத்தார்
    கங்கையைச் சடையுள் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4.30.1
    295 விண்ணினை விரும்ப வைத்தார்
    வேள்வியை வேட்க வைத்தார்
    பண்ணினைப் பாட வைத்தார்
    பத்தர்கள் பயில வைத்தார்
    மண்ணினைத் தாவ நீண்ட
    மாலினுக் கருளும் வைத்தார்
    கண்ணினை நெற்றி வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4.30.2
    296 வாமனை வணங்க வைத்தார்
    வாயினை வாழ்த்த வைத்தார்
    சோமனைச் சடைமேல் வைத்தார்
    சோதியுட் சோதி வைத்தார்
    ஆமனை யாட வைத்தார்
    அன்பெனும் பாசம் வைத்தார்
    காமனைக் காய்ந்த கண்ணார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4.30.3
    297 அரியன அங்கம் வேதம்
    அந்தணர்க் கருளும் வைத்தார்
    பெரியன புரங்கள் மூன்றும்
    பேரழ லுண்ண வைத்தார்
    பரியதீ வண்ண ராகிப்
    பவளம்போல் நிறத்தை வைத்தார்
    கரியதோர் கண்டம் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4.30.4
    298 கூரிருள் கிழிய நின்ற
    கொடுமழுக் கையில் வைத்தார்
    பேரிருள் கழிய மல்கு
    பிறைபுனற் சடையுள் வைத்தார்
    ஆரிருள் அண்டம் வைத்தார்
    அறுவகைச் சமயம் வைத்தார்
    காரிருள் கண்டம் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4.30.5
    299 உட்டங்கு சிந்தை வைத்தார்
    உள்குவார்க் குள்ளம் வைத்தார்
    விட்டங்கு வேள்வி வைத்தார்
    வெந்துயர் தீர வைத்தார்
    நட்டங்கு நடமும் வைத்தார்
    ஞானமு நவில வைத்தார்
    கட்டங்கந் தோண்மேல் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4.30.6
    300 ஊனப்பே ரொழிய வைத்தார்
    ஓதியே உணர வைத்தார்
    ஞானப்பேர் நவில வைத்தார்
    ஞானமு நடுவும் வைத்தார்
    வானப்பே ராறும் வைத்தார்
    வைகுந்தற் காழி வைத்தார்
    கானப்பேர் காதல் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே 4.30.7
    301 கொங்கினும் அரும்பு வைத்தார்
    கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
    சங்கினுள் முத்தம் வைத்தார்
    சாம்பலும் பூச வைத்தார்
    அங்கமும் வேதம் வைத்தார்
    ஆலமும் உண்டு வைத்தார்
    கங்குலும் பகலும் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4.30.8
    302 சதுர்முகன் தானும் மாலுந்
    தம்மிலே இகலக் கண்டு
    எதிர்முக மின்றி நின்ற
    எரியுரு வதனை வைத்தார்
    பிதிர்முகன் காலன் றன்னைக்
    கால்தனிற் பிதிர வைத்தார்
    கதிர்முகஞ் சடையில் வைத்தார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4.30.9
    303 மாலினாள் நங்கை அஞ்ச
    மதிலிலங் கைக்கு மன்னன்
    வேலினான் வெகுண் டெடுக்கக்
    காண்டலும் வேத நாவன்
    நூலினான் நோக்கி நக்கு
    நொடிப்பதோ ரளவில் வீழக்
    காலினால் ஊன்றி யிட்டார்
    கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4.30.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பால்வண்ணவீசுவரர், தேவியார் - பொற்பதவேதநாயகி.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book