MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.33 திருமறைக்காடு - திரு நேரிசை

    திருச்சிற்றம்பலம்

    324 இந்திர னோடு தேவர்
    இருடிகள் ஏத்து கின்ற
    சுந்தர மானார் போலுந்
    துதிக்கலாஞ் சோதி போலுஞ்
    சந்திர னோடுங் கங்கை
    அரவையுஞ் சடையுள் வைத்து
    மந்திர மானார் போலும்
    மாமறைக் காட னாரே. 4.33.1
    325 தேயன நாட ராகித்
    தேவர்கள் தேவர் போலும்
    பாயன நாட றுக்கும்
    பத்தர்கள் பணிய வம்மின்
    காயன நாடு கண்டங்
    கதனுளார் காள கண்டர்
    மாயன நாடர் போலும்
    மாமறைக் காட னாரே. 4.33.2
    326 அறுமையிவ் வுலகு தன்னை
    யாமெனக் கருதி நின்று
    வெறுமையின் மனைகள் வாழ்ந்து
    வினைகளால் நலிவு ணாதே
    சிறுமதி அரவு கொன்றை
    திகழ்தரு சடையுள் வைத்து
    மறுமையும் இம்மை யாவார்
    மாமறைக் காட னாரே. 4.33.3
    327 கால்கொடுத் திருகை யேற்றிக்
    கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
    தோல்படுத் துதிர நீராற்
    சுவரெடுத் திரண்டு வாசல்
    ஏல்வுடைத் தாவ மைத்தங்
    கேழுசா லேகம் பண்ணி
    மால்கொடுத் தாவி வைத்தார்
    மாமறைக் காட னாரே. 4.33.4
    328 விண்ணினார் விண்ணின் மிக்கார்
    வேதங்கள் விரும்பி யோதப்
    பண்ணினார் கின்ன ரங்கள்
    பத்தர்கள் பாடி யாடக்
    கண்ணினார் கண்ணி னுள்ளே
    சோதியாய் நின்ற எந்தை
    மண்ணினார் வலங்கொண் டேத்தும்
    மாமறைக் காட னாரே. 4.33.5
    329 அங்கையுள் அனலும் வைத்தார்
    அறுவகைச் சமயம் வைத்தார்
    தங்கையில் வீணை வைத்தார்
    தம்மடி பரவ வைத்தார்
    திங்களைக் கங்கை யோடு
    திகழ்தரு சடையுள் வைத்தார்
    மங்கையைப் பாகம் வைத்தார்
    மாமறைக் காட னாரே. 4.33.6
    330 கீதராய்க் கீதங் கேட்டுக்
    கின்னரந் தன்னை வைத்தார்
    வேதராய் வேத மோதி
    விளங்கிய சோதி வைத்தார்
    ஏதராய் நட்ட மாடி
    இட்டமாய்க் கங்கை யோடு
    மாதையோர் பாகம் வைத்தார்
    மாமறைக் காட னாரே. 4.33.7
    331 கனத்தினார் வலி யுடைய
    கடிமதில் அரணம் மூன்றுஞ்
    சினத்தினுட் சினமாய் நின்று
    தீயெழச் செற்றார் போலுந்
    தனத்தினைத் தவிர்ந்து நின்று
    தம்மடி பரவு வார்க்கு
    மனத்தினுள் மாசு தீர்ப்பார்
    மாமறைக் காட னாரே. 4.33.8
    332 தேசனைத் தேசன் றன்னைத்
    தேவர்கள் போற்றி சைப்பார்
    வாசனை செய்து நின்று
    வைகலும் வணங்கு மின்கள்
    காசினைக் கனலை என்றுங்
    கருத்தினில் வைத்த வர்க்கு
    மாசினைத் தீர்ப்பர் போலும்
    மாமறைக் காட னாரே. 4.33.9
    333 பிணியுடை யாக்கை தன்னைப்
    பிறப்பறுத் துய்ய வேண்டிற்
    பணியுடைத் தொழில்கள் பூண்டு
    பத்தர்கள் பற்றி னாலே
    துணிவுடை அரக்க னோடி
    எடுத்தலுந் தோகை அஞ்ச
    மணிமுடிப் பத்தி றுத்தார்
    மாமறைக் காட னாரே. 4.33.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்,
    தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book