MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.34 திருமறைக்காடு - திரு நேரிசை

    திருச்சிற்றம்பலம்

    334 தேரையு மேல்க டாவித்
    திண்ணமாத் தெளிந்து நோக்கி
    யாரையு மேலு ணரா
    ஆண்மையான் மிக்கான் தன்னைப்
    பாரையும் விண்ணும் அஞ்சப்
    பரந்த தோள் முடியடர்த்துக்
    காரிகை அஞ்ச லென்பார்
    கலிமறைக் காட னாரே. 4.33.1
    335 முக்கிமுன் வெகுண்டெ டுத்த
    முடியுடை அரக்கர்கோனை
    நக்கிருந் தூன்றிச் சென்னி
    நாண்மதி வைத்த எந்தை
    அக்கர வாமை பூண்ட
    அழகனார் கருத்தி னாலே
    தெக்குநீர்த் திரைகள் மோதுந்
    திருமறைக் காட னாரே. 4.33.2
    336 மிகப்பெருத் துலாவ மிக்கா
    னக்கொரு தேர்க டாவி
    அகப்படுத் தென்று தானும்
    ஆண்மையால் மிக்க ரக்கன்
    உகைத்தெடுத் தான்ம லையை
    ஊன்றலும் அவனை யாங்கே
    நகைப்படுத் தருளி னானூர்
    நான்மறைக் காடு தானே. 4.33.3
    337 அந்தரந் தேர்க டாவி
    யாரிவ னென்று சொல்லி
    உந்தினான் மாம லையை
    ஊன்றலும் ஒள்ள ரக்கன்
    பந்தமாந் தலைகள் பத்தும்
    வாய்கள்விட் டலறி வீழச்
    சிந்தனை செய்து விட்டார்
    திருமறைக் காட னாரே. 4.33.4
    338 தடுக்கவுந் தாங்க வொண்ணாத்
    தன்வலி யுடைய னாகிக்
    கடுக்கவோர் தேர்க டாவிக்
    கையிரு பதுக ளாலும்
    எடுப்பன்நான் என்ன பண்ட
    மென்றெடுத் தானை ஏங்க
    அடுக்கவே வல்ல னூராம்
    அணிமறைக் காடு தானே. 4.33.5
    339 நாண்முடிக் கின்ற சீரான்
    நடுங்கியே மீது போகான்
    கோள்பிடித் தார்த்த கையான்
    கொடியன்மா வலிய னென்று
    நீண்முடிச் சடையர் சேரும்
    நீள்வரை யெடுக்க லுற்றான்
    தோண்முடி நெரிய வைத்தார்
    தொன்மறைக் காட னாரே. 4.33.6
    340 பத்துவாய் இரட்டிக் கைக
    ளுடையன்மா வலிய னென்று
    பொத்திவாய் தீமை செய்த
    பொருவலி அரக்கர் கோனைக்
    கத்திவாய் கதற அன்று
    கால்விர லூன்றி யிட்டார்
    முத்துவாய்த் திரைகள் மோதும்
    முதுமறைக் காட னாரே. 4.33.7
    341 பக்கமே விட்ட கையான்
    பாங்கிலா மதிய னாகிப்
    புக்கனன் மாம லைக்கீழ்ப்
    போதுமா றறிய மாட்டான்
    மிக்கமா மதிகள் கெட்டு
    வீரமும் இழந்த வாறே
    நக்கன பூத மெல்லாம்
    நான்மறைக் காட னாரே. 4.33.8
    342 நாணஞ்சு கைய னாகி
    நான்முடி பத்தி னோடு
    பாணஞ்சு முன்னி ழந்த
    பாங்கிலா மதிய னாகி
    நீணஞ்சு தானு ணரா
    நின்றெடுத் தானை அன்று
    ஏணஞ்சு கைகள் செய்தார்
    எழில்மறைக் காட னாரே. 4.33.9
    343 கங்கைநீர் சடையுள் வைக்கக்
    காண்டலும் மங்கை யூடத்
    தென்கையான் தேர்க டாவிச்
    சென்றெடுத் தான் மலையை
    முன்கைமா நரம்பு வெட்டி
    முன்னிருக் கிசைகள் பாட
    அங்கைவாள் அருளி னானூர்
    அணிமறைக் காடு தானே. 4.33.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book