MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.35 திருவிடைமருது - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    344 காடுடைச் சுடலை நீற்றர்
    கையில்வெண் டலையர் தையல்
    பாடுடைப் பூதஞ் சூழப்
    பரமனார் மருத வைப்பிற்
    தோடுடைக் கைதை யோடு
    சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
    ஏடுடைக் கமல வேலி
    இடைமரு திடங்கொண் டாரே. 4.34.1
    345 முந்தையார் முந்தி யுள்ளார்
    மூவர்க்கு முதல்வ ரானார்
    சந்தியார் சந்தி யுள்ளார்
    தவநெறி தரித்து நின்றார்
    சிந்தையார் சிந்தை யுள்ளார்
    சிவநெறி யனைத்து மானார்
    எந்தையார் எம்பி ரானார்
    இடைமரு திடங் கொண்டாரே. 4.34.2
    346 காருடைக் கொன்றை மாலை
    கதிர்மணி அரவி னோடு
    நீருடைச் சடையுள் வைத்த
    நீதியார் நீதி யாய
    போருடை விடையொன் றேற
    வல்லவர் பொன்னித் தென்பால்
    ஏருடைக் கமல மோங்கும்
    இடைமரு திடங் கொண்டாரே. 4.34.3
    347 விண்ணினார் விண்ணின் மிக்கார்
    வேதங்கள் நான்கும் அங்கம்
    பண்ணினார் பண்ணின் மிக்க
    பாடலார் பாவந் தீர்க்குங்
    கண்ணினார் கண்ணின் மிக்க
    நுதலினார் காமர் காய்ந்த
    எண்ணினார் எண்ணின் மிக்கார்
    இடைமரு திடங் கொண்டாரே. 4.34.4
    348 வேதங்கள் நான்குங் கொண்டு
    விண்ணவர் பரவி ஏத்தப்
    பூதங்கள் பாடி யாட
    லுடையவன் புனிதன் எந்தை
    பாதங்கள் பரவி நின்ற
    பத்தர்கள் தங்கள் மேலை
    ஏதங்கள் தீர நின்றார்
    இடைமரு திடங் கொண்டாரே. 4.34.5
    349 பொறியர வரையி லார்த்துப்
    பூதங்கள் பலவுஞ் சூழ
    முறிதரு வன்னி கொன்றை
    முதிர்சடை மூழ்க வைத்து
    மறிதரு கங்கை தங்க
    வைத்தவர் எத்தி சையும்
    ஏறிதரு புனல்கொள் வேலி
    இடைமரு திடங் கொண்டாரே. 4.34.6
    350 படரொளி சடையி னுள்ளாற்
    பாய்புனல் அரவி னோடு
    சுடரொளி மதியம் வைத்துத்
    தூவொளி தோன்றும் எந்தை
    அடரொளி விடையொன் றேற
    வல்லவர் அன்பர் தங்கள்
    இடரவை கெடவு நின்றார்
    இடைமரு திடங் கொண்டாரே. 4.34.7
    351 கமழ்தரு சடையி னுள்ளாற்
    கடும்புனல் அரவி னோடு
    தவழ்தரு மதியம் வைத்துத்
    தன்னடி பலரும் ஏத்த
    மழுவது வலங்கை யேந்தி
    மாதொரு பாக மாகி
    எழில்தரு பொழில்கள் சூழ்ந்த
    இடைமரு திடங் கொண்டாரே. 4.34.8
    352 பொன்றிகழ் கொன்றை மாலை
    புதுப்புனல் வன்னி மத்தம்
    மின்றிகழ் சடையில் வைத்து
    மேதகத் தோன்று கின்ற
    அன்றவர் அளக்க லாகா
    அனலெரி யாகி நீண்டார்
    இன்றுட னுலக மேத்த
    இடைமரு திடங் கொண்டாரே. 4.34.9
    353 மலையுடன் விரவி நின்று
    மதியிலா அரக்கன் நூக்கத்
    தலையுட னடர்த்து மீண்டே
    தலைவனாய் அருள்கள் நல்கிச்
    சிலையுடை மலையை வாங்கித்
    திரிபுர மூன்றும் எய்தார்
    இலையுடைக் கமல வேலி
    இடைமரு திடங் கொண்டாரே. 4.34.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book