MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.37 திருநெய்த்தானம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    364 காலனை வீழச் செற்ற
    கழலடி இரண்டும் வந்தென்
    மேலவா யிருக்கப் பெற்றேன்
    மேதகத் தோன்று கின்ற
    கோலநெய்த் தான மென்னுங்
    குளிர்பொழிற் கோயில் மேய
    நீலம்வைத் தனைய கண்ட
    நினைக்குமா நினைக்கின் றேனே. 4.37.1
    365 காமனை யன்று கண்ணாற்
    கனலெரி யாக நோக்கித்
    தூபமுந் தீபங் காட்டித்
    தொழுமவர்க் கருள்கள் செய்து
    சேமநெய்த் தான மென்னுஞ்
    செறிபொழிற் கோயில் மேய
    வாமனை நினைந்த நெஞ்சம்
    வாழ்வுற நினைந்த வாறே. 4.37.2
    366 பிறைதரு சடையின் மேலே
    பெய்புனற் கங்கை தன்னை
    உறைதர வைத்த எங்கள்
    உத்தமன் ஊழி யாய
    நிறைதரு பொழில்கள் சூழ
    நின்றநெய்த் தான மென்று
    குறைதரும் அடிய வர்க்குக்
    குழகனைக் கூட லாமே. 4.37.3
    367 வடிதரு மழுவொன் றேந்தி
    வார்சடை மதியம் வைத்துப்
    பொடிதரு மேனி மேலே
    புரிதரு நூலர் போலும்
    நெடிதரு பொழில்கள் சூழ
    நின்றநெய்த் தானம் மேவி
    அடிதரு கழல்கள் ஆர்ப்ப
    ஆடுமெம் அண்ண லாரே. 4.37.4
    368 காடிட மாக நின்று
    கனலெரி கையி லேந்திப்
    பாடிய பூதஞ் சூழப்
    பண்ணுடன் பலவுஞ் சொல்லி
    ஆடிய கழலார் சீரார்
    அந்தண்நெய்த் தானம் என்றுங்
    கூடிய குழக னாரைக்
    கூடுமா றறிகி லேனே. 4.37.5
    369 வானவர் வணங்கி யேத்தி
    வைகலும் மலர்கள் தூவத்
    தானவர்க் கருள்கள் செய்யும்
    சங்கரன் செங்கண் ஏற்றன்
    தேனமர் பொழில்கள் சூழத்
    திகழுநெய்த் தானம் மேய
    கூனிள மதியி னானைக்
    கூடுமா றறிகி லேனே. 4.37.6
    370 காலதிற் கழல்க ளார்ப்பக்
    கனலெரி கையில் வீசி
    ஞாலமுங் குழிய நின்று
    நட்டம தாடு கின்ற
    மேலவர் முகடு தோய
    விரிசடை திசைகள் பாய
    மாலொரு பாக மாக
    மகிழ்ந்தநெய்த் தான னாரே. 4.37.7
    371 பந்தித்த சடையின் மேலே
    பாய்புன லதனை வைத்து
    அந்திப்போ தனலு மாடி
    அடிகள்ஐ யாறு புக்கார்
    வந்திப்பார் வணங்கி நின்று
    வாழ்த்துவார் வாயி னுள்ளார்
    சிந்திப்பார் சிந்தை யுள்ளார்
    திருந்துநெய்த் தான னாரே. 4.37.8
    372 சோதியாய்ச் சுடரு மானார்
    சுண்ணவெண் சாந்து பூசி
    ஓதிவா யுலகம் ஏத்த
    உகந்துதாம் அருள்கள் செய்வார்
    ஆதியாய் அந்த மானார்
    யாவரும் இறைஞ்சி யேத்த
    நீதியாய் நியம மாகி
    நின்றநெய்த் தான னாரே. 4.37.9
    373 இலையுடைப் படைகை யேந்தும்
    இலங்கையர் மன்னன் றன்னைத்
    தலையுடன் அடர்த்து மீண்டே
    தானவற் கருள்கள் செய்து
    சிலையுடன் கணையைச் சேர்த்துத்
    திரிபுரம் எரியச் செற்ற
    நிலையுடை யடிகள் போலும்
    நின்றநெய்த் தான னாரே. 4.37.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book