MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.43 திருக்காஞ்சிமேற்றளி - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    424 மறையது பாடிப் பிச்சைக்
    கென்றகந் திரிந்து வாழ்வார்
    பிறையது சடைமு டிமேற்
    பெய்வளை யாள்தன் னோடுங்
    கறையது கண்டங் கொண்டார்
    காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
    இறையவர் பாட லாடல்
    இலங்குமேற் றளிய னாரே. 4.43.1
    425 மாலன மாயன் றன்னை
    மகிழ்ந்தனர் விருத்த ராகும்
    பாலனார் பசுப தியார்
    பால்வெள்ளை நீறு பூசிக்
    காலனைக் காலாற் செற்றார்
    காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
    ஏலநற் கடம்பன் தாதை
    இலங்குமேற் றளிய னாரே. 4.43.2
    426 விண்ணிடை விண்ண வர்கள்
    விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்
    பண்ணிடைச் சுவையின் மிக்க
    கின்னரம் பாடல் கேட்டார்
    கண்ணிடை மணியி னொப்பார்
    காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
    எண்ணிடை யெழுத்து மானார்
    இலங்குமேற் றளிய னாரே. 4.43.3
    427 சோமனை அரவி னோடு
    சூழ்தரக் கங்கை சூடும்
    வாமனை வான வர்கள்
    வலங்கொடு வந்து போற்றக்
    காமனைக் காய்ந்த கண்ணார்
    காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
    ஏமநின் றாடும் எந்தை
    இலங்குமேற் றளிய னாரே. 4.43.4
    428 ஊனவ ருயிரி னோடு
    முலகங்க ளூழி யாகித்
    தானவர் தனமு மாகித்
    தனஞ்சய னோடெ திர்ந்த
    கானவர் காள கண்டர்
    காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
    ஏனமக் கோடு பூண்டார்
    இலங்குமேற் றளிய னாரே. 4.43.5
    429 மாயனாய் மால னாகி
    மலரவ னாகி மண்ணாய்த்
    தேயமாய்த் திசையெட் டாகித்
    தீர்த்தமாய்த் திரிதர் கின்ற
    காயமாய்க் காயத் துள்ளார்
    காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
    ஏயமென் றோளி பாகர்
    இலங்குமேற் றளிய னாரே. 4.43.6
    430 மண்ணினை யுண்ட மாயன்
    தன்னையோர் பாகங் கொண்டார்
    பண்ணினைப் பாடி யாடும்
    பத்தர்கள் சித்தங் கொண்டார்
    கண்ணினை மூன்றுங் கொண்டார்
    காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
    எண்ணினை யெண்ண வைத்தார்
    இலங்குமேற் றளிய னாரே. 4.43.7
    431 செல்வியைப் பாகங் கொண்டார்
    சேந்தனை மகனாக் கொண்டார்
    மல்லிகைக் கண்ணி யோடு
    மாமலர்க் கொன்றை சூடிக்
    கல்வியைக் கரையி லாத
    காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
    எல்லியை விளங்க நின்றார்
    இலங்குமேற் றளிய னாரே. 4.43.8
    432 வேறிணை யின்றி யென்றும்
    விளங்கொளி மருங்கி னாளைக்
    கூறிய லாக வைத்தார்
    கோளரா மதியும் வைத்தார்
    ஆறினைச் சடையுள் வைத்தார்
    அணிபொழிற் கச்சி தன்னுள்
    ஏறினை யேறு மெந்தை
    இலங்குமேற் றளிய னாரே. 4.43.9
    433 தென்னவன் மலையெ டுக்கச்
    சேயிழை நடுங்கக் கண்டு
    மன்னவன் விரலா லூன்ற
    மணிமுடி நெரிய வாயாற்
    கன்னலின் கீதம் பாடக்
    கேட்டவர் காஞ்சி தன்னுள்
    இன்னவற் கருளிச் செய்தார்
    இலங்குமேற் றளிய னாரே. 4.43.10

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - திருமேற்றளிநாதர், தேவியார் - திருமேற்றளிநாயகி.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book