MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.45 திருவொற்றியூர் - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    444 வெள்ளத்தைச் சடையில் வைத்த
    வேதகீ தன்றன் பாதம்
    மெள்ளத்தான் அடைய வேண்டின்
    மெய்தரு ஞானத் தீயாற்
    கள்ளத்தைக் கழிய நின்றார்
    காயத்துக் கலந்து நின்று
    உள்ளத்துள் ஒளியு மாகும்
    ஒற்றியூ ருடைய கோவே. 4.45.1
    445 வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா
    வானவர் இறைவன் நின்று
    புசிப்பதோர் பொள்ள லாக்கை
    யதனொடும் புணர்வு வேண்டில்
    அசிர்ப்பெனும் அருந்த வத்தால்
    ஆன்மாவி னிடம தாகி
    உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார்
    ஒற்றியூ ருடைய கோவே. 4.45.2
    446 தானத்தைச் செய்து வாழ்வான்
    சலத்துளே அழுந்து கின்றீர்
    வானத்தை வணங்க வேண்டில்
    வம்மின்கள் வல்லீ ராகில்
    ஞானத்தை விளக்கை ஏற்றி
    நாடியுள் விரவ வல்லார்
    ஊனத்தை ஒழிப்பர் போலும்
    ஒற்றியூ ருடைய கோவே. 4.45.3
    447 காமத்துள் அழுந்தி நின்று
    கண்டரால் ஒறுப்புண் ணாதே
    சாமத்து வேத மாகி
    நின்றதோர் சயம்பு தன்னை
    ஏமத்தும் இடையி ராவும்
    ஏகாந்தம் இயம்பு வார்க்கு
    ஓமத்துள் ஒளிய தாகும்
    ஒற்றியூ ருடைய கோவே. 4.45.4
    448 சமையமே லாறு மாகித்
    தானொரு சயம்பு வாகி
    இமையவர் பரவி யேத்த
    இனிதினங் கிருந்த ஈசன்
    கமையினை யுடைய ராகிக்
    கழலடி பரவு வார்க்கு
    உமையொரு பாகர் போலும்
    ஒற்றியூ ருடைய கோவே. 4.45.5
    449 ஒருத்திதன் றலைச்சென் றாளைக்
    கரந்திட்டான் உலக மேத்த
    ஒருத்திக்கு நல்ல னாகி
    மறுப்படுத் தொளித்து மீண்டே
    ஒருத்தியைப் பாகம் வைத்தான்
    உணர்வினால் ஐயம் உண்ணி
    ஒருத்திக்கு நல்ல னல்லன்
    ஒற்றியூ ருடைய கோவே. 4.45.6
    450 பிணமுடை உடலுக் காகப்
    பித்தராய்த் திரிந்து நீங்கள்
    புணர்வெனும் போகம் வேண்டா
    போக்கலாம் பொய்யை நீங்க
    நிணமுடை நெஞ்சி னுள்ளால்
    நினைக்குமா நினைக்கின் றார்க்கு
    உணர்வினோ டிருப்பர் போலும்
    ஒற்றியூ ருடைய கோவே. 4.45.7
    451 பின்னுவார் சடையான் தன்னைப்
    பிதற்றிலாப் பேதை மார்கள்
    துன்னுவார் நரகந் தன்னுள்
    தொல்வினை தீர வேண்டின்
    மன்னுவான் மறைக ளோதி
    மனத்தினுள் விளக்கொன் றேற்றி
    உன்னுவார் உள்ளத் துள்ளார்
    ஒற்றியூ ருடைய கோவே. 4.45.8
    452 முள்குவார் போகம் வேண்டின்
    முயற்றியா லிடர்கள் வந்தால்
    எள்குவார் எள்கி நின்றங்
    கிதுவொரு மாய மென்பார்
    பள்குவார் பத்த ராகிப்
    பாடியு மாடி நின்று
    உள்குவார் உள்ளத் துள்ளார்
    ஒற்றியூ ருடைய கோவே. 4.45.9
    453 வெறுத்துகப் புலன்க ளைந்தும்
    வேண்டிற்று வேண்டு நெஞ்சே
    மறுத்துக ஆர்வச் செற்றக்
    குரோதங்க ளான மாயப்
    பொறுத்துகப் புட்ப கத்தேர்
    உடையானை அடர வூன்றி
    ஒறுத்துகந் தருள்கள் செய்தார்
    ஒற்றியூ ருடைய கோவே. 4.45.10

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர், தேவியார் - வடிவுடையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book