MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.47 திருக்கயிலாயம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    456 கனகமா வயிர முந்து
    மாமணிக் கயிலை கண்டும்
    உனகனா யரக்க னோடி
    யெடுத்தலு முமையா ளஞ்ச
    அனகனாய் நின்ற ஈச
    னூன்றலு மலறி வீழ்ந்தான்
    மனகனா யூன்றி னானேல்
    மறித்துநோக் கில்லை யன்றே. 4.47.1
    457 கதித்தவன் கண்சி வந்து
    கயிலைநன் மலையை யோடி
    அதிர்த்தவன் எடுத்தி டலும்
    அரிவைதான் அஞ்ச ஈசன்
    நெதித்தவ னூன்றி யிட்ட
    நிலையழிந் தலறி வீழ்ந்தான்
    மதித்திறை யூன்றி னானேல்
    மறித்துநோக் கில்லை யன்றே. 4.47.2
    458 கறுத்தவன் கண்சி வந்து
    கயிலைநன் மலையைக் கையால்
    மறித்தலும் மங்கை அஞ்ச
    வானவர் இறைவன் நக்கு
    நெறித்தொரு விரலா லூன்ற
    நெடுவரை போல வீழ்ந்தான்
    மறித்திறை யூன்றி னானேல்
    மறித்துநோக் கில்லை யன்றே. 4.47.3
    459 கடுத்தவன் கண்சி வந்து
    கயிலைநன் மலையை யோடி
    எடுத்தலும் மங்கை அஞ்ச
    இறையவ னிறையே நக்கு
    நொடிப்பள விரலா லூன்ற
    நோவது மலறி யிட்டான்
    மடித்திறை யூன்றி னானேல்
    மறித்துநோக் கில்லை யன்றே. 4.47.4
    460 கன்றித்தன் கண்சி வந்து
    கயிலைநன் மலையை யோடி
    வென்றித்தன் கைத்த லத்தா
    லெடுத்தலும் வெருவ மங்கை
    நன்றுத்தான் நக்கு நாத
    னூன்றலு நகழ வீழ்ந்தான்
    மன்றித்தான் ஊன்றி னானேல்
    மறித்துநோக் கில்லை யன்றே. 4.47.5
    461 களித்தவன் கண்சி வந்து
    கயிலைநன் மலையை யோடி
    நெளித்தவ னெடுத்தி டலும்
    நேரிழை அஞ்ச நோக்கி
    வெளித்தவ னூன்றி யிட்ட
    வெற்பினா லலறி வீழ்ந்தான்
    மளித்திறை யூன்றி னானேல்
    மறித்துநோக் கில்லை யன்றே. 4.47.6
    462 கருத்தனாய்க் கண்சி வந்து
    கயிலைநன் மலையைக் கையால்
    எருத்தனாய் எடுத்த வாறே
    ஏந்திழை அஞ்ச ஈசன்
    திருத்தனாய் நின்ற தேவன்
    திருவிர லூன்ற வீழ்ந்தான்
    வருத்துவான் ஊன்றி னானேல்
    மறித்துநோக் கில்லை யன்றே. 4.47.7
    463 கடியவன் கண்சி வந்து
    கயிலைநன் மலையை யோடி
    வடிவுடை மங்கை அஞ்ச
    எடுத்தலும் மருவ நோக்கிச்
    செடிபடத் திருவி ரலா
    லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
    வடிவுற வூன்றி னானேல்
    மறித்துநோக் கில்லை யன்றே. 4.47.8
    464 கரியத்தான் கண்சி வந்து
    கயிலைநன் மலையைப் பற்றி
    இரியத்தான் எடுத்தி டலும்
    ஏந்திழை அஞ்ச ஈசன்
    நெரியத்தான் ஊன்றா முன்னம்
    நிற்கிலா தலறி வீழ்ந்தான்
    மரியத்தான் ஊன்றி னானேல்
    மறித்துநோக் கில்லை யன்றே. 4.47.9
    465 கற்றனன் கயிலை தன்னைக்
    காண்டலும் அரக்கன் ஓடிச்
    செற்றவன் எடுத்த வாறே
    சேயிழை அஞ்ச ஈசன்
    உற்றிறை ஊன்றா முன்னம்
    உணர்வழி வகையால் வீழ்ந்தான்
    மற்றிறை ஊன்றி னானேல்
    மறித்துநோக் கில்லை யன்றே. 4.47.10

    இத்தலம் வடநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கைலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book