MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.48 திருஆப்பாடி - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    466 கடலகம் ஏழி னோடும்
    புவனமுங் கலந்த விண்ணும்
    உடலகத் துயிரும் பாரும்
    ஒள்ளழ லாகி நின்று
    தடமலர்க் கந்த மாலை
    தண்மதி பகலு மாகி
    மடலவிழ் கொன்றை சூடி
    மன்னும்ஆப் பாடி யாரே. 4.48.1
    467 ஆதியும் அறிவு மாகி
    அறிவினுட் செறிவு மாகிச்
    சோதியுட் சுடரு மாகித்
    தூநெறிக் கொருவ னாகிப்
    பாதியிற் பெண்ணு மாகிப்
    பரவுவார் பாங்க னாகி
    வேதியர் வாழுஞ் சேய்ஞல்
    விரும்பும்ஆப் பாடி யாரே. 4.48.2
    468 எண்ணுடை இருக்கு மாகி
    யிருக்கினுட் பொருளு மாகிப்
    பண்ணொடு பாடல் தன்னைப்
    பரவுவார் பாங்க னாகிக்
    கண்ணொரு நெற்றி யாகிக்
    கருதுவார் கருத லாகாப்
    பெண்ணொரு பாக மாகிப்
    பேணும்ஆப் பாடி யாரே. 4.48.3
    469 அண்டமார் அமரர் கோமான்
    ஆதியெம் அண்ணல் பாதங்
    கொண்டவன் குறிப்பி னாலே
    கூப்பினான் தாப ரத்தைக்
    கண்டவன் தாதை பாய்வான்
    காலற எறியக் கண்டு
    தண்டியார்க் கருள்கள் செய்த
    தலைவர்ஆப் பாடி யாரே. 4.48.4
    470 சிந்தையுந் தெளிவு மாகித்
    தெளிவினுட் சிவமு மாகி
    வந்தநற் பயனு மாகி
    வாணுதல் பாக மாகி
    மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த
    மண்ணித்தென் கரைமேல் மன்னி
    அந்தமோ டளவி லாத
    அடிகள்ஆப் பாடி யாரே. 4.48.5
    471 வன்னிவா ளரவு மத்தம்
    மதியமும் ஆறுஞ் சூடி
    மின்னிய உருவாஞ் சோதி
    மெய்ப்பொருட் பயனு மாகிக்
    கன்னியோர் பாக மாகிக்
    கருதுவார் கருத்து மாகி
    இன்னிசை தொண்டர் பாட
    இருந்தஆப் பாடி யாரே. 4.48.6
    472 உள்ளுமாய்ப் புறமு மாகி
    உருவுமாய் அருவு மாகி
    வெள்ளமாய்க் கரையு மாகி
    விரிகதிர் ஞாயி றாகிக்
    கள்ளமாய்க் கள்ளத் துள்ளார்
    கருத்துமாய் அருத்த மாகி
    அள்ளுவார்க் கள்ளல் செய்திட்
    டிருந்தஆப் பாடி யாரே. 4.48.7
    473 மயக்கமாய்த் தெளிவு மாகி
    மால்வரை வளியு மாகித்
    தியக்கமாய் ஒருக்க மாகிச்
    சிந்தையுள் ஒன்றி நின்று
    இயக்கமாய் இறுதி யாகி
    எண்டிசைக் கிறைவ ராகி
    அயக்கமாய் அடக்க மாய
    ஐவர்ஆப் பாடி யாரே. 4.48.8
    474 ஆரழல் உருவ மாகி
    அண்டமேழ் கடந்த எந்தை
    பேரொளி உருவி னானைப்
    பிரமனும் மாலுங் காணாச்
    சீரவை பரவி யேத்திச்
    சென்றடி வணங்கு வார்க்குப்
    பேரருள் அருளிச் செய்வார்
    பேணும்ஆப் பாடி யாரே. 4.48.9
    475 திண்டிறல் அரக்க னோடிச்
    சீகயி லாயந் தன்னை
    எண்டிறல் இலனு மாகி
    எடுத்தலும் ஏழை அஞ்ச
    விண்டிறல் நெறிய வூன்றி
    மிகக்கடுத் தலறி வீழப்
    பண்டிறல் கேட்டு கந்த
    பரமர்ஆப் பாடி யாரே. 4.48.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பாலுவந்தநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book