MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.52 திருவாரூர் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    498 படுகுழிப் பவ்வத் தன்ன
    பண்டியைப் பெய்த வாற்றாற்
    கெடுவதிம் மனிதர் வாழ்க்கை
    காண்டொறுங் கேது கின்றேன்
    முடுகுவர் இருந்துள் ஐவர்
    மூர்க்கரே இவர்க ளோடும்
    அடியனேன் வாழ மாட்டேன்
    ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.1
    499 புழுப்பெய்த பண்டி தன்னைப்
    புறமொரு தோலால் மூடி
    ஒழுக்கறா ஒன்ப துவாய்
    ஒற்றுமை யொன்று மில்லை
    சழக்குடை இதனுள் ஐவர்
    சங்கடம் பலவுஞ் செய்ய
    அழிப்பனாய் வாழ மாட்டேன்
    ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.2
    500 பஞ்சின்மெல் லடியி னார்கள்
    பாங்கரா யவர்கள் நின்று
    நெஞ்சில்நோய் பலவுஞ் செய்து
    நினையினும் நினைய வொட்டார்
    நஞ்சணி மிடற்றி னானே
    நாதனே நம்ப னேநான்
    அஞ்சினேற் கஞ்ச லென்னீர்
    ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.3
    501 கெண்டையந் தடங்கண் நல்லார்
    தம்மையே கெழும வேண்டிக்
    குண்டராய்த் திரிதந் தைவர்
    குலைத்திடர்க் குழியில் நூக்கக்
    கண்டுநான் தரிக்க கில்லேன்
    காத்துக்கொள் கறைசேர் கண்டா
    அண்டவா னவர்கள் போற்றும்
    ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.4
    502 தாழ்குழல் இன்சொல் நல்லார்
    தங்களைத் தஞ்ச மென்று
    ஏழையே னாகி நாளும்
    என்செய்கேன் எந்தை பெம்மான்
    வாழ்வதேல் அரிது போலும்
    வைகலும் ஐவர் வந்து
    ஆழ்குழிப் படுத்த வாற்றேன்
    ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.5
    503 மாற்றமொன் றருள கில்லீர்
    மதியிலேன் விதியி லாமை
    சீற்றமுந் தீர்த்தல் செய்யீர்
    சிக்கன வுடைய ராகிக்
    கூற்றம்போல் ஐவர் வந்து
    குலைத்திட்டுக் கோகு செய்ய
    ஆற்றவுங் கில்லேன் நாயேன்
    ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.6
    504 உயிர்நிலை யுடம்பே காலா
    உள்ளமே தாழி யாகத்
    துயரமே ஏற்ற மாகத்
    துன்பக்கோ லதனைப் பற்றிப்
    பயிர்தனைச் சுழிய விட்டுப்
    பாழ்க்குநீர் இறைத்து மிக்க
    அயர்வினால் ஐவர்க் காற்றேன்
    ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.7
    505 கற்றதேல் ஒன்று மில்லை
    காரிகை யாரோ டாடிப்
    பெற்றதேற் பெரிதுந் துன்பம்
    பேதையேன் பிழைப்பி னாலே
    முற்றினால் ஐவர் வந்து
    முறைமுறை துயரஞ் செய்ய
    அற்றுநான் அலந்து போனேன்
    ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.8
    506 பத்தனாய் வாழ மாட்டேன்
    பாவியேன் பரவி வந்து
    சித்தத்துள் ஐவர் தீய
    செய்வினை பலவுஞ் செய்ய
    மத்துறு தயிரே போல
    மறுகுமென் னுள்ளந் தானும்
    அத்தனே அமரர் கோவே
    ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.9
    507 தடக்கைநா லைந்துங் கொண்டு
    தடவரை தன்னைப் பற்றி
    எடுத்தவன் பேர்க்க ஓடி
    இரிந்தன பூத மெல்லாம்
    முடித்தலை யனைத்துந் தோளும்
    முறிதர இறையே யூன்றி
    அடர்த்தருள் செய்த தென்னே
    ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book