MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.55 திருவலம்புரம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    528 தெண்டிரை தேங்கி ஓதஞ்
    சென்றடி வீழுங் காலைத்
    தொண்டிரைத் தண்டர் கோனைத்
    தொழுதடி வணங்கி யெங்கும்
    வண்டுகள் மதுக்கள் மாந்தும்
    வலம்புரத் தடிகள் தம்மைக்
    கொண்டுநற் கீதம் பாடக்
    குழகர்தாம் இருந்த வாறே. 4.55.1
    529 மடுக்களில் வாளை பாய
    வண்டினம் இரிந்த பொய்கைப்
    பிடிக்களி றென்னத் தம்மிற்
    பிணைபயின் றணைவ ரால்கள்
    தொடுத்தநன் மாலை ஏந்தித்
    தொண்டர்கள் பரவி யேத்த
    வடித்தடங் கண்ணி பாகர்
    வலம்புரத் திருந்த வாறே. 4.55.2
    530 தேனுடை மலர்கள் கொண்டு
    திருந்தடி பொருந்தச் சேர்த்தி
    ஆனிடை அஞ்சுங் கொண்டு
    அன்பினால் அமர வாட்டி
    வானிடை மதியஞ் சூடும்
    வலம்புரத் தடிகள் தம்மை
    நானடைந் தேத்தப் பெற்று
    நல்வினைப் பயனுற் றேனே. 4.55.3
    531 முளைஎயிற் றிளநல் ஏனம்
    பூண்டுமொய் சடைகள் தாழ
    வளைஎயிற் றிளைய நாகம்
    வலித்தரை யிசைய வீக்கிப்
    புளைகைய போர்வை போர்த்துப்
    புனலொடு மதியஞ் சூடி
    வளைபயில் இளைய ரேத்தும்
    வலம்புரத் தடிகள் தாமே. 4.55.4
    532 சுருளுறு வரையின் மேலாற்
    றுளங்கிளம் பளிங்கு சிந்த
    இருளுறு கதிர்நு ழைந்த
    இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
    அருளுறும் அடிய ரெல்லாம்
    அங்கையின் மலர்கள் ஏந்த
    மருளுறு கீதங் கேட்டார்
    வலம்புரத் தடிக ளாரே. 4.55.5
    533 நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால்
    நீண்டபுன் சடையி னானே
    அனைத்துடன் கொண்டு வந்தங்
    கன்பினால் அமைய வாட்டிப்
    புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை
    மெய்ம்மையைப் புணர மாட்டேன்
    எனக்குநான் செய்வ தென்னே
    இனிவலம் புரவ னீரே. 4.55.6
    534 செங்கயல் சேல்கள் பாய்ந்து
    தேம்பழ மினிய நாடித்
    தங்கயந் துறந்து போந்து
    தடம்பொய்கை அடைந்து நின்று
    கொங்கையர் குடையுங் காலைக்
    கொழுங்கனி யழுங்கி னாராம்
    மங்கல மனையின் மிக்கார்
    வலம்புரத் தடிக ளாரே. 4.55.7
    535 அருகெலாங் குவளை செந்நெல்
    அகவிலை யாம்பல் நெய்தல்
    தெருவெலாந் தெங்கு மாவும்
    பழம்விழும் படப்பை யெல்லாங்
    குருகினங் கூடி யாங்கே
    கும்மலித் திறகு லர்த்தி
    மருவலா மிடங்கள் காட்டும்
    வலம்புரத் தடிக ளாரே. 4.55.8
    536 கருவரை யனைய மேனிக்
    கடல்வண்ண னவனுங் காணான்
    திருவரை யனைய பூமேல்
    திசைமுக னவனுங் காணான்
    ஒருவரை உச்சி ஏறி
    ஓங்கினார் ஓங்கி வந்து
    அருமையில் எளிமை யானார்
    அவர்வலம் புரவ னாரே. 4.55.9
    537 வாளெயி றிலங்க நக்கு
    வளர்கயி லாயந் தன்னை
    ஆள்வலி கருதிச் சென்ற
    அரக்கனை வரைக்கீ ழன்று
    தோளொடு பத்து வாயுந்
    தொலைந்துடன் அழுந்த வூன்றி
    ஆண்மையும் வலியுந் தீர்ப்பார்
    அவர்வலம் புரவ னாரே. 4.55.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book