MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.58 திருப்பருப்பதம் - திருநேரிசை
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    558 கன்றினார் புரங்கள் மூன்றுங்
    கனலெரி யாகச் சீறி
    நின்றதோ ருருவந் தன்னால்
    நீர்மையும் நிறையுங் கொண்டு
    ஒன்றியாங் குமையுந் தாமும்
    ஊர்பலி தேர்ந்து பின்னும்
    பன்றிப்பின் வேட ராகிப்
    பருப்பத நோக்கி னாரே. 4.58.1
    559 கற்றமா மறைகள் பாடிக்
    கடைதொறும் பலியுந் தேர்வார்
    வற்றலோர் தலைகை யேந்தி
    வானவர் வணங்கி வாழ்த்த
    முற்றவோர் சடையில் நீரை
    ஏற்றமுக் கண்ணர் தம்மைப்
    பற்றினார்க் கருள்கள் செய்து
    பருப்பத நோக்கி னாரே. 4.58.2
    560 கரவிலா மனத்த ராகிக்
    கைதொழு வார்கட் கென்றும்
    இரவினின் றெரிய தாடி
    இன்னருள் செய்யும் எந்தை
    மருவலார் புரங்கள் மூன்று
    மாட்டிய நகைய ராகிப்
    பரவுவார்க் கருள்கள் செய்து
    பருப்பத நோக்கி னாரே. 4.58.3
    561 கட்டிட்ட தலைகை யேந்திக்
    கனலெரி யாடிச் சீறிச்
    சுட்டிட்ட நீறு பூசிச்
    சுடுபிணக் காட ராகி
    விட்டிட்ட வேட்கை யார்க்கு
    வேறிருந் தருள்கள் செய்து
    பட்டிட்ட வுடைய ராகிப்
    பருப்பத நோக்கி னாரே. 4.58.4
    562 கையராய்க் கபால மேந்திக்
    காமனைக் கண்ணாற் காய்ந்து
    மெய்யராய் மேனி தன்மேல்
    விளங்குவெண் ணீறு பூசி
    உய்யரா யுள்கு வார்கட்
    குவகைகள் பலவுஞ் செய்து
    பையரா அரையி லார்த்துப்
    பருப்பத நோக்கி னாரே. 4.58.5
    563 வேடராய் வெய்ய ராகி
    வேழத்தி னுரிவை போர்த்து
    ஓடரா யுலக மெல்லா
    முழிதர்வர் உமையுந் தாமுங்
    காடராய்க் கனல்கை யேந்திக்
    கடியதோர் விடைமேற் கொண்டு
    பாடராய்ப் பூதஞ் சூழப்
    பருப்பத நோக்கி னாரே. 4.58.6
    564 மேகம்போல் மிடற்ற ராகி
    வேழத்தி னுரிவை போர்த்து
    ஏகம்பம் மேவி னார்தாம்
    இமையவர் பரவி யேத்தக்
    காகம்பர் கழற ராகிக்
    கடியதோர் விடையொன் றேறிப்
    பாகம்பெண் ணுருவ மானார்
    பருப்பத நோக்கி னாரே. 4.58.7
    565 பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும்
    பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
    காருடைக் கண்ட ராகிக்
    கபாலமோர் கையி லேந்திச்
    சீருடைச் செங்கண் வெள்ளே
    றேறிய செல்வர் நல்ல
    பாரிடம் பாணி செய்யப்
    பருப்பத நோக்கி னாரே. 4.58.8
    566 அங்கண்மா லுடைய ராய
    ஐவரா லாட்டு ணாதே
    உங்கள்மால் தீர வேண்டில்
    உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
    செங்கண்மால் பரவி யேத்திச்
    சிவனென நின்ற செல்வர்
    பைங்கண்வெள் ளேற தேறிப்
    பருப்பத நோக்கி னாரே. 4.58.9
    567 அடல்விடை யூர்தி யாகி
    அரக்கன்றோள் அடர வூன்றிக்
    கடலிடை நஞ்ச முண்ட
    கறையணி கண்ட னார்தாஞ்
    சுடர்விடு மேனி தன்மேற்
    சுண்ணவெண் ணீறு பூசிப்
    படர்சடை மதியஞ் சேர்த்திப்
    பருப்பத நோக்கி னாரே. 4.58.10

    இத்தலம் வடநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - மனோன்மணியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book