MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.67 திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    649 வரைகிலேன் புலன்க ளைந்தும்
    வரைகிலாப் பிறவி மாயப்
    புரையிலே அடங்கி நின்று
    புறப்படும் வழியுங் காணேன்
    அரையிலே மிளிரு நாகத்
    தண்ணலே அஞ்ச லென்னாய்
    திரையுலாம் பழன வேலித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.1
    650 தொண்டனேன் பிறந்து வாளா
    தொல்வினைக் குழியில் வீழ்ந்து
    பிண்டமே சுமந்து நைந்து
    பேர்வதோர் வழியுங் காணேன்
    அண்டனே அண்ட வாணா
    அறிவனே அஞ்ச லென்னாய்
    தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.2
    651 கால்கொடுத் தெலும்பு மூட்டிக்
    கதிர்நரம் பாக்கை யார்த்துத்
    தோலுடுத் துதிர மட்டித்
    தொகுமயிர் மேய்ந்த கூரை
    ஓலெடுத் துழைஞர் கூடி
    ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
    சேலுடைப் பழனஞ் சூழ்ந்த
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.3
    652 கூட்டமாய் ஐவர் வந்து
    கொடுந்தொழிற் குணத்த ராகி
    ஆட்டுவார்க் காற்ற கில்லேன்
    ஆடர வசைத்த கோவே
    காட்டிடை யரங்க மாக
    ஆடிய கடவு ளேயோ
    சேட்டிரும் பழன வேலித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.4
    653 பொக்கமாய் நின்ற பொல்லாப்
    புழுமிடை முடைகொள் ஆக்கை
    தொக்குநின் றைவர் தொண்ணூற்
    றறுவருந் துயக்க மெய்த
    மிக்குநின் றிவர்கள் செய்யும்
    வேதனைக் கலந்து போனேன்
    செக்கரே திகழும் மேனித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.5
    654 ஊனுலா முடைகொள் ஆக்கை
    உடைகல மாவ தென்றும்
    மானுலா மழைக்க ணார்தம்
    வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
    நானெலா மினைய கால
    நண்ணிலேன் எண்ண மில்லேன்
    தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.6
    655 சாணிரு மடங்கு நீண்ட
    சழக்குடைப் பதிக்கு நாதர்
    வாணிகர் ஐவர் தொண்ணூற்
    றறுவரும் மயக்கஞ் செய்து
    பேணிய பதியின் நின்று
    பெயரும்போ தறிய மாட்டேன்
    சேணுயர் மாட நீடு
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.7
    656 பொய்மறித் தியற்றி வைத்துப்
    புலால்கமழ் பண்டம் பெய்து
    பைமறித் தியற்றி யன்ன
    பாங்கிலாக் குரம்பை நின்று
    கைமறித் தனைய வாவி
    கழியும்போ தறிய மாட்டேன்
    சென்னெறிச் செலவு காணேன்
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.8
    657 பாலனாய்க் கழிந்த நாளும்
    பனிமலர்க் கோதை மார்தம்
    மேலனாய்க் கழிந்த நாளும்
    மெலிவொடு மூப்பு வந்து
    கோலனாய்க் கழிந்த நாளுங்
    குறிக்கோளி லாது கெட்டேன்
    சேலுலாம் பழன வேலித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.9
    658 விரைதரு கருமென் கூந்தல்
    விளங்கிழை வேலொண் கண்ணாள்
    வெருவர இலங்கைக் கோமான்
    விலங்கலை எடுத்த ஞான்று
    பருவரை யனைய தோளும்
    முடிகளும் பாரி வீழத்
    திருவிர லூன்றி னானே
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book