MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.73 திருச்சேறை - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    707 பெருந்திரு இமவான் பெற்ற
    பெண்கொடி பிரிந்த பின்னை
    வருந்துவான் தவங்கள் செய்ய
    மாமணம் புணர்ந்து மன்னும்
    அருந்திரு மேனி தன்பால்
    அங்கொரு பாக மாகத்
    திருந்திட வைத்தார் சேறைச்
    செந்நெறிச் செல்வ னாரே. 4.73.1
    708 ஓர்த்துள வாறு நோக்கி
    உண்மையை உணராக் குண்டர்
    வார்த்தையை மெய்யென் றெண்ணி
    மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
    பேர்த்தெனை ஆளாக் கொண்டு
    பிறவிவான் பிணிக ளெல்லாந்
    தீர்த்தருள் செய்தார் சேறைச்
    செந்நெறிச் செல்வ னாரே. 4.73.2
    709 ஒன்றிய தவத்து மன்னி
    உடையனாய் உலப்பில் காலம்
    நின்றுதங் கழல்க ளேத்தும்
    நீள்சிலை விசய னுக்கு
    வென்றிகொள் வேட னாகி
    விரும்பிவெங் கான கத்துச்
    சென்றருள் செய்தார் சேறைச்
    செந்நெறிச் செல்வ னாரே. 4.73.3
    710 அஞ்சையும் அடக்கி ஆற்ற
    லுடையனாய் அநேக காலம்
    வஞ்சமில் தவத்துள் நின்று
    மன்னிய பகீர தற்கு
    வெஞ்சின முகங்க ளாகி
    விசையொடு பாயுங் கங்கைச்
    செஞ்சடை யேற்றார் சேறைச்
    செந்நெறிச் செல்வ னாரே. 4.73.4
    711 நிறைந்தமா மணலைக் கூப்பி
    நேசமோ டாவின் பாலைக்
    கறந்துகொண் டாட்டக் கண்டு
    கறுத்ததன் தாதை தாளை
    எறிந்தமா ணிக்கப் போதே
    எழில்கொள்சண் டீசன் என்னச்
    சிறந்தபே றளித்தார் சேறைச்
    செந்நெறிச் செல்வ னாரே. 4.73.5
    712 விரித்தபல் கதிர்கொள் சூலம்
    வெடிபடு தமரு கங்கை
    தரித்ததோர் கோல காலப்
    பயிரவ னாகி வேழம்
    உரித்துமை யஞ்சக் கண்டு
    ஒண்டிரு மணிவாய் விள்ளச்
    சிரித்தருள் செய்தார் சேறைச்
    செந்நெறிச் செல்வ னாரே. 4.73.6
    713 சுற்றுமுன் இமையோர் நின்று
    தொழுதுதூ மலர்கள் தூவி
    மற்றெமை உயக்கொள் என்ன
    மன்னுவான் புரங்கள் மூன்றும்
    உற்றொரு நொடியின் முன்னம்
    ஒள்ளழல் வாயின் வீழச்
    செற்றருள் செய்தார் சேறைச்
    செந்நெறிச் செல்வ னாரே. 4.73.7
    714 முந்தியிவ் வுலக மெல்லாம்
    படைத்தவன் மாலி னோடும்
    எந்தனி நாத னேயென்
    றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
    அந்தமில் சோதி தன்னை
    அடிமுடி யறியா வண்ணஞ்
    செந்தழ லானார் சேறைச்
    செந்நெறிச் செல்வ னாரே. 4.73.8
    இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 4.73.9
    715 ஒருவரும் நிக ரிலாத
    ஒண்டிறல் அரக்கன் ஓடிப்
    பெருவரை யெடுத்த திண்டோ ள்
    பிறங்கிய முடிகள் இற்று
    மருவியெம் பெருமா னென்ன
    மலரடி மெள்ள வாங்கித்
    திருவருள் செய்தார் சேறைச்
    செந்நெறிச் செல்வ னாரே. 4.73.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சென்னெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book