MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.74 நெஞ்சம்ஈசனைநினைந்த - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    716 முத்தினை மணியைப் பொன்னை
    முழுமுதற் பவள மேய்க்குங்
    கொத்தினை வயிர மாலைக்
    கொழுந்தினை அமரர் சூடும்
    வித்தினை வேத வேள்விக்
    கேள்வியை விளங்க நின்ற
    அத்தனை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே. 4.74.1
    717 முன்பனை யுலகுக் கெல்லாம்
    மூர்த்தியை முனிக ளேத்தும்
    இன்பனை இலங்கு சோதி
    இறைவனை அரிவை யஞ்ச
    வன்பனைத் தடக்கை வேள்விக்
    களிற்றினை யுரித்த எங்கள்
    அன்பனை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே. 4.74.2
    718 கரும்பினு மினியான் றன்னைக்
    காய்கதிர்ச் சோதி யானை
    இருங்கட லமுதந் தன்னை
    இறப்பொடு பிறப் பிலானைப்
    பெரும்பொருட் கிளவி யானைப்
    பெருந்தவ முனிவ ரேத்தும்
    அரும்பொனை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே. 4.74.3
    719 செருத்தனை யருத்தி செய்து
    செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
    கருத்தனைக் கனக மேனிக்
    கடவுளைக் கருதும் வானோர்க்
    கொருத்தனை யொருத்தி பாகம்
    பொருத்தியும் அருத்தி தீரா
    நிருத்தனை நினைந்த நெஞ்சம்
    நேர்பட நினைந்த வாறே. 4.74.4
    720 கூற்றினை யுதைத்த பாதக்
    குழகனை மழலை வெள்ளே
    றேற்றனை இமையோ ரேத்த
    இருஞ்சடைக் கற்றை தன்மேல்
    ஆற்றனை அடிய ரேத்தும்
    அமுதனை அமுத யோக
    நீற்றனை நினைந்த நெஞ்சம்
    நேர்பட நினைந்த வாறே. 4.74.5
    721 கருப்பனைத் தடக்கை வேழக்
    களிற்றினை யுரித்த கண்டன்
    விருப்பனை விளங்கு சோதி
    வியன்கயி லாய மென்னும்
    பொருப்பனைப் பொருப்பன் மங்கை
    பங்கனை அங்கை யேற்ற
    நெருப்பனை நினைந்த நெஞ்சம்
    நேர்பட நினைந்த வாறே. 4.74.6
    722 நீதியால் நினைப்பு ளானை
    நினைப்பவர் மனத்து ளானைச்
    சாதியைச் சங்க வெண்ணீற்
    றண்ணலை விண்ணில் வானோர்
    சோதியைத் துளக்க மில்லா
    விளக்கினை அளக்க லாகா
    ஆதியை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே. 4.74.7
    723 பழகனை யுலகுக் கெல்லாம்
    பருப்பனைப் பொருப்போ டொக்கும்
    மழகளி யானை யின்றோல்
    மலைமகள் நடுங்கப் போர்த்த
    குழகனைக் குழவித் திங்கள்
    குளிர்சடை மருவ வைத்த
    அழகனை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே. 4.74.8
    724 விண்ணிடை மின்னொப் பானை
    மெய்ப்பெரும் பொருளொப் பானைக்
    கண்ணிடை மணியொப் பானைக்
    கடுவிருட் சுடரொப் பானை
    எண்ணிடை யெண்ண லாகா
    இருவரை வெருவ நீண்ட
    அண்ணலை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே. 4.74.9
    725 உரவனைத் திரண்ட திண்டோ ள்
    அரக்கனை யூன்றி மூன்றூர்
    நிரவனை நிமிர்ந்த சோதி
    நீண்முடி யமரர் தங்கள்
    குரவனைக் குளிர்வெண் டிங்கள்
    சடையிடைப் பொதியும் ஐவாய்
    அரவனை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே. 4.74.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book