MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.76 தனித் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    736 மருளவா மனத்த னாகி
    மயங்கினேன் மதியி லாதேன்
    இருளவா அறுக்கும் எந்தை
    இணையடி நீழ லென்னும்
    அருளவாப் பெறுத லின்றி
    அஞ்சிநான் அலமந் தேற்குப்
    பொருளவாத் தந்த வாறே
    போதுபோய்ப் புலர்ந்த தன்றே. 4.76.1
    737 மெய்ம்மையாம் உழவைச் செய்து
    விருப்பெனும் வித்தை வித்திப்
    பொய்ம்மையாங் களையை வாங்கிப்
    பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
    தம்மையும் நோக்கிக் கண்டு
    தகவெனும் வேலி யிட்டுச்
    செம்மையுள் நிற்ப ராகிற்
    சிவகதி விளையு மன்றே. 4.76.2
    738 எம்பிரான் என்ற தேகொண்
    டென்னுளே புகுந்து நின்றிங்
    கெம்பிரான் ஆட்ட ஆடி
    என்னுளே உழிதர் வேனை
    எம்பிரான் என்னைப் பின்னைத்
    தன்னுளே கரக்கு மென்றால்
    எம்பிரான் என்னி னல்லால்
    என்செய்கேன் ஏழை யேனே. 4.76.3
    739 காயமே கோயி லாகக்
    கடிமனம் அடிமை யாக
    வாய்மையே தூய்மை யாக
    மனமணி இலிங்க மாக
    நேயமே நெய்யும் பாலா
    நிறையநீர் அமைய வாட்டிப்
    பூசனை ஈச னார்க்குப்
    போற்றவிக் காட்டி னோமே. 4.76.4
    740 வஞ்சகப் புலைய னேனை
    வழியறத் தொண்டிற் பூட்டி
    அஞ்சலென் றாண்டு கொண்டாய்
    அதுவுநின் பெருமை யன்றே
    நெஞ்சகங் கனிய மாட்டேன்
    நின்னையுள் வைக்க மாட்டேன்
    நஞ்சிடங் கொண்ட கண்டா
    என்னென நன்மை தானே. 4.76.5
    741 நாயினுங் கடைப்பட் டேனை
    நன்னெறி காட்டி ஆண்டாய்
    ஆயிரம் அரவ மார்த்த
    அமுதனே அமுத மொத்து
    நீயுமென் னெஞ்சி னுள்ளே
    நிலாவினாய் நிலாவி நிற்க
    நோயவை சாரு மாகில்
    நோக்கிநீ அருள்செய் வாயே. 4.76.6
    742 விள்ளத்தா னொன்று மாட்டேன்
    விருப்பெனும் வேட்கை யாலே
    வள்ளத்தேன் போல நுன்னை
    வாய்மடுத் துண்டி டாமே
    உள்ளத்தே நிற்றி யேனும்
    உயிர்ப்புளே வருதி யேனுங்
    கள்ளத்தே நிற்றி அம்மா
    எங்ஙனங் காணு மாறே. 4.76.7
    743 ஆசைவன் பாச மெய்தி
    அங்குற்றே னிங்குற் றேனாய்
    ஊசலாட் டுண்டு வாளா
    உழந்துநான் உழித ராமே
    தேசனே தேச மூர்த்தி
    திருமறைக் காடு மேய
    ஈசனே உன்றன் பாதம்
    ஏத்துமா றருளெம் மானே. 4.76.8
    744 நிறைவிலேன் நேச மில்லேன்
    நினைவிலேன் வினையின் பாச
    மறைவிலே புறப்பட் டேறும்
    வகையெனக் கருளெ னெம்மான்
    சிறையிலேன் செய்வ தென்னே
    திருவடி பரவி யேத்தக்
    குறைவிலேன் குற்றந் தீராய்
    கொன்றைசேர் சடையி னானே. 4.76.9
    745 நடுவிலாக் காலன் வந்து
    நணுகும்போ தறிய வொண்ணா
    அடுவன அஞ்சு பூதம்
    அவைதமக் காற்ற லாகேன்
    படுவன பலவுங் குற்றம்
    பாங்கிலா மனிதர் வாழ்க்கை
    கெடுவதிப் பிறவி சீசீ
    கிளரொளிச் சடையி னீரே. 4.76.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book