MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.78 குறைந்த - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    754 வென்றிலேன் புலன்க ளைந்தும்
    வென்றவர் வளாகந் தன்னுள்
    சென்றிலே னாத லாலே
    செந்நெறி யதற்குஞ் சேயேன்
    நின்றுளே துளும்பு கின்றேன்
    நீசனேன் ஈச னேயோ
    இன்றுளேன் நாளை யில்லேன்
    என்செய்வான் தோன்றி னேனே. 4.78.1
    755 கற்றிலேன் கலைகள் ஞானங்
    கற்றவர் தங்க ளோடும்
    உற்றிலே னாத லாலே
    உணர்வுக்குஞ் சேய னானேன்
    பெற்றிலேன் பெருந்த டங்கண்
    பேதைமார் தமக்கும் பொல்லேன்
    எற்றுளேன் இறைவ னேநான்
    என்செய்வான் தோன்றி னேனே. 4.78.2
    756 மாட்டினேன் மனத்தை முன்னே
    மறுமையை உணர மாட்டேன்
    மூட்டிநான் முன்னை நாளே
    முதல்வனை வணங்க மாட்டேன்
    பாட்டினாய் போல நின்று
    பற்றதாம் பாவந் தன்னை
    ஈட்டினேன் களைய மாட்டேன்
    என்செய்வான் தோன்றி னேனே. 4.78.3
    757 கரைக்கடந் தோத மேறுங்
    கடல்விட முண்ட கண்டன்
    உரைக்கடந் தோது நீர்மை
    யுணர்ந்திலே னாத லாலே
    அரைக்கிடந் தசையு நாகம்
    அசைப்பனே இன்ப வாழ்க்கைக்
    கிரைக்கிடைந் துருகு கின்றேன்
    என்செய்வான் தோன்றி னேனே. 4.78.4
    758 செம்மைவெண் ணீறு பூசுஞ்
    ச்஢வனவன் தேவ தேவன்
    வெம்மைநோய் வினைகள் தீர்க்கும்
    விகிர்தனுக் கார்வ மெய்தி
    அம்மைநின் றடிமை செய்யா
    வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
    கிம்மைநின் றுருகு கின்றேன்
    என்செய்வான் தோன்றி னேனே. 4.78.5
    759 பேச்சொடு பேச்சுக் கெல்லாம்
    பிறர்தமைப் புறமே பேசக்
    கூச்சிலே னாத லாலே
    கொடுமையை விடுமா றோரேன்
    நாச்சொலி நாளும் மூர்த்தி
    நன்மையை யுணர மாட்டேன்
    ஏச்சுளே நின்று மெய்யே
    என்செய்வான் தோன்றி னேனே. 4.78.6
    760 தேசனைத் தேச மாகுந்
    திருமாலோர் பங்கன் றன்னைப்
    பூசனைப் புனிதன் றன்னைப்
    புணரும்புண் டரிகத் தானை
    நேசனை நெருப்பன் றன்னை
    நிவஞ்சகத் தகன்ற செம்மை
    ஈசனை அறிய மாட்டேன்
    என்செய்வான் தோன்றி னேனே. 4.78.7
    761 விளைக்கின்ற வினையை நோக்கி
    வெண்மயிர் விரவி மேலும்
    முளைக்கின்ற வினையைப் போக
    முயல்கிலேன் இயல வெள்ளந்
    திளைக்கின்ற முடியி னான்றன்
    திருவடி பரவ மாட்டா
    திளைக்கின்றே னிருமி யூன்றி
    என்செய்வான் தோன்றி னேனே. 4.78.8
    762 விளைவறி விலாமை யாலே
    வேதனைக் குழியி லாழ்ந்து
    களைகணு மில்லேன் எந்தாய்
    காமரங் கற்று மில்லேன்
    தளையவிழ் கோதை நல்லார்
    தங்களோ டின்ப மெய்த
    இளையனு மல்லேன் எந்தாய்
    என்செய்வான் தோன்றி னேனே. 4.78.9
    763 வெட்டன வுடைய னாகி
    வீரத்தால் மலை யெடுத்த
    துட்டனைத் துட்டுத் தீர்த்துச்
    சுவைப்படக் கீதங் கேட்ட
    அட்டமா மூர்த்தி யாய
    ஆதியை ஓதி நாளும்
    எட்டனை எட்ட மாட்டேன்
    என்செய்வான் தோன்றி னேனே. 4.78.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book