MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.87 திருப்பழனம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    833 மேவித்து நின்று விளைந்தன
    வெந்துயர் துக்கமெல்லாம்
    ஆவித்து நின்று கழிந்தன
    அல்லல் அவையறுப்பான்
    பாவித்த பாவனை நீயறி
    வாய்பழ னத்தரசே
    கூவித்துக் கொள்ளுந் தனையடி
    யேனைக் குறிக்கொள்வதே. 4.87.1
    834 சுற்றிநின் றார்புறங் காவ
    லமரர் கடைத்தலையில்
    மற்றுநின் றார்திரு மாலொடு
    நான்முகன் வந்தடிக்கீழ்ப்
    பற்றிநின் றார்பழ னத்தர
    சேயுன் பணியறிவான்
    உற்றுநின் றாரடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே. 4.87.2
    835 ஆடிநின் றாயண்டம் ஏழுங்
    கடந்துபோய் மேலவையுங்
    கூடிநின் றாய்குவி மென்முலை
    யாளையுங் கொண்டுடனே
    பாடிநின் றாய்பழ னத்தர
    சேயங்கோர் பால்மதியஞ்
    சூடிநின் றாயடி யேனையஞ்
    சாமைக் குறிக்கொள்வதே. 4.87.3
    836 எரித்துவிட் டாய்அம்பி னாற்புர
    மூன்றுமுன் னேபடவும்
    உரித்துவிட் டாய்உமை யாள்நடுக்
    கெய்தவோர் குஞ்சரத்தைப்
    பரித்துவிட் டாய்பழ னத்தர
    சேகங்கை வார்சடைமேற்
    தரித்துவிட் டாயடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே. 4.87.4
    837 முன்னியும் முன்னி முளைத்தன
    மூவெயி லும்முடனே
    மன்னியு மங்கும் இருந்தனை
    மாய மனத்தவர்கள்
    பன்னிய நூலின் பரிசறி
    வாய்பழ னத்தரசே
    உன்னியும் உன்னடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே. 4.87.5
    838 ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந்
    தேபடைத் தான்றலையைக்
    காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று
    காமனைக் காலனையும்
    பாய்ந்தறுத் தாய்பழ னத்தர
    சேயென் பழவினைநோய்
    ஆய்ந்தறுத் தாயடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே. 4.87.6
    839 மற்றுவைத் தாயங்கோர் மாலொரு
    பாகம் மகிழ்ந்துடனே
    உற்றுவைத் தாய்உமை யாளொடுங்
    கூடும் பரிசெனவே
    பற்றிவைத் தாய்பழ னத்தர
    சேயங்கோர் பாம்பொருகை
    சுற்றிவைத் தாய்அடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே. 4.87.7
    840 ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண்
    டாரையும் ஒள்ளழலாற்
    போரினின் றாய்பொறை யாயுயி
    ராவி சுமந்துகொண்டு
    பாரிநின் றாய்பழ னத்தர
    சேபணி செய்பவர்கட்
    காரநின் றாய்அடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே. 4.87.8
    841 போகம்வைத் தாய்புரி புன்சடை
    மேலோர் புனலதனை
    ஆகம்வைத் தாய்மலை யான்மட
    மங்கை மகிழ்ந்துடனே
    பாகம்வைத் தாய்பழ னத்தர
    சேயுன் பணியருளால்
    ஆகம்வைத் தாய்அடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே. 4.87.9
    842 அடுத்திருந் தாய்அரக் கன்முடி
    வாயொடு தோள்நெரியக்
    கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி
    யைக்கிளை யோடுடனே
    படுத்திருந் தாய்பழ னத்தர
    சேபுலி யின்னுரிதோல்
    உடுத்திருந் தாய்அடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே. 4.87.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book