MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.89 திருநெய்த்தானம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    853 பாரிடஞ் சாடிய பல்லுயிர்
    வானம ரர்க்கருளிக்
    காரடைந் தகடல் வாயுமிழ்
    நஞ்சமு தாகவுண்டான்
    ஊரடைந் திவ்வுல கிற்பலி
    கொள்வது நாமறியோம்
    நீரடைந் தகரை நின்றநெய்த்
    தானத் திருந்தவனே. 4.89.1
    854 தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி
    யாய்நின் திருச்சடைமேற்
    பாய்ந்தகங் கைப்புனற் பன்முக
    மாகிப் பரந்தொலிப்ப
    ஆய்ந்திலங் கும்மழு வேலுடை
    யாயடி யேற்குரைநீ
    ஏந்திள மங்கையும் நீயும்நெய்த்
    தானத் திருந்ததுவே. 4.89.2
    855 கொன்றடைந் தாடிக் குமைத்திடுங்
    கூற்றமொன் னார்மதின்மேற்
    சென்றடைந் தாடிப் பொருததுந்
    தேசமெல் லாமறியுங்
    குன்றடைந் தாடுங் குளிர்பொழிற்
    காவிரி யின்கரைமேற்
    சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த்
    தானத் திருந்தவனே. 4.89.3
    856 கொட்டு முழவர வத்தொடு
    கோலம் பலஅணிந்து
    நட்டம் பலபயின் றாடுவர்
    நாகம் அரைக் கசைத்துச்
    சிட்டர் திரிபுரந் தீயெழச்
    செற்ற சிலையுடையான்
    இட்ட முமையொடு நின்றநெய்த்
    தானத் திருந்தவனே. 4.89.4
    857 கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி
    மத்தமுங் கூவிளமும்
    மெய்மலர் வேய்ந்த விரிசடைக்
    கற்றைவிண் ணோர்பெருமான்
    மைமலர் நீல நிறங்கருங்
    கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
    நின்மல னாடல் நிலயநெய்த்
    தானத் திருந்தவனே. 4.89.5
    858 பூந்தார் நறுங்கொன்றை மாலையை
    வாங்கிச் சடைக்கணிந்து
    கூர்ந்தார் விடையினை யேறிப்பல்
    பூதப் படைநடுவே
    போந்தார் புறவிசை பாடவும்
    ஆடவுங் கேட்டருளிச்
    சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த்
    தானத் திருந்தவனே. 4.89.6
    859 பற்றின பாம்பன் படுத்த
    புலியுரித் தோலுடையன்
    முற்றின மூன்று மதில்களை
    மூட்டி யெரித்தறுத்தான்
    சுற்றிய பூதப் படையினன்
    சூல மழுவொருமான்
    செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த்
    தானத் திருந்தவனே. 4.89.7
    860 விரித்த சடையினன் விண்ணவர்
    கோன்விட முண்டகண்டன்
    உரித்த கரியுரி மூடியொன்
    னார்மதில் மூன்றுடனே
    எரித்த சிலையினன் ஈடழியா
    தென்னை ஆண்டுகொண்ட
    தரித்த உமையவ ளோடுநெய்த்
    தானத் திருந்தவனே. 4.89.8
    861 தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை
    துன்னிய செஞ்சடைமேல்
    வாங்கா மதியமும் வாளர
    வுங்கங்கை தான்புனைந்தான்
    தேங்கார் திரிபுரந் தீயெழ
    வெய்து தியக்கறுத்து
    நீங்கான் உமையவ ளோடுநெய்த்
    தானத் திருந்தவனே. 4.89.9
    862 ஊட்டிநின் றான்பொரு வானில
    மும்மதில் தீயம்பினால்
    மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து
    வீழவும் வானவர்க்குக்
    காட்டிநின் றான்கத மாக்கங்கை
    பாயவோர் வார்சடையை
    நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த்
    தானத் திருந்தவனே. 4.89.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book