MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.94 திருக்கண்டியூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    903 வானவர் தானவர் வைகல்
    மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
    தானவர் மால்பிர மன்னறி
    யாத தகைமையினான்
    ஆனவ னாதிபு ராணனன்
    றோடிய பன்றியெய்த
    கானவ னைக்கண்டி யூரண்ட
    வாணர் தொழுகின்றதே. 4.94.1
    904 வான மதியமும் வாளர
    வும்புன லோடுசடைத்
    தான மதுவென வைத்துழல்
    வான்றழல் போலுருவன்
    கான மறியொன்று கையுடை
    யான்கண்டி யூரிருந்த
    ஊனமில் வேத முடையானை
    நாமடி யுள்குவதே. 4.94.2
    905 பண்டங் கறுத்ததோர் கையுடை
    யான்படைத் தான்றலையை
    உண்டங் கறுத்ததும் ஊரொடு
    நாடவை தானறியுங்
    கண்டங் கறுத்த மிடறுடை
    யான்கண்டி யூரிருந்த
    தொண்டர் பிரானைக்கண் டீரண்ட
    வாணர் தொழுகின்றதே. 4.94.3
    906 முடியின்முற் றாததொன் றில்லையெல்
    லாமுடன் தானுடையான்
    கொடியுமுற் றவ்விடை யேறியோர்
    கூற்றொரு பாலுடையான்
    கடியமுற் றவ்வினை நோய்களை
    வான்கண்டி யூரிருந்தான்
    அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண்
    டீரண்ட வானவரே. 4.94.4
    907 பற்றியோ ரானை யுரித்த
    பிரான்பவ ளத்திரள்போல்
    முற்றும் அணிந்ததோர் நீறுடை
    யான்முன்ன மேகொடுத்த
    கற்றங் குடையவன் றானறி
    யான்கண்டி யூரிருந்த
    குற்றமில் வேத முடையானை
    யாமண்டர் கூறுவதே. 4.94.5
    908 போர்ப்பனை யானை யுரித்த
    பிரான்பொறி வாயரவஞ்
    சேர்ப்பது வானத் திரைகடல்
    சூழுல கம்மிதனைக்
    காப்பது காரண மாகக்கொண்
    டான்கண்டி யூரிருந்த
    கூர்ப்புடை ஒள்வாள் மழுவனை
    யாமண்டர் கூறுவதே. 4.94.6
    909 அட்டது காலனை ஆய்ந்தது
    வேதமா றங்கமன்று
    சுட்டது காமனைக் கண்ணத
    னாலே தொடர்ந்தெரியக்
    கட்டவை மூன்று மெரித்த
    பிரான்கண்டி யூரிருந்த
    குட்டமுன் வேதப் படையனை
    யாமண்டர் கூறுவதே. 4.94.7
    910 அட்டும் ஒலிநீர் அணிமதி
    யும்மல ரானவெல்லாம்
    இட்டுப் பொதியுஞ் சடைமுடி
    யான்இண்டை மாலையங்கைக்
    கட்டும் அரவது தானுடை
    யான்கண்டி யூரிருந்த
    கொட்டும் பறையுடைக் கூத்தனை
    யாமண்டர் கூறுவதே. 4.94.8
    911 மாய்ந்தன தீவினை மங்கின
    நோய்கள் மறுகிவிழத்
    தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்
    லாநம்மைச் செற்றநங்கைக்
    காய்ந்த பிரான்கண்டி யூரெம்
    பிரான்அங்க மாறினையும்
    ஆய்ந்த பிரானல்ல னோவடி
    யேனையாட் கொண்டவனே. 4.94.9
    912 மண்டி மலையை யெடுத்துமத்
    தாக்கியவ் வாசுகியைத்
    தண்டி அமரர் கடைந்த
    கடல்விடங் கண்டருளி
    உண்ட பிரான்நஞ் சொளித்தபி
    ரான்அஞ்சி யோடிநண்ணக்
    கண்ட பிரானல்ல னோகண்டி
    யூரண்ட வானவனே. 4.94.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book