MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.95 திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    913 ஈன்றாளு மாயெனக் கெந்தையு
    மாயுடன் தோன்றினராய்
    மூன்றா யுலகம் படைத்துகந்
    தான்மனத் துள்ளிருக்க
    ஏன்றான் இமையவர்க் கன்பன்
    திருப்பா திரிப்புலியூர்த்
    தோன்றாத் துணையா யிருந்தனன்
    றன்னடி யோங்களுக்கே. 4.95.1
    914 பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்
    சேயிந்தப் பாரைமுற்றுஞ்
    சுற்றாய் அலைகடல் மூடினுங்
    கண்டேன் புகல்நமக்கு
    உற்றான் உமையவட் கன்பன்
    திருப்பா திரிப்புலியூர்
    முற்றா முளைமதிக் கண்ணியி
    னான்றன மொய்கழலே. 4.95.2
    915 விடையான் விரும்பியென் னுள்ளத்
    திருந்தான் இனிநமக்கிங்
    கடையா அவலம் அருவினை
    சாரா நமனையஞ்சோம்
    புடையார் கமலத் தயன்போல்
    பவர்பா திரிப்புலியூர்
    உடையான் அடியார் அடியடி
    யோங்கட் கரியதுண்டே. 4.95.3
    916 மாயமெல் லாமுற்ற விட்டிருள்
    நீங்க மலைமகட்கே
    நேயம் நிலாவ இருந்தா
    னவன்றன் திருவடிக்கே
    தேயமெல் லாநின் றிறைஞ்சுந்
    திருப்பா திரிப்புலியூர்
    மேயநல் லான்மலர்ப் பாதமென்
    சிந்தையுள் நின்றனவே. 4.95.4
    917 வைத்த பொருள்நமக் காமென்று
    சொல்லி மனத்தடைத்துச்
    சித்த மொருக்கிச் சிவாய
    நமவென் றிருக்கினல்லால்
    மொய்த்த கதிர்மதி போல்வா
    ரவர்பா திரிப்புலியூர்
    அத்தன் அருள்பெற லாமோ
    அறிவிலாப் பேதைநெஞ்சே. 4.95.5
    918 கருவாய்க் கிடந்துன் கழலே
    நினையுங் கருத்துடையேன்
    உருவாய்த் தெரிந்துன்றன் நாமம்
    பயின்றேன் உனதருளாற்
    திருவாய் பொலியச் சிவாய
    நமவென்று நீறணிந்தேன்
    தருவாய் சிவகதி நீபா
    திரிப்புலி யூரரனே. 4.95.6
    919 எண்ணா தமரர் இரக்கப்
    பரவையுள் நஞ்சமுண்டாய்
    திண்ணார் அசுரர் திரிபுரந்
    தீயெழச் செற்றவனே
    பண்ணார்ந் தமைந்த பொருள்கள்
    பயில்பா திரிப்புலியூர்க்
    கண்ணார் நுதலாய் கழல்நங்
    கருத்தில் உடையனவே. 4.957
    920 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
    வுன்னடி யென்மனத்தே
    வழுவா திருக்க வரந்தர
    வேண்டுமிவ் வையகத்தே
    தொழுவார்க் கிரங்கி யிருந்தருள்
    செய்பா திரிப்புலியூர்ச்
    செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
    மேல்வைத்த தீவண்ணனே. 4.95.8
    921 மண்பா தலம்புக்கு மால்கடல்
    மூடிமற் றேழுலகும்
    விண்பால் திசைகெட் டிருசுடர்
    வீழினும் அஞ்சல்நெஞ்சே
    திண்பால் நமக்கொன்று கண்டோ ந்
    திருப்பா திரிப்புலியூர்க்
    கண்பாவு நெற்றிக் கடவுட்
    சுடரான் கழலிணையே. 4.95.9
    922 திருந்தா அமணர்தந் தீநெறிப்
    பட்டுத் திகைத்துமுத்தி
    தருந்தா ளிணைக்கே சரணம்
    புகுந்தேன் வரையெடுத்த
    பொருந்தா அரக்கன் உடல்நெரித்
    தாய்பா திரிப்புலியூர்
    இருந்தாய் அடியேன் இனிப்பிற
    வாமல்வந் தேன்றுகொள்ளே. 4.95.10

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்,
    தேவியார் - தோகையம்பிகையம்மை.
    திருச்சிற்றம்பலம்

    Goto Main book