MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.96 திருவீழிமிழலை - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    923 வான்சொட்டச் சொட்டநின் றட்டும்
    வளர்மதி யோடயலே
    தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந்
    திருக்கொன்றை சென்னிவைத்தீர்
    மான்பெட்டை நோக்கி மணாளீர்
    மணிநீர் மிழலையுள்ளீர்
    நான்சட்ட வும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே. 4.96.1
    924 அந்தமும் ஆதியு மாகிநின்
    றீரண்டம் எண்டிசையும்
    பந்தமும் வீடும் பரப்புகின்
    றீர்பசு வேற்றுகந்தீர்
    வெந்தழல் ஓம்பு மிழலையுள்
    ளீரென்னைத் தென்றிசைக்கே
    உந்திடும் போது மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே. 4.96.2
    925 அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல்
    அம்பர மாகிநின்றீர்
    கலைக்கன்று சேருங் கரத்தீர்
    கலைப்பொரு ளாகிநின்றீர்
    விலக்கின்றி நல்கும் மிழலையுள்
    ளீர்மெய்யிற் கையொடுகால்
    குலைக்கின்று நும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே. 4.96.3
    926 தீத்தொழி லான்றலை தீயிலிட்
    டுச்செய்த வேள்விசெற்றீர்
    பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை
    யீர்பிடித் துத்திரியும்
    வேய்த்தொழி லாளர் மிழலையுள்
    ளீர்விக்கி அஞ்செழுத்தும்
    ஓத்தொழிந் தும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே. 4.96.4
    927 தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ்
    சுத்தியும் பத்திமையான்
    மேற்பட்ட அந்தணர் வீழியும்
    என்னையும் வேறுடையீர்
    நாட்பட்டு வந்து பிறந்தேன்
    இறக்க நமன்தமர்தம்
    கோட்பட்டு நும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே. 4.96.5
    928 கண்டியிற் பட்ட கழுத்துடை
    யீர்கரி காட்டிலிட்ட
    பண்டியிற் பட்ட பரிகலத்
    தீர்பதி வீழிகொண்டீர்
    உண்டியிற் பட்டினி நோயில்
    உறக்கத்தில் உம்மையைவர்
    கொண்டியிற் பட்டு மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே. 4.96.6
    929 தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண்
    டீர்தூய வெள்ளெருதொன்
    றேற்றங்கொண் டீரெழில் வீழி
    மிழலை இருக்கைகொண்டீர்
    சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர்
    பாசத்தால் வீசியவெங்
    கூற்றங்கண் டும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே. 4.96.7
    930 சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ்
    சூடிச்சொக் கம்பயின்றீர்
    பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை
    யீர்படர் தீப்பருக
    விழிப்பட்ட காமனை வீட்டீர்
    மிழலையுள் ளீர்பிறவிச்
    சுழிப்பட்டு நும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே. 4.96.8
    931 பிள்ளையிற் பட்ட பிறைமுடி
    யீர்மறை யோதவல்லீர்
    வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர்
    விரிநீர் மிழலையுள்ளீர்
    நள்ளையிற் பட்டைவர் நக்கரைப்
    பிக்க நமன்தமர்தங்
    கொள்ளையிற் பட்டு மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே. 4.96.9
    932 கறுக்கொண் டரக்கன் கயிலையைப்
    பற்றிய கையுமெய்யும்
    நெறுக்கென் றிறச்செற்ற சேவடி
    யாற்கூற்றை நீறுசெய்தீர்
    வெறிக்கொன்றை மாலை முடியீர்
    விரிநீர் மிழலையுள்ளீர்
    இறக்கின்று நும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே. 4.96.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுஜாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book