MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்
    (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

    பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
    நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும்
    மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
    சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 215

    நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
    வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
    ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
    தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 216

    தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
    நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
    அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
    குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 217

    கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
    என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
    வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்
    கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 218

    அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன்
    பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
    பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
    மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 219

    வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
    பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
    சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
    வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 220

    சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்
    கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
    ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்
    சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 221

    ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு
    நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
    என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்
    குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 222

    கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்
    சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு
    மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த
    கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 223

    நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து
    நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்
    தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத்
    தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 224

    வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
    கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
    அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
    பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 225

    நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
    பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
    சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந்
    தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 226

    நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம்
    தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்
    ஆன கருணையும் அங்குற்றே தானவனே
    கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 227

    கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
    மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
    அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
    திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 228

    நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
    தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
    வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
    தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 229

    உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
    கள்ளப் படாத களிவந்த வான்கருணை
    வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட்
    கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 230

    பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
    மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
    ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
    செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 231

    தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
    பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
    சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
    கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 232

    கள்வன் கடியன் கலதியிவன் என்னாத
    வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே
    உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்
    தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 233

    பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று
    ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
    நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
    தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 234

    திருச்சிற்றம்பலம்