MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    15. திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி
    (தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

    பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
    பேய்த்தார் முகக்குறும் பேதைகுண மாகாமே
    தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தை திருநடஞ்செய்
    கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம். 315

    என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்
    கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய
    குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித்
    துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ. 316

    பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கிச்
    செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
    விருப்புற்று வேடனார் சேடெறிய மெய்குளிர்த்தங்கு
    அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 317

    கற்போலும் நெஞ்சங் கசிந்துருகிக் கருணையினால்
    நிற்பானைப் போலஎன நெஞ்சினுள்ளே புகுந்தருளி
    நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன்
    சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ. 318

    நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
    புலனாய மைந்தனோ டெண்வகையாயப் புணர்ந்துநின்றான்
    உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே
    பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 319

    புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்
    தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
    சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்
    அத்தன் கருணையிலனால் தோணோக்கம் ஆடாமோ. 320

    தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
    சாதியும் வேதியன் தாதையனைத் தாளிரண்டுஞ்
    சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
    பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். 321

    மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர்
    வானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைத்தடியோம்
    ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே
    ஆனந்த மாகிநின் றாடாமே தோணோக்கம். 322

    எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்
    கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்
    எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
    மன்மிசை மால்பவர் மாண்டனர்காண் தோணோக்கம். 323

    பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்
    தங்கண் இடந்தான் சேவடிமேல் சாத்தலுமே
    சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு
    எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. 324

    காமனுடலுயிர் காலன்பற் காய்கதிரோன்
    நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச்
    சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையுந்
    தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ. 325

    பிரமன் அரியென் றிருவருக்கம் பேதைமையால்
    பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க
    அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
    பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 326

    ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
    பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
    ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித்
    தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. 327

    உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்
    கரைமாண்ட காமப்பெருங்கடலைக் கடத்தலுமே
    இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
    துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ. 328

    திருச்சிற்றம்பலம்