MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி
    (தில்லையில் அருளியது - ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா)

    சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
    ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
    நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு
    ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
    ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
    போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329

    மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
    வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
    தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
    ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
    கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
    போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330

    முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்
    பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்
    தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து
    மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
    மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
    பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331

    நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
    மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
    அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
    நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
    துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
    புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332

    ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
    காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
    நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
    ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்
    கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
    பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333

    மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
    தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
    கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
    தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
    காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
    போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334

    உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
    மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
    பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
    அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
    என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
    பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335

    கோலவரைக்குடுமி வந்து குவலத்துச்
    சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
    ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
    சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
    மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
    பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336

    தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
    தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
    எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
    பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
    கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
    பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337

    திருச்சிற்றம்பலம்