MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    18. குயிற்பத்து - ஆத்தும இரக்கம்
    (தில்லையில் அருளியது - ஆசிரிய விருத்தம்)

    கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
    பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்
    சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை
    ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய். 348

    ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய்
    ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்
    பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்
    சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 349

    நீல வுருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவுங்
    கோல அழகில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில்
    சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை
    ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய். 350

    தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ
    வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
    ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்
    மான்பழித் தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய். 351

    சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
    அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான்
    முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச்
    சிந்தூரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய். 352

    இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி
    அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன்
    நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக்
    கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய். 353

    உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
    பொன்னை அழிந்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன்
    மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
    தென்னவன் சேரவன் சோழன் சீரப்புயங் கன்வரக் கூவாய். 354

    வாயிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
    ஓவியவ ருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி
    மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்
    தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய். 355

    காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே
    சீருடைச் செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன்
    பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட
    ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய். 356

    கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ
    அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி
    எந்தம ராம்இவ னென்றிங் கென்னையும் ஆட்கொண்டருளும்
    செந்தழல் போல்திரு மேனித் தேவர்பி ரான்வரக் கூவாய். 357

    திருச்சிற்றம்பலம்