MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    30. திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம்
    (திருக்கழுக்குன்றத்தில் அருளியது -
    ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

    பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்
    கிணக்கிலாததோர் இன்ப மேவுருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்
    உணக்கிலாததோர் வித்துமேல்யிளை யாமல் என்வினை ஒத்தபின்
    கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 468

    பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே
    சட்டநேர்பட வந்திலா சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
    சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்
    கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 469

    மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை
    விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்
    இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே
    கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 470

    பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றரும்
    நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்
    பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங்
    காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 471

    கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே
    சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
    ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்
    காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 472

    பேதம் இலாததொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே
    ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்
    சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்
    காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 473

    இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே
    மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்
    துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனக்
    கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 474

    திருச்சிற்றம்பலம்