MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    31. கண்டபத்து - நிருத்த தரிசனம்
    (தில்லையில் அருளியது - தரவு கொச்சகக் கலிப்பா)

    இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
    அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச்
    சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
    அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே. 475

    வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
    தனைச்சிறுதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை
    எனைப்பெரிதும் ஆட்கொண்டேன் பிறப்பறுத்த இணையிலியை
    அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. 476

    உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக்
    கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
    திருத்திருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
    அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. 477

    கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை
    வல்லாகி னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம்
    பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை
    எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே. 478

    சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
    ஆதமிலி நாயேனை அல்லலுறுந் தாட்கொண்டு
    பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
    கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே. 479

    பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
    உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
    செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி
    மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. 480

    பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப்
    பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே
    சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த
    வித்தகனார் வினையாடல் விளங்குதில்லை கண்டேனே. 481

    அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி
    விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
    அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக்
    களவிலா வானவருக் தொழுதில்லை கண்டேனே. 482

    பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை
    ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி
    வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை
    நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. 483

    பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
    பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்
    கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
    வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 484

    திருச்சிற்றம்பலம்