MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல்
    (தில்லையில் அருளியது -
    அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

    புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
    கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
    மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
    அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516

    வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
    இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
    திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
    அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517

    வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
    என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
    என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
    அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518

    கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
    வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
    துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
    அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519

    பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
    துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
    திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
    அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520

    வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
    தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
    தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
    ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521

    தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
    புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
    முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
    அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522

    தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
    வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
    செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
    அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 523

    மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
    நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
    செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
    அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524

    கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
    நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
    வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
    ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525

    திருச்சிற்றம்பலம்