MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    44. எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை
    (தில்லையில் அருளியது - எழுசீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்)

    பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
    சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
    ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
    ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. 599

    உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்
    தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற்
    பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
    பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே. 600

    என்பே உருகநின் அருள்அளித்துன் இணைமலர் அடி காட்டி
    முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவர் முனிவர் முழுமுதலே
    இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே
    நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே 601

    பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
    பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
    முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
    எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. 602

    காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டு கண் களிகூரப்
    பேணும தொழிந்தேன் பிதற்றம தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே
    தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால்
    காணும தொழிந்தேன் நீயினி வரினுங் காணவும் நாணுவனே. 603

    பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடு எதிர்த்து
    தோற்றிமெய் யடியார்க் கருட்டுரை யளிக்குஞ் சோதியை நீதி யிலேன்
    போற்றியென் அமுதே என நினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
    ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே. 604

    திருச்சிற்றம்பலம்