MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    45. யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்
    (தில்லையில் அருளியது - அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

    பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை
    ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
    ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள்
    போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605

    புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
    மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
    நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
    தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606

    தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
    யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்
    கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
    போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607

    அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்
    கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
    செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்
    பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608

    விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
    உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்
    அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
    புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609

    புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு
    இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
    திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்
    நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610

    நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
    பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
    நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
    பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611

    பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்
    அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
    திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்
    திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612

    சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்
    போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்
    ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்
    போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613

    புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்
    மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்
    தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
    அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614

    திருச்சிற்றம்பலம்