MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    47. திருவெண்பா - அணைந்தோர் தன்மை
    (திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா)

    வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
    பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
    திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
    மருவா திருந்தேன் மனத்து. 617

    ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
    பார்க்கோ பரம்பரனே என்செய்தேன் தீர்ப்பரிய
    ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
    தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து. 618

    செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
    உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத்
    திருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான்
    பெருந்துறையில் மேய பிரான். 619

    முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
    பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்
    பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
    வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 620

    அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
    மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன்
    பெருந்துறையும் மேய பெருமான் பிரியா
    திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. 621

    பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
    மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன்
    பெருந்துறையாள் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
    மருந்திறவாப் பேரின்பம் வந்து. 622

    வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
    ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
    திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
    ஒருத்தன் பெருக்கும் ஒளி. 623

    யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
    யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும்
    பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
    மற்றறியேன் செய்யும் வகை. 624

    மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
    தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி
    வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
    மெய்யகத்தே இன்பம் மிகும். 625

    இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
    திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண்
    பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
    மருந்துருவாய் என்மனத்தே வந்து. 626

    இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
    துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்
    சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
    ஊராகக் கொண்டான் உவந்து. 627

    திருச்சிற்றம்பலம்