MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல்
    (தில்லையில் அருளியது -சிவ உபாதி ஒழித்தல் -
    பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

    கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
    காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
    மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
    மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
    பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
    பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
    விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
    மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே. 635

    ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பது மாகாதே
    கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே
    காரணமாகும் அனாதி குணங்கள் கருத்தறு மாகாதே
    நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே
    நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணினு மாகாதே
    என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
    ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே. 636

    பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே
    பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே
    அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே
    ஆதி முதற்பா மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே
    செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே
    சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன வாகாதே
    இந்திர ஞால இடர்ப்பிற வித்துய ரேகுவ தாகாதே
    என்னுடைய நாயக னாகியஈசன் எதிர்ப்படு மாயிடிலே. 637

    என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே
    எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே
    நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
    நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
    மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
    மாமறை யும் அறியாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
    இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
    என்னை யுடைப்பெரு மான் அருள் ஈசன் எழுந்தரு ளப்பே றிலே. 638

    மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே
    வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
    கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே
    காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடு மாகாதே
    பெண்ணலி ஆணென நாமௌ வந்த பிணக்கறு மாகாதே
    பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
    எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே
    என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே. 639

    பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
    பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
    மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே
    வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
    தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
    தானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே
    இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
    என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 640

    சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
    துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே
    பல்லியல் பாயப் பரப்பற வந்த பராபர மாகாதே
    பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே
    வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
    விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
    எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
    இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ளப் பெறிலே. 641

    சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
    சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
    அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
    ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே
    செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
    சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே
    எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
    ஈற்றி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே. 642

    திருச்சிற்றம்பலம்