MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


  1. திருக்கை வழக்கம் (வேளாளர் ஈகைச் சிறப்பு)
    கம்பர்

  2. கலிவெண்பா

  3. 1
    திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை

  4. கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி
    மங்கை பிரியாமல் வாழுங் கை - திங்கள் அணி - 2

  5. சந்தனம் அரைக்கும் கை
    மூர்த்தி நாயனார் போன்று விரிஞ்சிபுரசிறுவன்

  6. எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க் கரிய
    தம்பிரா னுக்குரைத்த சந்தனக் கை - அம்பொன் - 3

  7. முளைத்த நெல்லை சோறக்கி ஈந்தகை
    இளையான்குடி மாற நாயனார்

  8. வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
    முளைவாரி வந்த முழுக் கை - கிளை வாழக் - 4

  9. எச்சிற்கையால் கல்லெறிந்தகை
    சங்கமங்கை சாக்கியநாயனார்

  10. கச்சித் தலத் தரனைக் கல்லால் எறியமறந்து
    எச்சில் தயிர்ச்சோ றெறிந்திடுங் கை - பச்சை மிகு - 5

  11. ஈசற்கான மாவடுசிந்தி தன்தலையை அரிந்தகை
    கணமங்கலம் அரவாட்தாய நாயனார்

  12. தேமா வடுக் கமரில் சிந்திற் றன்றே கழுத்தை
    ஆமா மெனவே அரிந்திடுங் கை - வாம மறை - 6

  13. தொண்டர்பின் ஈசன் எனமுடிபு கொண்டகை
    மலைநாட்டுச்செங்குன்றூர் விறல்மிண்டநாயனார்

  14. ஓது புகழ் நாயனுடன் ஊரன் புற கென்றே
    மோது தடிகொண்டு முடுகுங் கை - தீ தகல - 7

  15. திருந்தி ஈசனுக்கே பூசைசெய் பெருந்தகை
    திருநாவுக்கரசு நாயனார்

  16. அஞ் செழுத்தே ஒன்றாகி அப்பர்எனத் தோன்றிஅரன்
    செஞ்சரணத்தே பூசை செய்யும் கை - வஞ்சியர் பால் - 8

  17. ஈசனை ஏவல்கொண்டோர் அளியுதவி மறுத்தகை
    ஏயர்கொன் கலிக்காம நாயனார்

  18. தூ தரனைத் தான்விடுத்த சுந்தரனைக் காணாமல்
    பேதமறக் தன்வயிறு பீறும் கை - பூதத்தின் - 9

  19. சுந்தரர்பொருட்டு நெற்சிவிகை தாங்கியகை
    குண்டயூர் கிழார்

  20. மிக்க புலவனுக்கா ஏகி மனை மட்டாகத்
    தக்க சிவிகை கணை தாங்கும் கை - மைக் கடு வாய் - 10

  21. வறுமையிலும் கிடைத்தநாகமணி ஈந்தபொற்கை
    சடையப்ப வள்ளல்

  22. மூக்கில் புகைபுரிந்த மூதரவின் வாயிடத்து
    நீக்கிய கை நாக் கதனில் நீட்டுங் கை - ஆக்கமுடன் - 11

  23. உழவுக்கே உளோம் என சாசனமிட்ட கை

  24. ஏத மற்ற கீர்த்தியைக் கொண் டேட்டகத்திலே அடிமைச்
    சாதனம் இட்டே கொடுத்த தங்கக் கை - மேதினியில் - 12

  25. மகவு தாங்கிய பெண்டிரும் விருந்தினுக் குதவுங்கை

  26. சூலி முதுகில் சுடச்சுட அப்போது சமை
    பாலடிசில் தன்னைப் படைக்குங் கை - சாலவே - 13

  27. தனிமையிலிறந்த பாணனுடலை ஈடேற்றியகை
    தொண்டைநாட்டு மறவை வாழ் அரங்கேசன்

  28. நாணம் தராமல் நடுங்காமல் கூசாமல்
    பாணன் பிணத்தைப் பரிக்குங் கை - காணவே - 14

  29. தானுண்டதும் கூழே என காட்டிய கை
    செம்பியனுக்காக பேறையூரான் செய்கை

  30. தண் தமிழோன் தன்மனத்தில் சந்தேகம் தீரக்கூழ்
    உண்ட வயிற்றை பீறி ஊற்றுங் கை - கண் டளவில் - 15

  31. நீலிக்கஞ்சிய வணிகனுக்கு உறுதியளித்த கை
    தொண்டை நாட்டு திருவாலங்காட்டு குடிகள்

  32. நீலி தனக் கஞ்சிநின்ற வணிகே சனுக்காக்
    கோலி யபயம் கொடுக்குங் கை - ஆல மெனும் - 16

  33. நீலியினால் வணிகனிறக்க நெருப்பினிலிறங்கிய கை
    மேற்படி

  34. வன்னியிடை முழ்கி வானோர் பழிகழுவிக்
    கன்னி தனையே மணந்த காட்சிக் கை - துன்னு மொரு - 17

  35. உற்றோர் செய்ததை தானும்செய்திறந்தகை
    மேற்படி

  36. பேருலகை எல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின்
    கூரில் ஒருவன் கழுத்தைக் குத்தும் கை - பா ரறிய - 18

  37. தானுண்கலத்தில் கையமைத்துக் காத்திட்டகை
    பறைமுழைநந்தன்சாம்பான்-போராவூர்வேளாளன்

  38. வீறு பெறும் பறையன் வீயாமல் ஓர் கலத்தில்
    சோறு பிசைந் துண்ட சுடர் மணிக் கை - ஆறாத் - 19

  39. புண்ணைக்காட்ட சீனபட்டாடை கிழித்தகை
    சோழனெதிரில் சடையப்பவள்ளல்

  40. தொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின்
    புடவை கிழித்த பெருங் கை - கடல் சூழ்ந்த - 20

  41. நாற்படைசெல்ல வெந்தணலில் ஏற்பூட்டும்கை

  42. பார்பூட்டு மன்னர் பரிகரி பூட்டக் கதிரோன்
    தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை - வீரமதன் - 21

  43. காமன் வெற்றிக்கு தாற்றுக்கோல் தாங்குங்கை

  44. ஐங்கோல் தொடுக்க அணைகோ லெடுக்கஉழும்
    பைங்கோல் பிடிக்கும் பதுமக் கை - இங்கிதமாம் - 22

  45. மன்னன் கோல்தாங்க தாம்மேழி தாங்குங்கை

  46. சீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு
    பேர்படைத்த மேழி பிடிக்குங் கை - கார்படைத்த - 23

  47. உலகில் நல்லறிவு படர நாற்று விசிறுங் கை

  48. மிஞ்சுமதி கீர்த்த்ியைப் போல் மேதினி எல்லாம் தழைக்கச்
    செஞ்சாலி நாற்றை தௌிக்குங் கை - எஞ்சாமல் - 24

  49. கள்ளம் புல்பூண்டொழித்துலகம் காக்குங்கை

  50. வெள்ளைக் களை களைந்து வீறும் பயிர் தழைக்கக்
    கள்ளக் களை களைந்த கற்பகக் கை - வள் ளுறையும் - 25

  51. க்ஷஷபல்வகைப் போர் வெற்றிக்கும் மூலமாங்கை

  52. விற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர்
    நெற்போர் முதல் போர் நெறித்திடுங் கை - கற்பகம் போல் - 26

  53. மேழி சிங்கம் குயில் முக்கொடிகள் தாங்குங்கை

  54. மேழிக் கொடி சிங்க வெற்றிக் கொடி குயிலின்
    வாழிக் கொடியே மருவுங் கை - நீ ளுலகில் - 27

  55. வறியவர் வேதாகமபுராணம் தழைக்குங்கை
    திருநின்றையூர் காளத்திவாண முதலியார்

  56. ஆதுலர்குச் செம்பொ னளிக்குங் கை ஆகமங்கள்
    வேத புராணங்கள் விரிக்குங் கை - நீதிநெறி - 28

  57. பதினாறுபேறும் யாவரும்பெற உழைக்குங்கை

  58. மானம் குலம் கல்வி வண்ணம் அறிவுடைமை
    தானம் தருமம் தழைக்குங் கை - ஆன தமிழ் - 29

  59. நலிந்தோர் நலமழிந்தோர் தாங்குங்கை

  60. கல்லார்கள் என்னாமல் கற்றோர்கள் என்னாமல்
    எல்லாரையுங் காத் தீடேற்றுங் கை - வல்லமை சேர் - 30

  61. ஈடில்லாத ஈடுகொள்ளாது பயனளிக்குங்கை

  62. மைம் மா முகில் உலகை வாழ்விக்கும் மேன்மைபோல்
    கைம்மா றிலா தளித்த கற்பகக் கை - சும்மை ஆர் - 31

  63. பலருண்ண பயன்பலபெற வாழும் சீராளர்கை

  64. ஊருணி நீர் போல் உலகத்தவர்க் கெல்லாம்
    பேரறிவால் ஈயும் ப்ரதாபக் கை - பாரில் - 32

  65. உற்றபோது வுடனுதவும் தண்கை

  66. உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
    கோடுக்க இசைந்த குளிர் கை - இடுக்கணினால் - 33

  67. மூவருக்கும் முதலான மூலமாங்கை

  68. மாமறையோர் மன்னர் வணிகர் முதலாகத்
    தாம் அலையாமல் கொடுத்துத் தாங்குங் கை - தே மருவு - 34

  69. இயன்ற மாவையும் ஈந்த ஏழையின்கை
    கம்பநாடரிடம் ஓர் வேளாளன்

  70. நாவில் புகழ் கம்பநாடற் கடிமை யென்றே
    மாவைக் கரைத்து முன்னே வைக்குங் கை - பாவலர் தாம் - 35

  71. விடநாக கடியினில்மிளிர் நனிநாகரீக நற்கை
    சடையப்ப வள்ளல் கை

  72. ஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே
    காரி விடநாகங் கடிக்குங் கை - பா ரறியச் - 36

  73. பஞ்சகாலத்தில் நீளும் பாசமுள்ளகை
    குமிழம்பட்டு, இடையாலம் வாழ்ந்த வேளாளர்

  74. சங்கை யிட்டுத் தள்ளாமல் தன் சோற்றை வந்தவர்க்குப்
    பங்கை யிட் டிரட்சித்த பங்கயக் கை - பொங்கமொடு - 37

  75. என்னளவாயினும் ஈந்து சொற் பிறம்பாதகை
    பொன்விளைந்த களத்தூர் குடிதாங்கி முதலியார்

  76. செம்பென் விளை களத்தூர் செந்நெல் விளைந்ததனை
    நம்பி மறையோர்கு அளித்த நாணயக் கை - அம்பொன் - 38

  77. வந்த பின்னும் வருமுன்னும் காக்குங்கை

  78. விளை பயிரைப் பார்த்து விரைகால் புலத்தை
    வளைய மதி லிட்டு வருங் கை - கள மதனில் - 39

  79. எக்காலத்தும் ஈவோமென சாசனமிட்ட கை

  80. ஏற்கவந்த ஆதுலர்க் கில்லை யென்னாமல் செம்பொன்
    கார்க் கையினால் முக் கை யிட்ட கற்பகக் கை - தீர்க்கமதாத் - 40

  81. ஈசனுக்கு திருப்பணிகள் பற்பலசெய் கொண்டற்கை

  82. திருப் பருத்திக் குன்றில் சிவன் ஆலயங்கள்
    விருப்புடனே கட்டுவித்த மெய்க் கை- திருப்புகழை - 41

  83. கலைஞான பயிர்விளைக்குங் பெற்றிணைகை

  84. எண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை
    வண்மை பெற உண்டாக்கும் வா குள கை - பண்ணமைந்த - 42

  85. நன்னெறியும் தன்மொழியும் காக்குங்கை
    இருமொழி ஞானம் படைத்த நம்மாழ்வார்

  86. வேத மொரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்
    ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை - பூதலத்தில் - 43

  87. புலவனெதிர் படைத்தகனி உவக்குங்கை

  88. பாவல னெச்சில் படு மாங்கனியை எடுத்
    தாவலுடன் நன்றா கருந்துங் கை - காவலன் - 44

  89. மன்னவன்கண் பெரியதெவை காட்டிய கை
    அநபாயனுக்கு சிறார் பருவ சேக்கிழார்

  90. மண்ணில் கடலில் மலையின் பெரிய தென
    எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக் கை - திண்ணமதாய் - 45

  91. தமிழின் புகழினுக்கு முடியையே ஈந்தகை
    குன்றையூர் எல்லன்

  92. வையக மெங்குந் தேடி வந்த தமிழோன் புகழச்
    செய்ய முடியைக் கொடுத்த செம்பொற் கை - துய்ய புகழ் - 46

  93. வேளான் வீரனின் வெற்றிக்கை
    கருணாகரத் தொண்டைமான்

  94. அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத் தெட் டாணைதனை
    வெட்டி பரணிகொண்ட வீரக் கை - திட்டமுடன் - 47

  95. வென்றிபெறு பொருளீட்டம் ஈந்த ஈகைக்கை
    முனையடுவார் நாயனார்

  96. பொன்னால் அமுதும் பொரிக் கறியும் தான் கொணர்ந்து
    நன் நாவலர்க் களித்த நாணயக்கை - முன்னாள் - 48

  97. வணிகன்தன் கவலை போக்கியகை
    ஆறைநகர் பரமேசுவரன் மகன் எல்லன்

  98. மனக் கவலை யுற்ற வணிகன் முன்னே நின்று
    தனைக் கா எனக் கேட்ட தண் கை - கனக்கவே - 49

  99. ஆனிரைகளை பலஅளிக்கும் பாங்கானகை

  100. அன் றீன்ற நா கெழுபதான எருமைத் திறத்தைக்
    கன்றோடு நல்கும் கடகக் கை - வென்றி தரும் - 50

  101. பாடலுக்கு கலம் நெல்லளிக்குங்கை

  102. ஓர் ஆனை நூராயிரக் கலம்நெல் ஓர் கவிக்குச்
    சீராக நல்கும் தியாகக் கை - பே ரியலைச் - 51

  103. பாலாற்றின் கால்பல செய்தாற்றிய ஆண்மைக்கை

  104. சாற்றும் ஒட்டக் கூத்தன் சரச கவி சொல்லப் பால்
    ஆற்றுநீர் கால் கொணர்ந்த ஆண்மைக் கை - நேர்த்திபெற - 52

  105. சிவிகை உதைத்த புலவன் காலிற்கு பூணளித்தகை
    தொண்டைநாட்டு வல்லம் கச்சியப்ப வள்ளல்

  106. வண் தமிழோன் தான் உதைத்த வாகுள காலுக்குப் பொன்
    வெண்டய மிட்டே வணங்கும் வெற்றிக் கை - புண்டரிகக் - 53

  107. முடிமேல் குட்டிய புலவனுக்கு ஆழியிட்டகை

  108. கையால் புலவன் கனகமுடி மேல் குட்டச்
    செய்யாழி பண்ணி யிட்ட கை - நொய்ய - 54

  109. அரிசிகேட்டயிடத்து யானையே அளிக்குங்கை
    ஏகம்பவாணன்

  110. எறும்புக்கும் ஆகாரந் தானில்லை என்ற மட்டில்
    திறம் புக்க யானை தரும் செங்கை - பறம்பு தனில் - 55

  111. முனிகளுக்கு அளித்துவந்த பண்பட்டகை

  112. எண்ணாயிரம் முனிவர்க்கு ஏற்றபடி அப்படியே
    பண்ணாக் கொடுக்கும் பராக்ரமக் கை - விண்ணாடர் - 56

  113. விண்ணடைந்தோர் புகழினை ஏற்றுங்கை

  114. கூர்த்த புகழ் அண்ட கோளம் அளவும் படர
    நால் திக்கும் மேருவின் நாட்டும் கை - சீர்குகனை - 57

  115. சிவன் முருகன் பிள்ளை மூவரையும் போற்றுங்கை

  116. ஆதார மானவனை ஐங்கரனைச் சங்கரனைப்
    பாதாரவிந்தம் பணியும் கை - நீதி - 58

  117. படைத்து காத்து ஈந்து இடர்களையயும் ஈரக்கை

  118. நடக்கை இருக்கை நகைக்கை மிடி தீர்க்கை
    கொடுக்கை செழுங்கை குளிர்க் கை- தொடுத்த தெல்லாம் - 59

  119. எக்காலத்துமிடத்தும் ஈடேற்றும் இணையிற்கை
    வேளாளர் குலத்துதித்த வல்லாளன்

  120. சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்
    காராளர் கற்பகப் பூங் கை

  121. திருக்கை வழக்கம் முற்றிற்று