MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    இரண்டாந் தந்திரம்

    .1. அகத்தியம்

    .337.
    நடுவுநில் லாதிவ் வுலகஞ் சா஢ந்து
    கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
    நடுவுள அங்கி அகத்திய நீபோய்
    முடுகிய வையத்து முன்னிரென் றானே.

    .338.
    அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
    அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
    மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
    எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே

    .2. பதிவலியில் வீரட்டம் எட்டு

    .339.
    கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
    வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம்
    வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
    குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே

    .340.
    கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
    தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
    நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
    தலையை யா஢ந்திட்டுச் சந்திசெய் தானே

    .341.
    எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்
    தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
    பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
    அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே

    .342.
    எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
    அங்க முதல்வன் அருமறை .(1).யோதிபாற்
    பொங்குன்ய் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின்
    அங்கு விரற்குறித் தாழிசெய் தானே
    .(1). யோகிபாற்

    .343.
    அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
    முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்க்கள்
    முப்புர மாவது மும்மல காரியம்
    அப்புரம் எய்தமை யாரறி வாரே

    .344.
    முத்தீ கொளுவி முழங்கொ஢ வேள்வியுள்
    அத்தி யுரியர னாவ தறிகிலர்
    சத்தி கருதிய தாம்பல தேவரும்
    அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே

    .345.
    மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
    மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
    காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
    ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே

    .346.
    இருந்த மனத்தை இசைய இருத்திப்
    பொருந்தி இலிங்க வழியது போக்கித்
    திருந்திய காமன் செயலழித் தங்கண்
    அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே

    .3. இலிங்க புராணம்
    .347.
    அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
    முடிசேர் மலைமக னார்மக ளாகித்
    திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
    படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே

    .348.
    திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
    அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
    புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
    பரிவொடு நின்று பரிசறி வானே

    .349.
    ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
    ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
    ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி
    .(1).வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே
    .(1).வாழிப் பிரமற்கும்

    .350.
    தாங்கி இருபது தோளுந் தடவரை
    ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
    ஆங்கு நொ஢த்தம ராவென் றழைத்தபின்
    நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே

    .351.
    உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி
    அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
    செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
    மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே

    .352.
    ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
    வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
    நாடி இறைவா நமேன்று கும்பிட
    ஈடில் புகழோன் எழுகவென் றானே.

    .4. தக்கன் வேள்வி
    .353.
    தந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை
    வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
    முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
    சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே

    .354.
    சந்தி செயக்கண் டெழுகின் றா஢தானும்
    எந்தை யிவனல்ல யாமே உலகினிற்
    பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
    அந்தமி லானும் அருள்புரிந் தானே

    .355.
    அப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள்
    அப்பரி சேயங்கி அதிசய மாகிலும்
    அப்பரி சேயது நீர்மையை யுள்கலந்
    தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே

    .356.
    அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
    அப்பரி சேயவ ராகிய காரணம்
    அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
    டப்பரி சாகி .(1).அலர்ந்திருந் தானே
    .(1). அலந்திருந்
    .(1). அமர்ந்திருந்

    .357.
    .(1). அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
    குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்
    சிவந்த பரமிது சென்று கதுவ
    உவந்த பெருவழி யோடி வந்தானே
    .(1). அலந்திருந்

    .358.
    அரிபிர மந்தக்கன் அருக்க னுடனே
    வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
    சிரமுக நாசி .(1).சிறந்தகை தோள்தான்
    அரனருள் இன்றி அழிந்தநல் லோரே
    .(1). சிந்தைகை

    .359.
    செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
    அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
    செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
    குவிமந் திரங்கொல் கொடியது வாமே

    .360.
    நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
    பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
    வில்லாற் புரத்தை விளங்கொ஢ கோத்தவன்
    பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே

    .361.
    தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
    அளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
    .(1).விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்
    சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே
    .(1). விளிந்தானத் தக்கனவ் வேள்வியை

    .5. பிரளயம்
    .362.
    கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
    திருவருங் கோவென் றிகல இறைவன்
    ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
    அருவரை யாய்நின் றருள் புரிந் தானே

    .363.
    அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
    தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
    உலகார் அழற்கண் டுள்விழா தோடி
    அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே

    .364.
    தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
    எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
    விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
    கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.

    .365.
    சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
    அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
    திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை
    மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே

    .366.
    பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
    கண்பழி யாத கமலத் திருக்கின்ற
    நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
    விண்பழி யாத விருத்திகொண் டானே.

    .6. சக்கரப்பேறு
    .367.
    மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
    கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர
    மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
    பார்ப்போக மேழும் படைத்துடை யானே

    .368.
    சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்
    சக்கரந் தன்னைத் .(1).தரிக்கவொண் ணாமையால்
    மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
    தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே
    .(1). திரிக்கவொண்

    .369.
    கூறது வாகக் குறித்துநற் சக்கரங்
    கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
    கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
    கூறது செய்து .(1).தரித்தனன் கோலமே
    .(1). கொடுத்தனன்

    .370.
    தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
    தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ்
    சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
    அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே

    .7. எலும்பும் கபாலமும்
    .371.
    எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
    வலம்பன் மணிமுடி வானவ ராதி
    எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில்
    எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே

    .8. அடிமுடி தேடல்
    .372.
    பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
    பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
    பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
    அரனடி தேடி அரற்றுகின் றாரே.

    .373.
    ஆமே ழுலகுற நின்றேம் அண்ணலுந்
    தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
    வானே ழுலகுறும் மாமணி கண்டனை
    .(1).நானே அறிந்தேன் அவனாண்மை யாலே
    .(1). நானே அறிந்தேனென் ஆண்மையி னாலே

    .374.
    ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
    சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத்
    தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
    தாண்முழு தண்டமு மாகிநின் றானே

    .375.
    நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
    அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
    சென்றார் இருவர் திருமுடி மேற்செல
    நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.

    .376.
    சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
    மூவடி தாவென் றானும் முனிவரும்
    பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்
    தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே

    .377.
    தானக் கமலத் திருந்த சதுமுகன்
    தானக் கருங்.(1).கடல் வாழித் தலைவனும்
    ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
    தானப் பெரும்பொருள் தன்மைய தாமே
    .(1).கடலூழித்

    .378.
    ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
    மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண்
    டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
    கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே

    .379.
    வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
    ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
    ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்
    தாள்கொடுத் தானடி சாரகி லாரே

    .380.
    ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
    வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
    வீழித் தலைநீர் விதித்தது தாவென
    ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே

    .9. .(1).படைத்தல்
    .(1). சிருஷ்டி
    .(1). சர்வ சிருஷ்டி

    .381.
    ஆதியோ டந்தம் இலாத .(1).பராபரம்
    போதம தாகப் புணரும் பராபரை
    சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
    தீதில் பரையதன் பால்திகழ் நாதமே
    .(1). பராபரன்

    .382.
    நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
    தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
    பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
    வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே

    .383.
    இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
    கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
    வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
    சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே

    .384.
    தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
    ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
    பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
    சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே

    .385.
    மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
    கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
    தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
    பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே

    .386.
    புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
    புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
    புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
    புவனம் படைப்பானப் புண்ணியன் தானே

    .387.
    புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
    தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்
    கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
    மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே

    .388.
    நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
    .(1).காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
    ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
    நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே
    .(1). காய்கதிர்ச்

    .389.
    உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
    அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்
    கண்டச் சதுர்முகக் காரணன் தன்னொடும்
    பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே

    .390.
    ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
    பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
    வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
    ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே

    .391.
    காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
    நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
    பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
    ஆரண மாஉல காயமர்ந் தானே

    .392.
    பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
    நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
    அயஓளி யாயிருந் தங்கே படைக்கும்
    பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே

    .393.
    போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
    தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
    மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
    தாக்குங் கலக்குந் தயாபரன் தானே

    .394.
    நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
    ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
    முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
    நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே

    .395.
    ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
    வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
    போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
    ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே

    .396.
    ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
    இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
    பருவங்கள் தோறும் பயன்பல வான
    திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே

    .397.
    புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
    புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
    புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
    புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே

    .398.
    ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்
    காரிய காரண ஈசர் கடைமுறை
    பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து
    ஆணவம் நீங்கா தவரென லாகுமே

    .399.
    உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா
    மற்றைய மூன்று மாயோ தயம்விந்து
    .(1).பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால்
    துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே
    .(1). பெற்றவள்

    .400.
    ஆகாய மாதி சதாசிவ ராதியென்
    போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
    மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
    ஆகாயம் பூமி காண .(1).அளித்தலே
    .(1). அளித்ததே

    .401.
    அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
    அளியார் திரிபுரை யாமவள் தானே
    அளியார் சதாசிவ மாகி அமைவாள்
    அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே

    .402.
    வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
    காரணி காரிய மாகக் கலந்தவள்
    வாரணி ஆரணி வானவர் மோகினி
    பூரணி .(1).போதாதி போதமு மாமே
    .(1). பூதாதி

    .403.
    நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
    சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
    மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
    என்றிவ ராக இசைந்திருந் தானே

    .404.
    ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
    ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
    ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
    ஒருவனு .(1).மேஉல கோடுயிர் தானே
    .(1). மேஉடலோடுயிர்

    .405.
    செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை
    மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
    கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
    .(1).அந்தார் பிறவி அறுத்துநின் றானே
    .(1). ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே

    .406.
    தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
    கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி
    ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று
    நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே

    .407.
    ஓராய மேஉல கேழும் படைப்பதும்
    ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
    ஓராய மேஉல கேழுந் துடைப்பதும்
    ஓராய மே.(1).உல கோடுயிர் தானே
    .(1). உடலோடுயிர் தானே

    .408.
    நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
    கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
    ஏது பணியென் றிசையும் இருவருக்
    காதி இவனே அருளுகின் றானே

    .409.
    அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
    மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
    பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
    கிப்பரி சேஇருள் மூடிநின் றானே

    .410.
    ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
    போதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி
    வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
    ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே

    .10. .(1).காத்தல்
    .(1). திதி

    .411.
    புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
    புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
    புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
    புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே

    .412.
    தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
    தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
    தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
    தானே உலகில் தலைவனு மாமே

    .413.
    உடலாய் உயிராய் உலகம தாகிக்
    கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய்
    இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
    அடையார் .(1).பெருவழி அண்ணல் நின்றானே
    .(1). பெருவெளி

    .414.
    தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
    .(1).கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி
    ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று
    நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே
    .(1). கூடும்பிறவிக்

    .415.
    தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்
    தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்
    தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந்
    தானொரு காலந்தண் மாயனு மாமே

    .416.
    அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
    இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
    முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
    அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே

    .417.
    உற்று வனைவான் அவனே உலகினைப்
    பெற்று வனைவான் அவனே பிறவியைச்
    சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
    மற்றும் அவனே வனையவல் லானே

    .418.
    உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
    வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி
    உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
    தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே

    .419.
    தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்
    வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
    ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
    தாங்கிநின் றானும்அத் தாரணி தானே

    .420.
    அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
    நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
    பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
    தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே

    .11. .(1).அழித்தல்
    .(1). சங்காரம்

    .421.
    அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
    அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
    அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது
    அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே

    .422.
    இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
    நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்
    உலைதந்த மெல்லா஢ போலும் உலகம்
    மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே

    .423.
    பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
    உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
    குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்
    விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே

    .424.
    கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
    அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
    ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்
    குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே

    .425.
    நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
    வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்
    சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
    உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே

    .426.
    நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
    வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்
    சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
    உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே

    .427.
    நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
    ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்

    சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்
    உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே

    (1) வைத்தசங் காரங் கேவலம் ஆன்மாவுக்
    குய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.

    .428.
    நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
    வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
    சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
    உய்த்தசங் காரமும் நாலா மதிக்கிலே

    .429.
    பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
    பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
    வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
    பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே

    .430.
    தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை
    மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
    காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்
    ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே

    .12. .(1).மறைத்தல்
    .(1). திரோபவம்

    .431.
    உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
    உள்ளம்விட் டோ ரடி .(1).நீங்கா ஒருவனை
    .(2).உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
    உள்ளம் அவனை உருவறி யாதே
    .(1).நீங்கா தொருவனை
    .(2).உள்ளமும் அவனும் உறவா யிருந்தும்

    .432.
    இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
    துன்பஞ்செய் பாசத் துயருள் .(1).அடைத்தனன்
    என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை
    முன்பிற் கொளுவி முடிகுவ தாமே
    .(1).அடைந்தனன்

    .433.
    இறையவன் மாதவன் இன்பம் படைத்த
    மறையவன் மூவரும் வந்துடன் கூடி
    இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
    மறையவன் வைத்த .(1).பரிசறி யாதே
    .(1).பரிசறி யாரே

    .434.
    காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
    ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
    ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
    சேண்படு பொய்கைச் செயலணை யாரே

    .435.
    தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
    அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
    சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
    இருளும் அறநின் றிருட்டறை யாமே

    .436.
    அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
    உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்
    பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
    கரகின் றவைசெய்த காண்டகை யானே.

    .437.
    ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
    வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
    களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
    வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே

    .438.
    நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
    சென்றங் .(1).கியங்கும் அரந்திரு மாலவன்
    மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
    என்றிவ ராகி இசைந்திருந் தானே
    .(1). கியங்கி யயந்திரு

    .439.
    ஒருங்கிய பாசத்துள் உத்தமச் .(1).சித்தன்
    இருங்கரை மேலிருந் தின்புற நாடி
    வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
    அருங்கரை பேணில் அழுக்கற லாமே
    .(1). சித்தின்

    .440.
    மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
    உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
    கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
    அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.

    .13. .(1).அருளல்
    .(1). அநுக்கிரகம்

    .441.
    எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
    வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
    ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை
    கட்டி .(1).அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே
    .(1). அவிழ்க்கின்ற

    .442.
    உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
    நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
    விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
    தச்சு மவனே சமைக்கவல் லானே

    .443.
    .(1).குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
    .(1).குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
    .(2).குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
    .(3).அசைவில் உலகம் அதுயிது வாமே
    .(1). குயவன்
    .(2). குயவனைப்
    .(3). அயைவில்

    .444.
    விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப்
    படையுடை யான்பரி சேஉல காக்குங்
    கொடையுடை யாங்குணம் எண்குண மாகுஞ்
    சடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே

    .445.
    உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
    உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
    உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
    உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே

    .446.
    படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
    படைத்துடை யான்பல தேவரை முன்னே
    படைத்துடை யான்பல சீவரை முன்னே
    படைத்துடை யான்பர மாகிநின் றானே

    .447.
    .(1).ஆதி படைத்தனன் ஐம்பெரும் .(2).பூதம்
    .(1).ஆதி படைத்தனன் .(3).ஆசில்பல் ஊழி
    .(1).ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
    .(1).ஆதி படைத்தவை தாங்கிநின் றானே
    .(1). அனாதி
    .(2). பூதங்கள்
    .(3). ஆயபல் ஊழிகள்

    .448.
    அகன்றான் .(1).அகலிடம் ஏழுமொன் றாகி
    இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
    சிவன்றான் பலபல .(2).சீவனும் ஆகி
    நவின்றான் உலகுறு நம்பனு மாமே
    .(1). கடலிடம்
    .(2). சீவரும்

    .449.
    உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
    விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
    மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
    கண்ணின்ற மாமணி .(1).மாபோத மாமே
    .(1). மாபோதகமே

    .450.
    ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
    பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
    நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
    சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே

    .14. .(1). கரு உற்பத்தி
    .(1). கர்ப்பக்கிரியை

    .451.
    ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
    சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
    ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
    தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே

    .452.
    அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
    செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
    பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
    பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே

    .453.
    இன்புறு காலத் திருவர்முன் பூறிய
    துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
    பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
    அன்புறு காலத் தமைத்தொழிந் தானே

    .454.
    கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
    புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
    திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
    உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே

    .455.
    விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
    ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
    பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
    ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே

    .456.
    பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்
    தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
    மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
    கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே

    .457.
    போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
    .(1).மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
    நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
    பாகன் .(2).விடானெனிற் .(3).பன்றியு மாமே
    .(1). ஆகிப்படைத்தன
    .(2). விடாவிடிற்
    .(3). பந்தியு

    .458.
    ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
    மாற எதிர்க்கில் .(1).அரியவன் றானாகும்
    நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்
    பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே
    .(1). அரியயன்

    .459.
    ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்
    பாயுங் கருவும் உருவா மெனப்பல
    காயங் கலந்தது காணப் பதிந்தபின்
    மாயங் கலந்த மனோலய மானதே

    .460.
    கர்ப்பத்துக் கேவல மாயாள் .(1).கிளைகூட்ட
    நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
    வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
    சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே
    .(1). கிளைக்கூட்ட

    .461.
    என்பால் மிடைந்து நரம்பு வா஢க்கட்டிச்
    செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
    இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
    .(1).நன்பால் ஒருவனை நாடுகின் றேனே
    .(1). நண்பால்

    .462.
    பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
    இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து
    குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
    விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே

    .463.
    ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
    வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
    பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
    சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே

    .464.
    சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
    அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
    புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
    அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே

    .465.
    போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்
    .(1).கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில்
    ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
    மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே
    .(1). கோகத்துள்

    .466.
    பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
    பிண்டத்தி னூடே பிறந்து மா஢த்தது
    அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
    அண்டத்து நாதத் தமர்ந்திருந் தானே

    .467.
    இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்
    துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
    நிலைபொறி முப்பது நீர்மை கொளுவி
    உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே

    .468.
    இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
    துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
    ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
    வெந்தது சூளை விளைந்தது தானே

    .469.
    அறியீ ருடம்பினி லாகிய வாறும்
    பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
    செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட
    தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே

    .470.
    உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
    மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
    திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
    கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே

    .471.
    கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
    மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
    கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
    நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே

    .472.
    பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
    காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
    நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
    பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே

    .473.
    எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
    கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
    ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை
    கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே

    .474.
    கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப்
    பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
    எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
    மண்முத லாக வகுத்துவைத் தானே

    .475.
    அருளல்ல தில்லை அரனவன் அன்றி
    அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
    தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
    வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே

    .476.
    வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
    தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
    பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
    வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே

    .477.
    மாண்பது வாக வளர்கின்ற .(1).வன்னியுங்
    காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
    பூண்பது மாதா பிதாவழி போலவே
    ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே
    .(1). வன்னியைக்

    .478.
    ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
    பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
    தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
    பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே

    .479.
    பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
    பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
    பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
    பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே

    .480.
    பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
    பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
    பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
    பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே

    .481.
    மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
    மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
    மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
    மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.

    .482.
    குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
    குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
    குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்
    குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே

    .483.
    கொண்டநல் வாயு இருவர்க்கும் .(1).ஒத்தெழில்
    கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
    கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்
    கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே
    .(1). ஒத்தேறில்

    .484.
    கோள்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
    தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
    பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
    போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே

    .485.
    உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
    பருவம தாகவே பாரினில் வந்திடும்
    மருவி வளர்ந்திடு மாயையி னாலே
    அருவம தாவதிங் காரறி வாரே

    .486.
    இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
    தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
    பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
    கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே

    .487.
    இன்புற நாடி இருவருஞ் .(1).சந்தித்துத்
    துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
    முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
    தொன்புற நாடிநின் றோதலு மாமே
    .(1). சிந்தித்துத்

    .488.
    குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
    அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
    இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
    மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே

    .489.
    முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்
    அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
    அதற்கது வாயின்ப மாவதுபோல
    அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே

    .490.
    ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
    ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
    வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
    தானே அறியுந் தவத்தினி னுள்ளே

    .491.
    பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
    உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
    திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
    திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே

    .15. மூவகைச்சீவ வர்க்கம்

    .492.
    சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
    ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச்
    சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச்
    சித்தம் புகுந்து சிவமய மாக்குமே

    .493.
    விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்
    தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்
    அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
    விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே

    .494.
    விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்
    தஞ்ஞானர் அட்டவித் தேசராஞ் சார்ந்துளோர்
    எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
    மெய்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே

    .495.
    இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
    இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
    இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்
    முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே

    .496.
    பெத்தெத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
    ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
    மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
    சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே

    .497.
    சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
    அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
    பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
    நவமான தத்துவம் .(1).நாடிக்கண் டோ ரே
    .(1). நாடிக்கொண் டாரே

    .498.
    விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
    விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
    அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
    விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே

    .499.
    விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய
    அனையான கன்மத்தி நால்சுவர் யோனிபுக்
    கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்
    மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே

    .500.
    ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர்
    காணிய விந்துவா நாத சகலாதி
    ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே
    சேணுயர் சத்தி சிவதத் துவமாமே
    வரன்றே
    சேணுயர் சத்தி சிவதத் துவமாமே

    16. பாத்திரம்.

    501.
    திலமத் தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால்
    பலமுத்தி சித்தி பரபோக மும்
    தரும்நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
    பலமும்அற் றெபர போகமும் குன்றுமே.

    .502.
    கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
    கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை
    நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
    சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

    503.
    கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
    மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்
    பொய்விட்டு நானே புரிசடை யானடி
    நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.

    504.
    ஆவன ஆவ அழிவ அழிவன
    போவன போவ புகுவ புகுவன
    காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
    ஏவன செய்யும் இளங்கிளை யோனே.

    17. அபாத்திரம்.

    505.
    கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
    பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
    சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
    காலங் கழிந்த பயிரது ஆகுமே.

    506.
    ஈவது யோக இயம நியமங்கள்
    சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
    ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு
    ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.

    507.
    ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
    தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
    காமாதி விட்டோ ர்க்குந் தரல்தந்து கற்பிப்போன்
    போமா நரகில் புகான்போதங் கற்கவே.

    508.
    மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
    அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்
    எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்
    நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.

    18. தீர்த்தம்.

    509.
    உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
    மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
    பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
    கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

    510.
    தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
    குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
    வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
    தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.

    511.
    உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
    கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
    வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
    பள்ளத்தல் இட்டதோர் பத்துள் ளாமே.

    512.
    அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
    செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
    மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
    பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.

    513.
    கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்.
    (1).உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்
    திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று
    உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.
    (1). உடலுறத்.

    514.
    கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
    கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
    கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
    கலந்தது நீர்அனல் காற்றது வாமே.

    19. .(1). திருக்கோயில்.
    (1). திருக்கோயிலிழிவு.

    515.
    தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
    ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
    சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
    காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.

    516.
    கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
    வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை
    முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
    வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

    517.
    ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
    போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
    கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
    சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

    518.
    முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
    மன்னர்க்குத் தீங்குள .(1).வாரி வளம்குன்றும்
    கன்னம் களவு மிகுத்திடும் காசினி
    என்னரு நந்தி எடுத்துரைத் தானே.
    (1). மாரி.

    519.
    பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
    போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
    பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
    சீர்க்கொண்ட நந்தி தொ஢ந்துரைத் தானே.

    20. அதோமுக தொ஢சனம்.

    520.
    எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
    வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
    அம்பவள மேனி அறுமுகன் போயவர்
    தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

    521.
    அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்
    கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
    உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
    வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

    522.
    செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
    பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
    மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்
    மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

    523.
    நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
    செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்
    முந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்
    அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.

    524.
    அதோமுகம் கீழண்ட மான புராணன்
    அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
    சதோமுகத் து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
    அதோமுகன் ஊழித் தலைவனு மாமே.

    525.
    அதோமுகம் மாமல ராயது கேளும்
    அதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து
    அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி
    அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே.

    21. சிவ நிந்தை.

    526.தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
    அளிவுறு வார்அம ராபதி நாடி
    எளியனென்று ஈசனை நீசர் இகழில்
    கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.

    527.
    முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
    விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
    அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்
    தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே.

    528.
    அப்பகை யாலே அசுரரும் தேவரும்
    நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
    எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
    பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.

    529.
    போகமும் மாதர் புலவி அதுநினைந்து
    ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்
    வேதிய ராயும் விகிர்தன்நாம் என்கின்ற
    நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.

    22. குரு நிந்தை.

    530.
    பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
    உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
    கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
    பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.

    531.
    ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
    சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
    ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம்
    .(1). வாரிடைக் கிருமியாய் .(2).மாய்வர் மண்ணிலே.
    (1). பாரிடைக்.
    (2). படிகுவர், பழகுவர்.

    532.
    பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
    சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
    அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் .(1). மாண்டிடும்
    சத்தியம் .(2).ஈது சதாநந்தி ஆணையே.
    (1). மாய்ந்திடுஞ்.
    (2). சொன்னோம்.

    533.
    மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
    சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
    நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
    வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

    534.
    ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
    தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
    வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
    நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

    535.
    சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வா஢ன்
    நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
    தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
    பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.

    536.
    கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
    மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
    கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
    கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே.

    23. மயேசுர நிந்தை.

    537.
    ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
    ஆண்டான் அடியவர் ஐயமேற் .(1).றுண்பவர்
    ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்
    தாம்தாம் விழுவது தாழ்நர காமே.
    (1). றுண்பார்.

    538.
    ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
    ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
    யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
    போன பொழுதே புகுஞ்சிவ போகமே.

    24. பொறையுடைமை.

    539.
    பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
    முற்றிக் கிடந்தது மூக்கையும் .(1). நாவையும்
    தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
    வற்றா தொழிவது மாகமை யாமே.
    (1). நாவியும்.

    540.
    ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
    பாலொத்த .(1).மேனியன் பாதம் பணிந்துய்ய
    மாலுக்கும் ஆதி பிரமற்கும் .(2).மன்னவன்.
    (3).ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே
    .(1). மேனி பணிந்தடியேன் தொழ.
    (2). ஒப்புநீ.
    (3). ஞாலத்து நம்மடி நல்கிடென்றாலே.

    541.
    ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்
    சேனை வளைந்து திசைதொரும் கைதொழ
    ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
    ஏனை .(1).விளைந்தருள் எட்டலு மாமே.
    (1). வளைந்தருள்.

    542.
    வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
    பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
    கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
    எல்லையி லாத இலயம்உண் டாமே.

    25. பெரியாரைத் துணைகோடல்.

    543.
    ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
    பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்
    தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்
    கூடவல் லாரடி கூடுவன் யானே.

    544.
    தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
    மாமனதது அங்குஅன்பு வைத்தது இலையாகும்
    நீஇடர்ப் பட்டிருநது என்செய்வாய் நெஞ்சமே
    போமிடத் து என்னொடும் போதுகண் டாயே.

    545.
    அறிவார் அமரர் தலைவனை நாடிச்
    செறிவார் பெறுவர் .(1). சிலர்தத் துவத்தை
    நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
    பெரியார் உடன்கூடல் போ஢ன்ப மாமே.
    (1). சிவதத்துவத்தை.

    546.
    தார்சடை யான்தன் தமராய் உலகினில்
    போர புகழா எந்தை பொன்னடி சேருவர்
    வாயடை யாவுள்ளம் தேர்வார்ககு அருள்செய்யும்
    கோவந்தடைந் து அந்நெறி கூடலு மாமே.

    547.
    உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
    படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
    கடையார நின்றவர் கண்டறி விப்ப
    உடையான் வருகென ஓலம் என் றாரே.

    548.
    அருமைவல் லோன்கலை .(1).ஞானத்துள் தோன்றும்
    பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
    உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்
    திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.
    (1). ஞாலத்துள்

    இரண்டாம் தந்திரம் முற்றிற்று