MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    ஸ்ரீ:
    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    திருமழிசைபிரான் அருளிச்செய்த
    நான்முகன் திருவந்தாதி

    சீராமப்பிள்ளை அருளிச்செய்தது
    நேரிசை வெண்பா
    திருமழிசைப்பிரானடி வாழ்த்து

    நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்
    கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்
    மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
    மழிசைப் பரனடியே வாழ்த்து

    2382:
    நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
    தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
    அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
    சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1

    2383:
    தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்
    ஆருமறியார் அவன்பெருமை, ஓரும்
    பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்
    அருள்முடிவ தாழியான் பால் 2

    2384:
    பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,
    ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத்
    தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
    அருபொருளை யானறிந்த வாறு? 3

    2385:
    ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,
    கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, - வேறொருவர்
    இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்
    சொல்லானைச் சொன்னேன் தொகுத்து 4

    2386:
    தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,
    வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, - உகத்தில்
    ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,
    அருநான்கு மானாய் அறி 5

    2387:
    அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,
    சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய
    மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்
    ஈனவரே யாதலால் இன்று. 6

    2388:
    இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
    நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
    நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
    நீயென்னை யன்றி யிலை 7

    2389:
    இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
    சிலைகொண்ட செங்கண்மால் சேரா - குலைகொண்ட
    ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த
    கூரம்பன் அல்லால் குறை 8

    2390:
    குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
    மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, - கறைகொண்ட
    கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
    அண்டத்தான் சேவடியை ஆங்கு 9

    2391:
    ஆங்கார வாரம் அதுகேட்டு, அழலுமிழும்
    பூங்கார் அரவணையான் பொன்மேனி, - யாங்காண
    வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான்
    வல்லரே யல்லரே? வாழ்த்து 10

    2392:
    வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்
    தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த
    துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் த்ன்னை
    வழாவண்கை கூப்பி மதித்து 11

    2393:
    மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ
    மதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித்தாய்
    மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி
    விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு 12

    2394:
    வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்
    கூடாக்கு நின்றூண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்
    மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு
    நற்பொருள்தான் நாரா யணன் 13

    2395:
    நாரா யணனென்னை யாளி, நரகத்துச்
    சேராமல் காக்கும் திருமால்தன், பேரான
    பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
    ஆசைப்பட் டாழ்வார் பலர் 14

    2396:
    பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்
    மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்
    மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்
    நீர்க்கண்டன் கண்ட நிலை 15

    2397:
    நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
    தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்
    போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய
    தேராழி யால்மறைத்தா ரால் 16

    2398:
    ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
    மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்
    அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்
    வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு 17

    2399:
    மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
    கூறகக் கீறிய கோளரியை, - வேறாக
    ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்
    சார்த்தி யிருப்பார் தவம் 18

    2400:
    தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
    அவம்செய்த ஆழியா யன்றே, உவந்தெம்மைக்
    காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்
    ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ 19

    2401:
    நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
    நீயே தவத்தேவ தேவனும், - நீயே
    எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
    திருசுடரு மாய இவை 20

    2402:
    இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
    இவையா எரிவட்டக் கண்கள், - இவையா
    எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
    அரிபொங்கிக் காட்டும் அழகு ? 21

    2403:
    அழகியான் தானே அரியுருவன் தானே
    பழகியான் தாளே பணிமின், - குழவியாய்த்
    தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
    மீனா யுயிரளிக்கும் வித்து 22

    2404:
    வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
    பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த
    கார்மேக மன்ன கருமால் திருமேனி,
    நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 23

    2405:
    நிகழ்ந்தாய்பால் பொன்பசுவப்புக் கார்வண்ணம் நான்கும்
    இகழ்ந்தா யிருவரையும் வீயப், - புகழ்ந்தாய்
    சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்
    மனப்போர் முடிக்கும் வகை 24

    2406:
    வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்
    வகையால் வருவதொன் றுண்டே, வகையால்
    வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்
    வயிர வழக்கொழித்தாய் மற்று 25

    2407:
    மற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை,
    கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்
    கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்
    கண்டுகொள் கிற்குமா று 26

    2408:
    மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
    பேறாகக் கொள்வனோ பேதைகாள், நீறாடி
    தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை
    யான்காண வல்லேற் கிது 27

    2409:
    இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,
    இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, - இதுவிலங்கை
    தானொடுங்க வில்_டங்கத் தண்தா ரிராவணனை,
    ஊனொடுங்க எய்தான் உகப்பு. 28

    2410:
    உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
    மகப்புருவன் தானே மதிக்கில், - மிகப்புருவம்
    ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்
    அன்றிக்கொண் டெய்தான் அவன். 29

    2411:
    அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
    அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன
    துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
    வெள்ளத் தரவணையின் மேல். 30

    2412:
    மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்
    தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர்
    பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்
    கருமாயம் பேசில் கதை 31

    2413:
    கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள
    உதைப்பளவு போதுபோக் கின்றி, - வதைப் பொருள்தான்
    வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ
    ஆய்ந்த குணத்தான் அடி 32

    2414:
    அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை
    பிடித்தொசித்துப் பேய்முலைநஞ் சுண்டு, - வடிப்பவள
    வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,
    கோப்பின்னு மானான் குறிப்பு. 33

    2415:
    குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
    குறிப்பெனக்கு நன்மை பயக்க, - வெறுப்பனோ
    வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
    தான்கடத்தும் தன்மையான் தாள்

    2416:
    தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
    வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம்
    வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
    ஐந்தலைவாய் நாகத் தணை? 35

    2417:
    நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
    நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
    தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
    அணைப்பார் கருத்தனா வான். 36

    2418:
    வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,
    தானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு
    கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,
    அண்டந் திருமால் அகைப்பு. 37

    2419:
    அகைப்பில் மனிசரை யாறு சமயம்
    புகைத்தான், பொருகடல்நீர் வண்ணன், - உகைக்குமேல்
    எத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும்,
    அப்போ தொழியும் அழைப்பு. 38

    2420:
    அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
    இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே
    ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை
    வெருவி யரவொடுங்கும் வெற்பு. 39

    2421:
    வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி
    நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், - கற்கின்ற
    _ல்வலையில் பட்டிருந்த _லாட்டி கேள்வனார்,
    கால்வலையில் பட்டிருந்தேன் காண். 40

    2422:
    காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
    ஓண விழவில் ஒலியதிர, பேணி
    வருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய்,
    திருவேங் கடமதனைச் சென்று. 41

    2423:
    சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,
    நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்
    கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,
    அடிக்கமலம் இட்டேத்து மங்கு. 42

    2424:
    மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை
    கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், - திங்கள்
    சடையேற வைத்தானும் தாமரைமே லானும்
    குடையேறத் தாம்குவித்துக் கொண்டு. 43

    2425:
    கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
    தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,
    போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,
    போம்குமர ருள்ளீர் புரிந்து. 44

    2426:
    புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
    பரிந்து படுகாடு நிற்ப, - தெரிந்தெங்கும்
    தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
    வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. 45

    2427:
    வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்
    றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, - எப்பாடும்
    வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,
    நாடுவளைத் தாடுமேல் நன்று. 46

    2428:
    நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்,
    பொன்மணியும் முத்தமும் பூமரமும், - பன்மணிநீ
    ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
    வேடு முடைவேங் கடம்.

    2429:
    வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
    வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், - வேங்கடமே
    தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
    வானவரைக் காப்பான் மலை. 48

    2430:
    மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
    தலையாமை தானொருகை பற்றி, - அலையாமல்
    பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,
    கூறுவதே யாவர்க்கும் கூற்று. 49

    2431:
    கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ
    மாற்றமும் சாரா வகையறிந்தேன், - ஆற்றங்
    கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்
    உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு. 50

    2432:
    எனக்காவா ராரொருவ ரே,எம் பெருமான்
    தனக்காவான் தானேமற் றல்லால், புனக்காயா
    வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு
    விண்ணெல்லா முண்டோ விலை? 51

    2433:
    விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
    தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால்
    விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
    கடமுண்டார் கல்லா தவர். 52

    2434:
    கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்
    அல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத
    தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்
    தேவரைத் தேறல்மின் தேவு. 53

    2435:
    தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
    மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய்
    நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
    கற்கின்ற தெல்லாம் கடை. 54

    2436:
    கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
    இடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற
    நிரோத மேனி நெடுமாலே, நின்னடியை
    யாரோத வல்லா ரவர்? 55

    2437:
    அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
    எவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக்
    கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
    குடனின்று தோற்றா னொருங்கு. 56

    2438:
    ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,
    பெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த
    வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்
    ஆனவர்தா மல்லாக தென்? 57

    2439:
    என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,
    மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச
    மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்
    தாயனுக் காக்கினேன் அன்பு. 58

    2440:
    அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
    கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை
    கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
    ஆள்வாய்க் கடியேன்நான் ஆள். 59

    2441:
    ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்
    தாட்பார்த் துழிதருவேன் தன்மையை, கேட்பார்க்
    கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
    விரும்புவதே விள்ளேன் மனம் 60

    2442:
    மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,
    தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்
    இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,
    சென்றொன்றி நின்ற திரு. 61

    2443:
    திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,
    கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த
    மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,
    தார்தன்னைச் சூடித் தரித்து. 62

    2444:
    தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,
    விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி
    வாசித்தும் கேட்டும் வணங்க்கி வழிபட்டும்,
    பூசித்தும் போக்கினேன் போது. 63

    2445:
    போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்
    காதானை யாதிப் பெருமானை,- நாதானை
    நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
    சொல்லானை, சொல்லுவதே சூது. 64

    2446:
    சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை
    மாதாய மாலவனை மாதவனை, - யாதானும்
    வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்
    தில்லையோ சொல்லீ ரிடம்? 65

    2447:
    இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு
    படநா கணைநெடிய மாற்க்கு,- திடமாக
    வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்
    வையேனாட் செய்யேன் வலம். 66

    2448:
    வலமாக மாட்டாமை தானாக, வைகல்
    குலமாக குற்றம்தா னாக,- நலமாக
    நாரணனை நம்பதியை ஞானப் பெருமானை,
    சீரணனை யேத்தும் திறம். 67

    2449:
    திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
    மறந்தும் புறந்தொழா மாந்தர்,- இறைஞ்சியும்
    சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்
    தூதுவரைக் கூவிச் செவிக்கு. 68

    2450:
    செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
    புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
    நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
    மறைப்பொருளும் அத்தனையே தான். 69

    2451:
    தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,
    ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும்,- யானொருவன்
    இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்
    சென்றாங் கடிப்படுத்த சேய். 70

    2452:
    சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
    ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
    றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
    ஏதிலராய் மெய்ஞ்ஞான மில். 71

    2453:
    இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்,
    சொல்லற மல்லனவும் சொல்லல்ல,- நல்லறம்
    ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே
    யாவதீ தன்றென்பா ரார்? 72

    2454:
    ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,
    பேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த
    கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன் வைத்த
    பண்டைத்தா னத்தின் பதி. 73

    2455:
    பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,
    மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்
    வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
    அல்லதொன் றேத்தாதென் நா. 74

    2456:
    நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
    தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு
    வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
    செல்வனார் சேவடிமேல் பாட்டு. 75

    2457:
    பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
    ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட
    மனுவும் சுருதி மறைநான்கும் மாயன்
    றனமாயை யிற்பட்ட தற்பு. 76

    2458:
    தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்
    கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்ட
    வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,
    எவ்வினையும் மாயுமால் கண்டு. 77

    2459:
    கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்
    கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, - வண்டலம்பும்
    தாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து, அங்
    காரலங்க லானமையா லாய்ந்து. 78

    2460:
    ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால்
    வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், - ஏய்ந்ததம்
    மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்
    வைகுந்தம் காண்பார் விரைந்து. 79

    2461:
    விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,
    கரந்துலகம் காத்தளித்த கண்ணன், - பரந்துலகம்
    பாடின ஆடின கேட்டு, படுநரகம்
    வீடின வாசற் கதவு. 80

    2462:
    கதவு மனமென்றும் காணலா மென்றும்,
    குதையும் வினையாவி தீர்ந்தேன், - விதையாக
    நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்,
    கற்றமொழி யாகிக் கலந்து. 81

    2463:
    கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை
    நலந்தானு மீதொப்ப துண்டே?, - அலர்ந்தலர்கள்
    இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்
    விட்டேத்த மாட்டாத வேந்து. 82

    2464:
    வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
    மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத்
    தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,
    பின்னால்தான் செய்யும் பிதிர். 83

    2465:
    பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
    எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும்
    கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
    தொழக்காதல் பூண்டேன் தொழில். 84

    2466:
    தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,
    பொழுதெனக்கு மற்றதுவே போதும், - கழிசினத்த
    வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,
    வில்லாளன் நெஞ்சத் துளன். 85

    2467:
    உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
    உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய்
    தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
    என்னொப்பார்க் கீச னிமை. 86

    2468:
    இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,
    சமய விருந்துண்டார் காப்பார், சமயங்கள்
    கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
    உண்டா னுலகோ டுயிர். 87

    2469:
    உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,
    அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச்
    சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்
    பந்தனையார் வாழ்வேல் பழுது. 88

    2470:
    பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,
    வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை,
    கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
    விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு. 89

    2471:
    வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
    பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த
    வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
    தாழா யிருப்பார் தமர் 90

    2472:
    தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்
    அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள்
    தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்
    தாள்தா மரையடைவோ மென்று 91

    2473:
    என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து
    நின்று மிருந்தும் நெடுமாலை - என்றும்
    திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,
    கருவிருந்த நாள்முதலாக் காப்பு. 92

    2474:
    காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
    ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை
    கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை
    விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம். 93

    2475:
    மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக
    கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த
    பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு
    வேம்பும் கறியாகும் ஏன்று. 94

    2476:
    ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை
    ஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன்
    கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை
    இடநாடு காண இனி. (2) 95

    2477:
    இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
    இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை, - இனியறிந்தேன்
    காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
    நாரணன்நீ நன்கறிந்தேன் நான். (2) 96

    திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.