MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    நான்காம்பத்து

    முதல் திருமொழி - கதிராயிரம்

    (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும்,
    கண்டார் சிலருமாகக் கூறுதல்)
    அறுசீர்க்கழிநெடிலடியசிரியவிருத்தம்

    328:

    கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்
    எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
    அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய்
    உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். (2) 1.

    329:
    நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்
    ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
    காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க
    வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர். 2.

    330:
    கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய
    சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்
    தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப
    அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர். 3.

    331:
    தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட
    மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன்
    ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும்
    வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர். 4.

    332:
    நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால்
    சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல்
    வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு
    தேரேற்றி சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர். 5.

    333:
    பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க
    வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல்
    பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை
    எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர். 6.

    334:
    வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன்
    உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்
    வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று
    கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர். 7.

    335:
    நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே
    நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன்
    ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை
    பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர். 8.

    336:
    மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம்
    திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்
    எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து
    வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர். 9.

    337:
    கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து
    புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை
    திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்
    பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. (2) 10.

    இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
    (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு)

    கலிநிலைத்துறை

    338:
    அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை
    குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை
    சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர்
    சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. (2) 1.

    339:
    வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை
    பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை
    எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி
    செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே. 2.

    340:
    தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை
    தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
    எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை
    அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே. 3.

    341:
    ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம்
    கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை
    வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி
    தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 4.

    342:
    ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன்
    ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை
    கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன்
    திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே. 5.

    343:
    ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை
    சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை
    ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும்
    சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 6.

    344:
    மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்
    முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை
    கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன்
    தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 7.

    345:
    குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச்
    சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
    அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி
    சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 8.

    346:
    சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு பூதங்கள்
    அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை
    இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான்
    சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே. 9.

    347:
    எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார்
    விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை
    பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவாய்த்
    தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 10.

    348:
    மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை
    கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை
    விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல்
    கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. (2) 11.

    மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
    (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு)

    கலிநிலைத்துறை

    349:
    உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற
    உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை
    பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு
    விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. (2) 1.

    350:
    கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும்
    வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை
    நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை
    செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே. 2.

    351:
    மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து
    கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை
    புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று
    பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. 3.

    352:
    மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த
    காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை
    கோவலர்கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப்
    பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே. 4.

    353:
    பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை
    அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை
    குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை
    நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. (2) 5.

    354:
    பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம்
    ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
    பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக
    தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே. 6.

    355:
    கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள்
    இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை
    கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம்
    இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. 7.

    356:
    எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய
    வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த
    அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று
    திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. 8.

    357:
    கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து
    மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை
    ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று
    ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. 9.

    358:
    ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக
    ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை
    ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும்
    ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. (2) 10.

    359:
    மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை
    நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை
    மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில்
    மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. (2) 11.

    நான்காம் திருமொழி - நாவகாரியம்
    (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும்,
    அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)

    எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

    360:
    நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார்
    தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்
    மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத அப்
    பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. (2) 1.

    361:
    குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய்
    செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
    துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்
    பெற்றதாயர்வயிற்றினைப் பெருநோய்செய்வான்பிறந்தார்களே. 2.

    362:
    வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும்
    திண்ணைசூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன்திருநாமங்கள்
    எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய்
    உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே. 3.

    363:
    உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள்
    நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர்
    நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர்
    பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ. 4.

    364:
    ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய்
    தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர்
    நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை
    பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே. 5.

    365:
    பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால்
    ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
    நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய
    பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே. 6.

    366:
    குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து
    திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர்
    கருந்தடமுகில்வண்ணனைக் கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள்
    இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ. 7.

    367:
    நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும்
    தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்
    குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள்
    விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே. 8.

    368:
    கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்
    செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
    நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால்
    எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே. 9.

    369:
    காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு
    தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
    கேசவா. புருடோ த்தமா. கிளர்சோதியாய். குறளா. என்று
    பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே. 10.

    370:
    சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
    ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும்
    கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்
    ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. (2) 11.

    ஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
    (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு
    கிதோபதேசம் செய்தல்)

    எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

    371:
    ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
    அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி
    வாசவார்குழலாளென்றுமயங்கி
    மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே
    கேசவா. புருடோ த்தமா. என்றும்
    கேழலாகியகேடிலீ. என்றும்
    பேசுவாரவர்எய்தும்பெருமை
    பேசுவான்புகில்நம்பரமன்றே. (2) 1.

    372:
    சீயினால்செறிந்தேறியபுண்மேல்
    செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும்
    ஈயினால்அரிப்புண்டுமயங்கி
    எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம்
    வாயினால்நமோநாரணாவென்று
    மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி
    போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்
    பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே. 2.

    373:
    சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்
    சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து
    ஆர்வினவிலும்வாய்திறவாதே
    அந்தகாலம்அடைவதன்முன்னம்
    மார்வமென்பதோர்கோயிலமைத்து
    மாதவனென்னும்தெய்வத்தைநட்டி
    ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு
    அரவதண்டத்தில்உய்யலுமாமே. 3.

    374:
    மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து
    மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி
    காலுங்கையும்விதிர்விதிர்த்தேறிக்
    கண்ணுறக்கமதாவதன்முன்னம்
    மூலமாகியஒற்றையெழுத்தை
    மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி
    வேலைவண்ணனைமேவுதிராகில்
    விண்ணகத்தினில்மேவலுமாமே. 4.

    375:
    மடிவழிவந்துநீர்புலன்சோர
    வாயிலட்டியகஞ்சியும்மீண்டே
    கடைவழிவாரக்கண்டமடைப்பக்
    கண்ணுறக்கமதாவதன்முன்னம்
    தொடைவழிஉம்மைநாய்கள்கவரா
    சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார்
    இடைவழியில்நீர்கூறையும்இழவீர்
    இருடீகேசனென்றேத்தவல்லீரே. 5.

    376:
    அங்கம்விட்டவையைந்துமகற்றி
    ஆவிமூக்கினில்சோதித்தபின்னை
    சங்கம்விட்டவர்கையைமறித்துப்
    பையவேதலைசாய்ப்பதன்முன்னம்
    வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை
    மதுசூதனனைமார்பில்
    தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம்
    சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே. 6.

    377:
    தென்னவன்தமர்செப்பமிலாதார்
    சேவதக்குவார்போலப்புகுந்து
    பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப்
    பின்முன்னாகஇழுப்பதன்முன்னம்
    இன்னவன்இனையானென்றுசொல்லி
    எண்ணிஉள்ளத்திருளறநோக்கி
    மன்னவன்மதுசூதனென்பார்
    வானகத்துமன்றாடிகள்தாமே. 7.

    378:
    கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து
    குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து
    பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு
    நரிப்படைக்குஒருபாகுடம்போலே
    கோடிமூடியெடுப்பதன்முன்னம்
    கௌத்துவமுடைக்கோவிந்தனோடு
    கூடியாடியஉள்ளத்தரானால்
    குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே. 8.

    379:
    வாயொருபக்கம்வாங்கிவலிப்ப
    வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற
    தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்
    தாரமும்ஒருபக்கம்அலற்ற
    தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்
    செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற
    மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு
    அரவதண்டத்தில்உய்யலுமாமே. 9.

    380:
    செத்துப்போவதோர்போதுநினைந்து
    செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல்
    பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப்
    பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன்
    சித்தம்நன்கொருங்கித்திருமாலைச்
    செய்தமாலைஇவைபத்தும்வல்லார்
    சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்
    சென்றசிந்தைபெறுவர்தாமே. (2) 10.

    ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
    (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை
    இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்)

    கலித்துறை

    381:
    காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
    ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்.
    கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ
    நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள். (2) 1.

    382:
    அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால்
    மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்.
    செங்கணெடுமால். சிரீதரா. என்றுஅழைத்தக்கால்
    நங்கைகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 2.

    383:
    உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து
    எச்சம்பொலிந்தீர்காள். எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்?
    பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே
    நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 3.

    384:
    மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை
    மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை
    வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால்
    நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 4.

    385:
    மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை
    மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை
    குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால்
    நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 5.

    386:
    நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு
    கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே
    சாடிறப்பாய்ந்ததலைவா. தாமோதரா. என்று
    நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 6.

    387:
    மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு
    எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்.
    கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே
    நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 7.

    388:
    நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்
    நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்
    செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்
    நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 8.

    389:
    ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்
    மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு
    கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ
    நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 9.

    390:
    சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய
    வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த
    ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர்
    பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. (2) 10.

    ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
    (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை)

    அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

    391:
    தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய்
    எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை
    கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும்
    கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே. (2) 1.

    392:
    சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச் சந்திரன்வெங்கதிர்அஞ்ச
    மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு
    நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும்
    கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 2.

    393:
    அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு
    எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை
    சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி
    கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 3.

    394:
    இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை
    நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான்
    இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட
    கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 4.

    395:
    உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும்
    மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு
    எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம்
    கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 5.

    396:
    தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு
    மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு
    அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட
    கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 6.

    397:
    விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி
    மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு
    அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும்
    கற்பகமலரும்கலந்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 7.

    398:
    திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய்
    அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு
    நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு
    கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே. 8.

    399:
    வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி
    இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை
    தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக்கரைமரம்சாடி
    கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. (2) 9.

    400:
    மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
    ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை
    மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான்
    கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. (2) 10.

    401:
    பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல்
    வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று
    தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு
    கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே. (2) 11.

    எட்டாம் திருமொழி - மாதவத்தோன்
    (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1)

    தரவு கொச்சகக்கலிப்பா

    402:
    மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை
    ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர்
    தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும்
    போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. (2) 1.

    403:
    பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்
    இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர்
    மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார்
    சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. 2.

    404:
    மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார்
    உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர்
    திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை
    பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே. 3.

    405:
    கூந்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு
    ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய
    கான்தொடுத்தநெறிபோகிக் கண்டகரைக்களைந்தானூர்
    தேந்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே. 4.

    406:
    பெருவரங்களவைபற்றிப் பிழகுடையஇராவணனை
    உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர்
    குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ்
    திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே. 5.

    407:
    கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே
    ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர்
    தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து
    யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே. 6.

    408:
    கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய
    பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர்
    தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு
    தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே. 7.

    409:
    வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய்
    எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர்
    எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி
    மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே. 8.

    410:
    குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல்
    நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர்
    குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி
    மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே. 9.

    411:
    பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை
    செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல்
    திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு
    இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. (2) 10.

    ஒன்பதாம் திருமொழி - மரவடியை
    (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2)

    அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

    412:
    மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
    வைத்துப்போய்வானோர்வாழ
    செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து
    உலகாண்டதிருமால்கோயில்
    திருவடிதன்திருவுருவும்
    திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று
    உருவுடையமலர்நீலம்
    காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே. (2) 1.

    413:
    தன்னடியார்திறத்தகத்துத்
    தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல்
    என்னடியார்அதுசெய்யார்
    செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும்
    மன்னுடையவிபீடணற்கா
    மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த
    என்னுடையதிருவரங்கற்கன்றியும்
    மற்றொருவர்க்குஆளாவரே? (2) 2.

    414:
    கருளுடையபொழில்மருதும்
    கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும்
    உருளுடையசகடரையும்மல்லரையும்
    உடையவிட்டுஓசைகேட்டான்
    இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
    ஏற்றிவைத்துஏணிவாங்கி
    அருள்கொடுத்திட்டுஅடியவரை
    ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே. 3.

    415:
    பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய
    துவரையென்னும்
    அதில்நாயகராகிவீற்றிருந்த
    மணவாளர்மன்னுகோயில்
    புதுநாண்மலர்க்கமலம்
    எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான்
    பொதுநாயகம்பாவித்து
    இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே. 4.

    416:
    ஆமையாய்க்கங்கையாய்
    ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய்
    நான்முகனாய்நான்மறையாய்
    வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான்
    சேமமுடைநாரதனார்
    சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில்
    பூமருவிப்புள்ளினங்கள்
    புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே. 5.

    417:
    மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
    அவர்களையேமன்னராக்கி
    உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
    உயிராளன்உறையும்கோயில்
    பத்தர்களும்பகவர்களும்
    பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும்
    சித்தர்களும்தொழுதிறைஞ்சத்
    திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே. 6.

    418:
    குறட்பிரமசாரியாய்
    மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி
    இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை
    கொடுத்துகந்தஎம்மான்கோயில்
    எறிப்புடையமணிவரைமேல்
    இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய்
    சிறப்புடையபணங்கள்மிசைச்
    செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே. 7.

    419:
    உரம்பற்றிஇரணியனை
    உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி
    சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
    வாயலரத்தெழித்தான்கோயில்
    உரம்பெற்றமலர்க்கமலம்
    உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட
    வரம்புற்றகதிர்ச்செந்நெல்
    தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே. 8.

    420:
    தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய்
    அரியாய்க்குறளாய்
    மூவுருவினிராமனாய்க்
    கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில்
    சேவலொடுபெடையன்னம்
    செங்கமலமலரேறிஊசலாடி
    பூவணைமேல்துதைந்தெழு
    செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே. 9.

    421:
    செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
    செருச்செய்யும்நாந்தகமென்னும்
    ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன்
    விழுக்கையாளன்
    இரவாளன்பகலாளன்என்னையாளன்
    ஏழுலகப்பெரும்புரவாளன்
    திருவாளன்இனிதாகத்
    திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே. 10.

    422:
    கைந்நாகத்திடர்கடிந்த
    கனலாழிப்படையுடையான்கருதும்கோயில்
    தென்னாடும்வடநாடும்தொழநின்ற
    திருவரங்கம்திருப்பதியின்மேல்
    மெய்ந்நாவன்மெய்யடியான்
    விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார்
    எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
    இணைபிரியாதிருப்பர்தாமே. (2) 11.

    பத்தாம் திருமொழி - துப்புடையாரை
    (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே
    பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.)

    எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

    423:
    துப்புடையாரைஅடைவதெல்லாம்
    சோர்விடத்துத்துணையாவரென்றே
    ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
    ஆனைக்குநீஅருள்செய்தமையால்
    எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
    அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன்
    அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
    அரங்கத்தரவணைப்பள்ளியானே. (2) 1.

    424:
    சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
    சங்கொடுசக்கரமேந்தினானே.
    நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
    செய்வதாநிற்பர்நமன்தமர்கள்
    போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
    புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை
    ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
    அரங்கத்தரவணைப்பள்ளியானே. 2.

    425:
    எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
    எற்றிநமன்தமர்பற்றும்போது
    நில்லுமினென்னும்உபாயமில்லை
    நேமியும்சங்கமும்ஏந்தினானே.
    சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
    சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
    அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
    அரங்கத்தரவணைப்பள்ளியானே. 3.

    426:
    ஒற்றைவிடையனும்நான்முகனும்
    உன்னையறியாப்பெருமையோனே.
    முற்றஉலகெல்லாம்நீயேயாகி
    மூன்றெழுத்தாயமுதல்வனேயா.
    அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி
    அஞ்சநமன்தமர்பற்றலுற்ற
    அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும்
    அரங்கத்தரவணைப்பள்ளியானே. 4.

    427:
    பையரவினணைப் பாற்கடலுள்
    பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி.
    உய்யஉலகுபடைக்கவேண்டி
    உந்தியில்தோற்றினாய்நான்முகனை
    வையமனிசரைப்பொய்யென்றெண்ணிக்
    காலனையும்உடனேபடைத்தாய்
    ஐய. இனிஎன்னைக்காக்கவேண்டும்
    அரங்கத்தரவணைப்பள்ளியானே. 5.

    428:
    தண்ணெனவில்லைநமன்தமர்கள்
    சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர்
    மண்ணொடுநீரும்எரியும்காலும்
    மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்.
    எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்
    எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
    அண்ணலே. நீஎன்னைக்காக்கவேண்டும்
    அரங்கத்தரவணைப்பள்ளியானே. 6.

    429:
    செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
    தேவர்கள்நாயகனே. எம்மானே.
    எஞ்சலிலென்னுடையின்னமுதே.
    ஏழுலகுமுடையாய். என்னப்பா.
    வஞ்சவுருவின்நமன்தமர்கள்
    வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது
    அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
    அரங்கத்தரவணைப்பள்ளியானே. 7.

    430:
    நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
    நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த
    ஊனேபுகேயென்றுமோதும்போது
    அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன்
    வானேய்வானவர்தங்களீசா.
    மதுரைப்பிறந்தமாமாயனே. என்
    ஆனாய். நீஎன்னைக்காக்கவேண்டும்
    அரங்கத்தரவணைப்பள்ளியானே. 8.

    431:
    குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா.
    கோநிரைமேய்த்தவனே. எம்மானே.
    அன்றுமுதல் இன்றறுதியா
    ஆதியஞ்சோதிமறந்தறியேன்
    நன்றும்கொடியநமன்தமர்கள்
    நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது
    அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
    அரங்கத்தரவணைப்பள்ளியானே. 9.

    432:
    மாயவனைமதுசூதனனை
    மாதவனைமறையோர்களேத்தும்
    ஆயர்களேற்றினைஅச்சுதனை
    அரங்கத்தரவணைப்பள்ளியானை
    வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன்
    விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
    தூயமனத்தனராகிவல்லார்
    தூமணிவண்ணனுக்காளர்தாமே. (2) 10.