MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    திருவாய் மொழி ஏழாம் பத்து

    3453
    உண்ணி லாவிய ஐவ ரால்குமை
    தீற்றி யென்னையுன் பாத பங்கயம்,
    நண்ணிலா வகையே நலிவா னின்ன மெண்ணு கின்றாய்,
    எண்ணி லாப்பெரு மாயனே. இமையோர்கள்
    ஏத்து முலக மூன்றுடை,
    அண்ண லே.அமு தே.அப்ப னே.என்னை யாள்வானே. (2) 7.1.1

    3454
    என்னை யாளும் வங்கோ வோரைந் திவைபெய்
    திராப்பகல் மோது வித்திட்டு,
    உன்னை நானணு காவகை செய்து போதி கண்டாய்,
    கன்ன லே.அமு தே.கார் முகில்வண்ண
    னே.கடல் ஞாலம் காக்கின்ற,
    மின்னு நேமியி னாய்.வினை யேனுடை வேதியனே. 7.1.2

    3455
    வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை
    மோது வித்து,உன் திருவடிச்
    சாதி யாவகை நீதடுத் தென்பெறு தியந்தோ,
    ஆதி யாகி யகலி டம்படைத் துண்டு மிழந்து
    கடந்திடந் திட்ட,
    சோதி நீண்முடி யாய்.தொண்ட னேன்மது சூதனனே. 7.1.3

    3456
    சூது நானறி யாவகை சுழற்றியோர்
    ஐவரைக் காட்டி,உன் அடிப்
    போது நானணு காவகை செய்து போதி கண்டாய்,
    யாதும் யாவரு மின்றிநின் னகம்பால்
    ஒடுக்கியோ ராலி னீளிலை,
    மீது சேர்குழவி. வினையேன் வினைதீர் மருந்தே. 7.1.4

    3457
    தீர்மருந் தின்றி யைந்து நோயடும்
    செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,
    நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான்
    ஒக்கின்றாய்,
    ஆர்ம ருந்தினி யாகுவர்? அடலாழி
    யேந்தி யசுரர் வன்குலம்,
    வேர்ம ருங்கறுத் தாய்.விண்ணு ளார்பெரு மானேயோ. 7.1.5

    3458
    விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய்
    வாரை யும்செறும் ஐம்பு லனிவை,
    மண்ணு ளென்னைப் பெற்றா லெஞ்செய்
    யாமற்று நீயும்விட்டால்?
    பண்ணு ளாய்.கவி தன்னு ளாய்.
    பத்தியினுள் ளாய்.பர மீசனே, வந்தென்
    கண்ணுளாய். நெஞ்சுளாய். சொல்லுளாய்.
    ஒன்று சொல்லாயே. 7.1.6

    3459
    ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத
    ஒரைவர் வன்கயவரை,
    என்று யான்வெல் கிற்பனுன் திருவரு ளில்லையேல்?,
    அன்று தேவர் அசுரர் வாங்க
    அலைகட லரவம் அளாவி,ஓர்
    குன்றம் வைத்த எந்தாய்.கொடியேன் பருகின் னமுதே. 7.1.7

    3460
    இன்ன முதெனத் தோன்றி யோரைவர்
    யாவரையும் மயக்க, நீவைத்த
    முன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன்
    சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக்
    கைதொழ வேயரு ளெனக்கு,
    என்னம் மா.என் கண்ணா. இமையோர்தம் குலமுதலே. 7.1.8

    3461
    குலமுத லிடும்தீ வினைக்கொடு வன்குழியினில்
    வீழ்க்கும் ஐவரை
    வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்,
    நிலமுத லினீவ் வுலகுக்கும் நிற்பன
    செல்வன என,பொருள்
    பலமுதல் படைத்தாய்.என் கண்ணா.என் பரஞ்சுடரே. 7.1.9

    3462
    என்பரஞ் சுடரே. என்றுன்னை அலற்றியுன்
    இணைத்தா மரைகட்கு,
    அன்புருகி நிற்கும் அதுநிற்கச் சுமடு தந்தாய்,
    வன்பரங்க ளெடுத்துஐவர் திசைதிசை
    வலித்தெற்று கின்றனர்
    முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ. 7.1.10

    3463
    கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள்
    படைத்தளித் துக்கெடுக் கும்,அப்
    புண்ட ரீகப்கொப் பூழ்ப்புனற் பள்ளி யப்பனுக்கே,
    தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
    சொல்லா யிரத்து ளிப்பத்தும்,
    கண்டு பாடவல் லார்வினை போம்கங்கு லும்பகலே. (2) 7.1.11

    3464
    கங்குலும் பகலும் கண் துயி லறியாள்
    கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
    சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்
    தாமரைக் கண் என்று தளரும்,
    எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும்
    இருநிலம் கைதுழா விருக்கும்,
    செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்.
    இவள்திறத் தெஞ்செய்கின் றாயே? (2) 7.2.1

    3465
    எஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா.
    என்னும்கண் ணீர்மல்க இருக்கும்,
    எஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்?
    என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்
    முன்செய்த வினையே. முகப்படாய் என்னும்
    முகில்வண்ணா. தகுவதோ? என்னும்,
    முஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய்.
    எங்கொலோ முடிகின்ற திவட்கே? 7.2.2

    3466
    வட்கிலள் இறையும் மணிவண்ணா. என்னும்
    வானமே நோக்கும்மை யாக்கும்,
    உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட
    ஒருவனே. என்னுமுள் ளுருகும்,
    கட்கிலீ. உன்னைக் காணுமா றருளாய்
    காகுத்தா. கண்ணனே. என்னும்,
    திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்.
    இவள்திறத் தென்செய்திட் டாயே? 7.2.3

    3467
    இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்
    எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,
    கட்டமே காதல். என்றுமூர்ச் சிக்கும்
    கடல்வண்ணா. கடியைகாண் என்னும்,
    வட்டவாய் நேமி வலங்கையா. என்னும்
    வந்திடாய் என்றென்றே மயங்கும்,
    சிட்டனே. செழுநீர்த் திருவரங் கத்தாய்.
    இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே? 7.2.4

    3468
    சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும்
    திருவரங் கத்துள்ளாய். என்னும்
    வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க
    வந்திடாய் என்றென்றே மயங்கும்,
    அந்திப்போ தவுணன் உடலிடந் தானே.
    அலைகடல் கடைந்தவா ரமுதே,
    சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
    தையலை மையல்செய் தானே. 7.2.5

    3469
    மையல்செய் தென்னை மனம்கவர்ந் தானே.
    என்னும் மா மாயனே. என்னும்,
    செய்யவாய் மணியே. என்னும் தண் புனல்சூழ்
    திருவரங் கத்துள்ளாய். என்னும்,
    வெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில்
    ஏந்தும்விண் ணோர்முதல். என்னும்,
    பைகொள்பாம் பணையாய். இவள்திறத் தருளாய்
    பாவியேன் செய்யற்பா லதுவே. 7.2.6

    3470
    பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய்.
    பற்றிலார் பற்றநின் றானே,
    காலசக் கரத்தாய். கடலிடங் கொண்ட
    கடல்வண்ணா. கண்ணணே. என்னும்,
    சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய்.
    என்னும் என் தீர்த்தனே. என்னும்,
    கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்
    என்னுடைக் கோமளக் கொழுந்தே. 7.2.7

    3471
    கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக்
    கோநிரை காத்தவன். என்னும்,
    அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும்
    அஞ்சன வண்ணனே. என்னும்,
    எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும்
    எங்ஙனே நோக்குகேன்? என்னும்,
    செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய்.
    என்செய்கேன் என்திரு மகட்கே? 7.2.8

    3472
    என்திரு மகள்சேர் மார்வனே. என்னும்
    என்னுடை யாவியே. என்னும்,
    நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட
    நிலமகள் கேள்வனே. என்னும்,
    அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட
    ஆய்மகள் அன்பனே. என்னும்,
    தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே.
    தெளிகிலேன் முடிவிவள் தனக்கே. (2) 7.2.9

    3473
    முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும்
    மூவுல காளியே. என்னும்,
    கடிகமழ் கொன்றைச் சடையனே. என்னும்
    நான்முகக் கடவுளே. என்னும்,
    வடிவுடை வானோர் தலைவனே. என்னும்
    வண்திரு வரங்கனே. என்னும்,
    அடியடை யாதாள் போலிவள் அணுகி
    அடைந்தனள் முகில்வண்ணன் அடியே. 7.2.10

    3474
    முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி
    உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,
    துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ்
    வண்குரு கூர்ச்சட கோபன்,
    முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை
    ஆயிரத் திப்பத்தும் வல்லார்,
    முகில்வண்ண வானத் திமையவர் சூழ
    இருப்பர்பே ரின்பவெள் ளத்தே. (2) 7.2.11

    3475
    வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித்
    தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே,
    புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்
    எஞ்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்,
    வெள்ளச் சுகமவன் வீற்றி ருந்த
    வேத வொலியும் விழா வொலியும்,
    பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும் அறாத்
    திருப்பே ரையில் சேர்வன் நானே. (2) 7.3.1

    3476
    நானக் கருங்குழல் தோழி மீர்காள்.
    அன்னை யர்காள்.அயல் சேரியீர்காள்,
    நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்
    என்வசம் அன்றிதி ராப்ப கல்போய்,
    தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ்
    தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
    வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன்
    செங்கனி வாயின் திறத்த துவே. 7.3.2

    3477
    செங்கனி வாயின் திறத்த தாயும்
    செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும்,
    சங்கொடு சக்கரம் கண்டு கந்தும்
    தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும்,
    திங்களும் நாளும் விழாவ றாத
    தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
    நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ.
    நாணும் நிரையு மிழந்த துவே. 7.3.3

    3478
    இழந்தவெம் மாமை திறத்துப் போன
    என்னெஞ்சி னாருமங் கே ஒழிந்தார்,
    உழந்தினி யாரைக்கொண் டெனு சாகோ?
    ஓதக் கடலொலி போல எங்கும்,
    எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு
    தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
    முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன்
    அன்னையர் காள்.என்னை யென்மு னிந்தே? 7.3.4

    3479
    முனிந்து சகடம் உதைத்து மாயப்
    பேய்முலை யுண்டு மருதி டைப்போய்,
    கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த
    கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,
    முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள்.
    முன்னி யவன்வந்து வீற்றி ருந்த,
    கனிந்த பொழில்திருப் பேரை யிற்கே
    காலம் பெறவென்னைக் காட்டு மினே. 7.3.5

    3480
    காலம் பெறவென்னைக் காட்டு மின்கள்
    காதல் கடலின் மிகப் பெரிதால்,
    நீல முகில்வண் ணத்தெம் பெருமான்
    நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,
    ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த
    நான்மறை யாளரும் வேள்வி யோவா,
    கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
    கூடு புனல்திருப் பேரை யிற்கே. 7.3.6

    3481
    பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை
    செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த,
    பேரையிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப்
    பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,
    ஆரை யினிங் குடையம் தோழி.
    என்னெஞ்சம் கூவ வல்லாரு மில்லை,
    ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது?
    என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே. 7.3.7

    3482
    கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக்
    கார்க்கடல் வண்ணனோ டெந்தி றத்துக்
    கொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக்
    கொண்டவென் காத லுரைக்கில் தோழீ,
    மண்டிணி ஞால முமேழ் கடலும்
    நீள்வி சும்பும் கழியப் பெரிதால்,
    தெண்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த
    தெந்திருப் பேரையில் சேர்வன் சென்றே. 7.3.8

    3483
    சேர்வஞ்சென் றென்னுடைத் தோழி மீர்காள்.
    அன்னையர் காள்.என்னைத் தேற்ற வேண்டா,
    நீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு?
    நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை,
    கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட
    கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த,
    ஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத்
    தென்திருப் பேரை யின்மா நகரே. 7.3.9

    3484
    நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
    நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்,
    சிகரம் அணிநெடு மாடம் நீடு
    தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,
    மகர நெடுங்குழைக் காதன் மாயன்
    நூற்றுவ ரையன்று மங்க நூற்ற,
    நிகரில் முகில்வண்ணன் நேமி யானென்
    னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே? 7.3.10

    3485
    ஊழிதோ றூழி யுருவம் பேரும்
    செய்கையும் வேறவன் வையங் காக்கும்,
    ஆழிநீர் வண்ணனை யச்சு தன்னை
    அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன,
    கேழிலந் தாதியோ ராயி ரத்துள்
    இவைதிருப் பேரையில் மேய பத்தும்,
    ஆழியங் கையனை யேத்த வல்லார்
    அவரடி மைத்திறத் தாழி யாரே. (2) 7.3.11

    3486
    ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
    வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்
    மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்
    ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. (2) 7.4.1

    3487
    ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
    வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
    மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்
    சாறு படவமு தங்கொண்ட நான்றே. 7.4.2

    3488
    நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்
    நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்
    நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்
    ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே. 7.4.3

    3489
    நாளு மெழநில நீரு மெழவிண்ணும்
    கோளு மெழேரி காலு மெழ,மலை
    தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்
    ஊளி யெழவுல கமுண்ட வூணே. 7.4.4

    3490
    ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்
    ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்
    ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்
    காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே. 7.4.5

    3491
    போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை
    சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை
    கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்
    ஆழ்துயர் செய்தசு ரரைக்கொல்லு மாறே. 7.4.6

    3492
    மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன
    நூறு பிணம்மலை போல்புர ள,கடல்
    ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்
    நீறு படவிலங் கைசெற்ற நேரே. 7.4.7

    3493
    நேர்சரிந் தாங்கொடிக் கோழிகொண் டான்,பின்னும்
    நேர்சரிந் தானெரி யுமன லோன்,பின்னும்
    நேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,அப்பன்
    நேர்சரி வாணந்திண் டோ ள்கொண்ட அன்றே. 7.4.8

    3494
    அன்றுமண் நீரெரி கால்விண் மலைமுதல்,
    அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்
    அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்
    அன்று முதலுல கம்செய் ததுமே. 7.4.9

    3495
    மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை
    வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன
    ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்
    தீமழை காத்துக் குன்ற மெடுத்தானே. 7.4.10

    3496
    குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,
    ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,
    நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை
    வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே. (2) 7.4.11

    3497
    கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
    புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
    நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
    நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே. (2) 7.5.1

    3498
    நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ,
    நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா,
    நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு,
    நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே? 7.5.2

    3499
    கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல் லால்மற்றூம் கேட்பரோ,
    கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுக ளேவையும்,
    சேட்பால் பழம்பகைவன் சிசு பாலன், திருவடி
    தாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே? 7.5.3

    3500
    தன்மை யறிபவர் தாமவற் காளன்றி யாவரோ,
    பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ்நெடுங் காலத்து,
    நன்மைப் புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி, தன்னுள்ளே
    தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே? 7.5.4

    3501
    சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழலன்றிச் சூழ்வரோ,
    ஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை,
    தாழப் படாமல்தன் பாலொரு கோட்டிடைத் தான்கொண்ட,
    கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே? 7.5.5

    3502
    கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ,
    வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு,
    ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய,
    கோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே? 7.5.6

    3503
    கண்டும் தெளிந்தும்கற் றார்க்கண்ணற் காளன்றி யாவரோ,
    வண்டுன் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
    இண்டைச் சடைமுடி யீசனுடன்கொண்டு சாச்சொல்ல,
    கொண்டங்குத் தன்னொடும் கொண்டுடன்சென்றதுணர்ந்துமே? 7.5.7

    3504
    செல்ல வுணர்ந்தவர் செல்வன்றன் சீரன்றிக் கற்பரோ,
    எல்லை யிலாத பெருந்தவத் தால்பல செய்மிறை,
    அல்லல் அமரரைச் செய்யும் இரணிய னாகத்தை,
    மல்லல் அரியுரு வாய்ச்செய்த மாயம் அறிந்துமே? 7.5.8

    3505
    மாயம் அறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,
    தாயம் செறுமொரு நூற்றுவர் மங்கவோ ரைவர்க்காய்,
    தேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை
    நாசம்செய் திட்டு, நடந்தநல் வார்த்தை யறிந்துமே? 7.5.9

    3506
    வார்த்தை யறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,
    போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு இறப்பிவை
    பேர்த்து, பெருந்துன்பம் வேரற நீக்கித்தன் தாளிங்கீழ்ச்
    சேர்த்து,அவன் செய்யும் சேமத்தையெண்ணித் தெளிவுற்றே? (2) 7.5.10

    3507
    தெளிவுற்று வீவன்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும்,
    தெளிவுற்ற கண்ணனை தென்குரு கூர்ச்சட கோபன்fசொல்,
    தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை பத்தும்வல் லாரவர்,
    தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே. (2) 7.5.11

    3508
    பாமரு மூவுலகும் படைத்த
    பற்ப நாபாவோ,
    பாமரு மூவுலகும் அளந்த
    பற்ப பாதாவோ,
    தாமரைக் கண்ணாவோ. தனியேன்
    தனியா ளாவோ,
    தாமரைக் கையாவோ. உன்னை
    யென்றுகொல் சார்வதுவே? (2) 7.6.1

    3509
    என்றுகொல் சேர்வதந் தோஅரன்
    நான்முக னேத்தும்,செய்ய
    நின்திருப் பாதத்தை யான்நிலம்
    நீரெரி கால்,விண்ணுயிர்
    என்றிவை தாம்முத லாமுற்று
    மாய்நின்ற எந்தாயோ,
    குன்றெடுத் தாநிரை மேய்த்தவை
    காத்தவெங் கூத்தாவோ. 7.6.2

    3510
    காத்தவெங் கூத்தாவோ. மலையேந்திக்
    கன்மாரி தன்னை,
    பூத்தண் டுழாய்முடி யாய்.புனை
    கொன்றையஞ் செஞ்சடையாய்,
    வாய்த்தவென் நான்முக னே.வந்தென்
    னாருயிர் நீயானால்,
    ஏத்தருங் கீர்த்தியி னாய்.உன்னை
    யெங்குத் தலைப்பெய்வனே? 7.6.3

    3511
    எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில்
    மூவுல கும்நீயே,
    அங்குயர் முக்கட்fபிரான்
    பிரமன்பெரு மானவன்நீ,
    வெங்கதிர் வச்சிரக் கையிந்
    திரன்முத லாத்தெய்வம்நீ,
    கொங்கலர் தண்ணந் துழாய்முடி
    யென்னுடைக் கோவலனே. 7.6.4

    3512
    என்னுடைக் கோவல னே.என்
    பொல்லாக்கரு மாணிக்கமே,
    உன்னுடை யுந்தி மலருலகம்
    அவைமூன் றும்பரந்து,
    உன்னுடைச் சோதிவெள் ளத்தகம்
    பாலுன்னைக் கண்டுகொண்டிட்டு,
    என்னுடை யாருயிரார் எங்ஙனே
    கொல்வந் தெய்துவரே? 7.6.5

    3513
    வந்தெய்து மாறறி யேன்மல்கு
    நீலச் சுடர்தழைப்ப,
    செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொரு
    மாணிக்கம் சேர்வதுபோல்,
    அந்தர மேல்செம்பட் டோ டடி
    உந்திகை மார்வுகண்வாய்,
    செஞ்சுடர்ச் சோதி விடவுறை
    என்திரு மார்பனையே. 7.6.6

    3514
    என்திரு மார்பன் தன்னையென்
    மலைமகள் கூறன்தன்னை,
    என்றுமென் நாமக ளையகம்
    பால்கொண்ட நான்முகனை,
    நின்ற சசிபதி யைநிலங்
    கீண்டெயில் மூன்றெரித்த,
    வென்று புலம்துரந் தவிசும்
    பாளியைக் காணேனோ. 7.6.7

    3515
    ஆளியைக் காண்பரி யாயரி
    காண்நரி யாய்,அரக்கர்
    ஊளையிட் டன்றிலங்கைகடந்
    துபிலம் புக்கொளிப்ப,
    மீளியம் புள்ளைக் கடாய்விறல்
    மாலியைக் கொன்று,பின்னும்
    ஆளுயர் குன்றங்கள் செய்தடர்த்
    தானையும் காண்டுங்கொலோ? 7.6.8

    3516
    காண்டுங்கொ லோநெஞ்ச மே.கடி
    யவினை யேமுயலும்,
    ஆண்டிறல் மீளிமொய்ம் பிலரக்f
    கன்fகுலத் தைத்தடிந்து,
    மீண்டுமவன் தம்பிக்கே விரி
    நீரிலங்கையருளி,
    ஆண்டுதன் சோதிபுக் கவம
    ரர்அரி யேற்றினையே? 7.6.9

    3517
    ஏற்றரும் வைகுந்தத் தையருளும்
    நமக்கு, ஆயர்குலத்து
    ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு
    மாயங்க ளேயியற்றி,
    கூற்றியல் கஞ்சனைக் கொன்றுஐவர்க்
    காயக்கொடுஞ் சேனைதடிந்து,
    ஆற்றல்மிக் கான்பெரி யபரஞ்
    சோதிபுக் கஅரியே. 7.6.10

    3518
    புக்க அரியுரு வாயவுணனுடல் கீண்டுகந்த,
    சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபஞ்சொன்ன,
    மிக்கவோ ராயிரத் துளிவைபத்தும்வல் லாரவரை,
    தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி செய்வ ரேழையரே. (2) 7.6.11

    3519
    ஏழையர் ஆவியுண் ணுமிணைக்
    கூற்றங்கொ லோவறியேன்,
    ஆழியுங் கண்ண பிராந்திருக்
    கண்கள்கொ லோவறியேன்,
    சூழவும் தாமரை நாண்மலர்
    போல்வந்து தோன்றும்கண்டீர்,
    தோழியர் காள்.அன்னை மீர்.என்fசெய்
    கேந்துய ராட்டியேனே? (2) 7.7.1

    3520
    ஆட்டியும் தூற்றியும் நின்றன்னை
    மீரென்னை நீர்நலிந்தென்?
    மாட்டுயர் கற்பகத் தின்வல்லி
    யோகொழுந் தோ?அறியேன்,
    ஈட்டிய வெண்ணெயுண் டாந்திரு
    மூக்கென தாவியுள்ளே,
    மாட்டிய வல்விளக் கின்
    சுடரய்நிற்கும் வாலியதே. 7.7.2

    3521
    வாலிய தோர்கனி கொல்வினை
    யாட்டியேன் வல்வினைகொல்,
    கோலம் திரள்பவ ளக்கொழுந்
    துண்டங்கொ லோவறியேன்,
    நீல நெடுமுகில் போல்திரு
    மேனியம் மான்தொண்டைவாய்,
    ஏலும் திசையுளெல் லாம்வந்து
    தோன்றுமென் னின்னுயிர்க்கே. 7.7.3

    3522
    இன்னுயிர்க் கேழையர் மேல்வளையும்
    இணை நீலவிற்கொல்,
    மன்னிய சீர்மத னங்கருப்புச்
    சிலை கொல்,மதனன்
    தன்னுயிர்த் தாதைகண் ணபெருமான்
    புரு வமவையே,
    என்னுயிர் மேலன வாய்
    அடுகின்றன என்று நின்றே. 7.7.4

    3523
    என்று நின்றேதிக ழும்செய்ய
    வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,
    அன்றியென் னாவி யடுமணி
    முத்தங்கொ லோவறியேன்,
    குன்றம் எடுத்தபி ரான்
    முறுவலெனதாவியடும்,
    ஒன்றும் அறிகின்றி லேனன்னை
    மீர்.எனக் குய்விடமே. 7.7.5

    3524
    உய்விடம் ஏழையர்க் கும்
    அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
    எவ்விடம்? என்றிலங் கிமகரம்
    தழைக் கும்தளிர்கொல்,
    பைவிடப் பாம்பணை யான்
    திருக்குண்டலக் காதுகளே?
    கைவிட லொன்றுமின் றிய்
    அடுகின்றன காண்மின்களே. 7.7.6

    3525
    காண்மின்கள் அன்னையர் காள்.என்று
    காட்டும் வகையறியேன்,
    நாண்மன்னு வெண்திங்கள் கொல்.
    நயந்தார்கட்கு நச்சிலைகொல்,
    சேண்மன்னு நால்தடந் தோள்
    பெருமான்தன் திருநுதலே?,
    கோள்மன்னி யாவி யடும்கொடியேன்
    உயிர் கோளிழைத்தே. 7.7.7

    3526
    கோளிழைத் தாமரையும்
    கொடியும் பவளமும் வில்லும்,
    கோளிழைத்தண் முத்தமும்
    தளிரும் குளிர்வான் பிறையும்,
    கோளிழையாவுடைய கொழுஞ்
    சோதி வட்டங்கொல், கண்ணன்,
    கோளிழைவாள் முகமாய்க் கொடியேன்
    உயிர் கொள்கின்றதே? 7.7.8

    3527
    கொள்கின்ற கோளிரு ளைச்சுகிர்ந்
    திட்ட கொழுஞ்சுருளின்,
    உள்கொண்ட நீலநன் னூல்தழை
    கொல்?அன்று மாயங்குழல்,
    விள்கின்ற பூந்தண் டுழாய்விரை
    நாறவந் தென்னுயிரை,
    கள்கின்ற வாறறி யீரன்னை
    மீர்.கழ றாநிற்றிரே. 7.7.9

    3528
    நிற்றிமுற் றத்துள் என் றுநெரித்
    தகைய ராயென்னைநீர்
    சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்சுடர்ச்
    சோதி மணிநிறமாய்,
    முற்றவிம் மூவுல கும்விரி
    கின்ற சுடர்முடிக்கே,
    ஒற்றுமைக் கொண்டதுள் ளமன்னை
    மீர்.நசை யென்நுங்கட்கே? 7.7.10

    3529
    கட்கரி யபிர மஞ்சிவன் இந்திரன் என்றிவர்க்கும்,
    கட்கரி யகண்ண னைக்குரு கூர்ச்சடகோபன்fசொன்ன,
    உட்குடை யாயிரத் தூளிவை யுமொரு பத்தும்வல்லார்,
    உட்குடை வானவ ரோடுட னாயென்றும் மாயாரே. (2) 7.7.11

    3530
    மாயா. வாமன னே.மது சூதா. நீயருளாய்,
    தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்,
    தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,
    நீயாய் நீநின்ற வாறிவை யென்ன நியாயங்களே. (2) 7.8.1

    3531
    அங்கண் மலர்த்தண் டுழாய்முடி அச்சுத னே.அருளாய்,
    திங்களும் ஞாயிறு மாய்ச்செழும் பல்சுட ராயிருளாய்,
    பொங்கு பொழிமழை யாய்ப்புக ழாய்பழி யாய்ப்பின்னும்நீ,
    வெங்கண்வெங் கூற்றமு மாவிவை யென்ன விசித்திரமே. 7.8.2

    3532
    சித்திரத் தேர்வல வா.திருச் சக்கரத் தாய்.அருளாய்,
    எத்தனை யோருக முமவை யாயவற் றுள்ளியுலும்,
    ஒத்தவொண் பல்பொருள் களுலப் பில்லன வாய்வியவாய்,
    வித்தகத் தாய்நிற்றி நீயவை யென்ன விடமங்களே. 7.8.3

    3533
    கள்ளவிழ் தாமரைக்கண்கண்ண னே.எனக் கொன்றருளாய்,
    உள்ளது மில்லது மாயுலப் பில்லன வாய்வியவாய்,
    வெள்ளத் தடங்கட லுள்விட நாகணை மேல்மருவி,
    உள்ளப்பல் யோகுசெய் தியிவை யென்ன உபாயங்களே. 7.8.4

    3534
    பாசங்கள் நீக்கியென் னையுனக் கேயுறக் கொண்டிட்டு,நீ
    வாச மலர்த்தண் டுழாய்முடி மாயவ னே.அருளாய்,
    காயமும் சீவனு மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ,
    மாயங்கள்செய்துவைத் தியிவை யென்ன மயக்குகளே. 7.8.5

    3535
    மயக்கா. வாமன னே.மதி யாம்வண்ணம் ஒன்றருளாய்,
    அயர்ப்பாய்த் தேற்றமு மாயழ லாய்க்குளி ராய்வியவாய்,
    வியப்பாய் வென்றிகளாய்வினை யாய்ப்பய னாய்ப்பின்னும்நீ,
    துயக்காய் நீநின்ற வாறிவை யென்ன துயரங்களே. 7.8.6

    3536
    துயரங்கள் செய்யுங்கண்ணா.சுடர் நீண்முடி யாயருளாய்,
    துயரம்செய் மானங்க ளாய்மத னாகி உகவைகளாய்,
    துயரம்செய் காமங்க ளாய்த்துலையாய்நிலை யாய்நடையாய்,
    துயரங்கள் செய்துவைத் தியிவை யென்னசுண் டாயங்களே. 7.8.7

    3537
    என்னச்சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளும்கண்ணா,
    இன்னதோர் தன்மையை என்றுன்னையாவர்க்கும் தேற்றரியை,
    முன்னிய மூவுல குமவை யாயவற் றைப்படைத்து,
    பின்னுமுள் ளாய்.புறத் தாய்.இவை யென்ன இயற்கைகளே. 7.8.8

    3538
    என்ன இயற்கைகளால் எங்ஙனேநின்றிட் டாயென்கண்ணா,
    துன்னு கரசர ணம்முத லாகவெல் லாவுறுப்பும்
    உன்னு சுவையொளி யூறொலி நாற்றம் முற்றும்நீயே,
    உன்னை யுணர வுறிலுலப் பில்லை நுணுக்கங்களே. 7.8.9

    3539
    இல்லை நுணுக்கங்க ளேயித னில்பிறி தென்னும்வண்ணம்
    தொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே
    அல்லித் துழாயலங் கலணி மார்ப.என் அச்சுதனே,
    வல்லதோர் வண்ணம்சொன்னாலதுவேயுனக் காம்வண்ணமே. 7.8.10

    3540
    ஆம்வண்ண மின்னதொன் றென்றறி வதரி யஅரியை,
    ஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட கோபன் அறிந்துரைத்த
    ஆம்வண்ண வொண்டமிழ்களிவை யாயிரத் துளிப்பத்தும்,
    ஆம்வண்ணத் தாலுரைப்பாரமைந் தார்தமக்கென்றைக்குமே. (2) 7.8.11

    3541
    என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
    அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
    இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
    நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ? (2) 7.9.1

    3542
    என்சொல்லி நிற்பனென் இன்னுயி ரின்றொன்றாய்,
    என்சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து,
    தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,என்
    முன்சொல்லும் மூவுரு வாம் முதல்வனே. 7.9.2

    3543
    ஆம்முதல் வனிவ னென்றுதற் றேற்றி,என்
    நாமுதல் வந்து புகுந்துநல் லின்கவி,
    தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன,என்
    வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ? 7.9.3

    3544
    அப்பனை யென்று மறப்பனென் னாகியே,
    தப்புத லின்றித் தனைக் கவி தான்சொல்லி,
    ஒப்பிலாத் தீவினை யேனையுய் யக்கொண்டு
    செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே? 7.9.4

    3545
    சீர்கண்டு கொண்டு திருந்துநல் லின்கவி,
    நேற்பட யான்சொல்லும் நீர்மை யிலாமையில்,
    ஏர்விலா என்னைத்தன் னாக்கி என் னால்தன்னை,
    பார்பரவு இன்கவி பாடும் பரமரே. 7.9.5

    3546
    இன்கவி பாடும் பரம கவிகளால்,
    தன்கவி தான்தன்னைப் பாடுவி யாது,இன்று
    நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை,
    வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே. 7.9.6

    3547
    வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச்,
    செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை,
    வைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி,
    செய்குந்தன் தன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ. 7.9.7

    3548
    ஆர்வனோ ஆழியங் கையெம்பி ரான்புகழ்,
    பார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும்,
    ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
    சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே? 7.9.8

    3549
    திறத்துக்கே துப்புர வாம்திரு மாலின்சீர்,
    இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ,
    மறப்பிலா வென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
    உறப்பல இன்கவி சொன்ன வுதவிக்கே? 7.9.9

    3560
    உதவிக்கைம் மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில்,
    அதுவும்மற் றாங்கவன் றன்னதென் னால்தன்னை,
    பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,
    எதுவுமொன் றுமில்லை செய்வதிங் குமங்கே. 7.9.10

    3551
    இங்குமங் கும்திரு மாலன்றி இன்மைகண்டு,
    அங்ஙனே வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,
    இங்ஙனே சொன்னவோ ராயிரத் திப்பத்தும்,
    எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே. (2) 7.9.11

    3552
    இன்பம் பயக்க எழில்மலர்
    மாதரும் தானுமிவ் வேழுலகை,
    இன்பம் பயக்க இனிதுடன்
    வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
    அன்புற் றமர்ந்துறை கின்றா
    ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
    அன்புற் றமர்ந்து வலம்செய்து
    கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ. (2) 7.10.1

    3553
    ஆகுங்கொல் ஐயமொன் றின்றி
    அகலிடம் முற்றவும், ஈரடியே
    ஆகும் பரிசு நிமிர்ந்த
    திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,
    மாகம் திகழ்கொடி மாடங்கள்
    நீடும் மதிள்திரு வாறன்விளை,
    மாகந்த நீர்கொண்டு தூவி
    வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ. 7.10.2

    3554
    கூடுங்கொல் வைகலும் கோவிந்த
    னைமது சூதனைக் கோளரியை,
    ஆடும் பறவை மிசைக்கண்டு
    கைதொழு தன்றி யவனுறையும்,
    பாடும் பெரும்புகழ் நான்மறை
    வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்,
    நீடு பொழில்திரு வாறன்
    விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே. 7.10.3

    3555
    வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு
    தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற
    வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந்
    நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை,
    வாய்க்கும் பெரும்புகழ் மூவுல
    கீசன் வடமது ரைப்பிறந்த,
    வாய்க்கும் மணிநிறக் கண்ணபி
    ரான்றன் மலரடிப் போதுகளே. 7.10.4

    3556
    மலரடிப் போதுகள் என்னெஞ்சத்
    தெப்பொழு துமிருத் திவணங்க,
    பலரடி யார்முன் பருளிய
    பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்,
    மலரில் மணிநெடு மாடங்கள்
    நீடு மதில்திரு வாறன்விளை,
    உலகம் மலிபுகழ் பாடநம்
    மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே. 7.10.5

    3557
    ஒன்றும்நில் லாகெடும் முற்றவும்
    தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர்,
    அன்றங் கமர்வென் றுருப்பிணி
    நங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்,
    என்றுமெப் போதுமென் னெஞ்சம்
    துதிப்பவுள் ளேயிருக் கின்றபிரான்,
    நின்ற அணிதிரு வாறன்
    விளையென்னும் நீணக ரமதுவே. 7.10.6

    3558
    நீணக ரமது வேமலர்ச்
    சோலைகள் சூழ்திரு வாறன்விளை,
    நீணக ரத்துறை கின்றபி
    ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்
    வாண புரம்புக்கு முக்கட்பி
    ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,
    வாணனை யாயிரந் தோள்துணித்
    தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே. 7.10.7

    3559
    அன்றிமற் றொன்றிலம் நின்சர
    ணே. என் றகலிரும் பொய்கையின்வாய்,
    நின்றுதன் நீள்கழ லேத்திய
    ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான்,
    சென்றங் கினிதுறை கின்ற
    செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
    ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?
    தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே. 7.10.8

    3560
    தீவினை யுள்ளத்தின் சார்வல்ல
    வாகித் தெளிவிசும் பேறலுற்றால்,
    நாவினுள் ளுமுள்ளத் துள்ளும்
    அமைந்த தொழிலினுள் ளும்நவின்று,
    யாவரும் வந்து வணங்கும்
    பொழில்திரு வாறன் விளையதனை,
    மேவி வலஞ்செய்து கைதொழக்
    கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே. 7.10.9

    3561
    சிந்தைமற் றொன்றின் திறத்ததல்
    லாத்தன்மை தேவபி ரானறியும்,
    சிந்தையி னால்செய்வ தானறி
    யாதன மாயங்கள் ஒன்றுமில்லை,
    சிந்தையி னால்சொல்லி னால்செய்கை
    யால்நிலத் தேவர் குழுவணங்கும்,
    சிந்தை மகிழ்திரு வாறன்
    விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே. 7.10.10

    3562
    தீர்த்தனுக் கற்றபின் மற்றோர்
    சரணில்லை யென்றெண்ணி, தீர்த்தனுக்கே
    தீர்த்த மனத்தன னாகிச்
    செழுங்குரு கூர்ச்சட கோபன்fசொன்ன,
    தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை
    பத்தும்வல் லார்களை, தேவர்வைகல்
    தீர்த்தங்க ளேயென்று பூசித்து
    நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே. (2) 7.10.11