MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    இராமானுஜ நூற்றந்தாதி /திருவரங்கத்து அமுதனார்

    3913@
    நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித்
    துதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர்
    எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
    கதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே. 21

    3914@
    கார்த்திகை யானும் கரிமுகத் தானும் கனலும்முக்கண்
    மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
    பூத்தவ னே.என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த
    தீர்த்தனை யேத்தும் இராமா னுசனென்றன் சேமவைப்பே. 22

    3915@
    வைப்பாய வான்பொருள் என்று,நல் லன்பர் மனத்தகத்தே
    எப்போதும் வைக்கும் இராமா னுசனை இருநிலத்தில்
    ஒப்பார் இலாத உறுவினை யேன்வஞ்ச நெஞ்சில்வைத்து
    முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே. 23

    3916@
    மொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால்
    எய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன்
    பொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள்நிலத்தவியக்
    கைத்தமெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார்தன்னையே. 24

    3917@
    காரேய் கருணை இராமா னுச,இக் கடலிடத்தில்
    ஆரே யறிபவர் நின்னரு ளின்தன்மை அல்லலுக்கு
    நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்
    சீரே யுயிர்க்குயி ராய், அடி யேற்கின்று தித்திக்குமே. 25

    3918@
    திக்குற்ற கீர்த்தி இராமா னுசனை, என் செய்வினையாம்
    மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும்நல்லோர்
    எக்குற்ற வாளர் எதுபிறப் பேதியல் வாகநின்றோர்
    அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல் வேநம்மை யாட்கொள்ளுமே. 26

    3919@
    கொள்ளக் குறைவற் றிலங்கிக் கொழுந்துவிட் டோ ங்கியவுன்
    வள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய்
    வெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று
    தள்ளுற் றிரங்கும் இராமா னுச என் தனிநெஞ்சமே. 27

    3920@
    நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
    பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்நண்ணா
    வஞ்சர்க் கரிய இராமா னுசன்புகழ் அன்றியென்வாய்
    கொஞ்சிப் பரவகில் லாது என்ன வாழ்வின்று கூடியதே. 28

    3921@
    கூட்டும் விதியென்று கூடுங்கொ லோ,தென் குருகைப்பிரான்
    பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்
    வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர்
    ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே? 29

    3922@
    இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த
    துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில்
    மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த
    அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே. 30

    3923@
    ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே.
    ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
    காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்
    பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே. (2) 31

    3924@
    பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
    திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்
    வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த
    அருந்தவன் எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே. 32

    3925@
    அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும்
    படையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும்
    புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று
    இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே. 33

    3926@
    நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
    பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் பெய்வினைதென்
    புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்
    நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே. 34

    3927@
    நயவேன் ஒருதெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்
    புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்
    மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்
    அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே? 35

    3928@
    அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்
    கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப் பப்,பின்னும் காசினியோர்
    இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின்
    படரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே. 36

    3929@
    படிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம்
    குடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர்
    கடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர்
    அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே. 37

    3930@
    ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே
    போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு புண்ணியர்தம்
    வாக்கிற் பிரியா இராமா னுச நின் அருளின்வண்ணம்
    நோக்கில் தெரிவிரி தால், உரை யாயிந்த நுண்பொருளே. 38

    3931@
    பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
    மருள்கொண் டிளைக்கும் நமக்கு நெஞ் சே.மற்று ளார்த்தரமோ?
    இருள்கோண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே
    தெருளும் தெருள்தந்து இராமா னுசன்fசெய்யும் சேமங்களே. 39

    3932@
    சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
    காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே
    ஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான்
    வாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே. 40

    3933@
    மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
    கண்ணுற நிற்கிலும் காணகில் லா, உல கோர்களெல்லாம்
    அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே
    நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே. 41

    3934@
    ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்தி
    மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள்
    நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
    தூயவன் தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே. 42

    3935@
    சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
    பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
    உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறுகலியைத்
    துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே. 43

    3936@
    சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
    இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
    நல்லார் பரவும் இராமா னுசன்திரு நாமம் நம்பிக்
    கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே. 44

    3937@
    பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற்
    காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என் றிப்பொருளைத்
    தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்
    கூறும் பரமன்று இராமா னுசமெய்ம்மை கூறிடிலே. 45

    3938@
    கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
    மாறன் பணித்த மரையுணர்ந் தோனை மதியிலியேன்
    தேறும் படியென் மனம்புதுந் தானைத் திசையனைத்தும்
    ஏறும் குணனை இராமா னுசனை இறைஞ்சினமே. 46

    3939@
    இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
    தறம்செப்பும் அண்ணல் இராமா னுசன்,என் அருவினையின்
    திறம்செற் றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே
    நிறைந்தொப் பறவிருந் தான், எனக் காரும் நிகரில்லையே. 47

    3940@
    நிகரின்றி நின்றவென் நீசதைக்கு நின்னரு ளின்கணன்றிப்
    புகலொன்று மில்லை அருட்குமஃ தேபுகல் புன்மையிலோர்
    பகரும் பெருமை இராமா னுச இனி நாம்பழுதே
    அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மானபின்னே? 48

    3941@
    ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறுசமயம்
    போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத்
    தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத்
    தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே. 49

    3942@
    உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
    கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம்
    பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்
    எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே. 50

    3943@
    அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர்
    முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த
    அடியர்க் கமுதம் இராமா னுசனென்னை ஆளவந்திப்
    படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே. 51

    3944@
    பார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப் பார்முழுதும்
    போர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து
    தீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ
    டார்த்தான் இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே. 52

    3945@
    அற்புதன் செம்மை இராமா னுசன், என்னை ஆளவந்த
    கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
    பற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்
    நற்பொருள் தன்னை, இந் நானிலத் தேவந்து நாட்டினனே. 53

    3946@
    நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
    காட்டிய வேதம் களிப்புற் றது,தென் குருகைவள்ளல்
    வாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்
    ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே. 54

    3947@
    கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்
    தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த
    பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
    கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குடியே. 55

    3948@
    கோக்குல மன்னரை மூவெழு கால், ஒரு கூர்மழுவால்
    போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
    ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின்என்
    வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே. 56

    3949@
    மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள்
    உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை
    நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே
    பெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே. 57

    3950@
    பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்
    றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்
    டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்
    வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே. 58

    3951@
    கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
    மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
    சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
    உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே. 59

    3952@
    உணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
    மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள்
    புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்
    குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே. 60

    3953@
    கொழுந்துவிட் டோ டிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத்
    தழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னும், அருமுனிவர்
    தொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சுடர்மிக்
    கெழுந்தது,அத் தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே. 61

    3954@
    இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றிஇன் றியான்இறையும்
    வருந்தேன் இனியெம் இராமா னுசன்,மன்னு மாமலர்த்தாள்
    பொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப்
    பொருந்தே வரைப்பர வும், பெரி யோர்தம் கழல்பிடித்தே. 62

    3955@
    பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்
    அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்
    செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்
    படியைத் தொடரும் இராமா னுச மிக்க பண்டிதனே. 63

    3956@
    பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்
    விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை
    கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே
    மண்டிவந் தேன்றது வாதியர் காள். உங்கள் வாழ்வற்றதே. 64

    3957@
    வாழ்வற் றதுதொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்
    தாழ்வற் றதுதவம் தாரணி பெற்றது, தத்துவநூல்
    கூழற் றதுகுற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
    நாழற் றது,நம் இராமா னுசந்தந்த ஞானத்திலே. 65

    3958@
    ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
    வானம் கொடுப்பது மாதவன் வல்வினை யேன்மனத்தில்
    ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கத்
    தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே. 66

    3959@
    சரணம் அடைந்த தருமனுக் காப்,பண்டு நூற்றுவரை
    மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த
    கரணம் இவையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்
    கரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே? 67

    3960@
    ஆரெனக் கின்று நிகர்ச்சொல்லின் மாயனன் றைவர்த்தெய்வத்
    தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்
    பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர்
    சீரினிற் சென்று பணிந்தது, என் னாவியும் சிந்தையுமே. 68

    3961@
    சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
    அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
    தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து
    எந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே. 69

    3962@
    என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த
    உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்
    பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை
    தன்னையென் பார்ப்பர் இராமா னுச உன்னைச் சார்ந்தவரே? 70

    3963@
    சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான்மிகவும்
    கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே
    தீர்ந்ததென் செய்கைமுன் செய்வினை நீசெய் வினையதனால்
    பேர்ந்தது வண்மை இராமா னுச எம் பெருந்தகையே. 71

    3964@
    கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
    உய்த்தனன் தூய மறைநெறி தன்னை,என் றுன்னியுள்ளம்
    நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறைபுக ழோருடனே
    வைத்தனன் என்னை இராமா னுசன்மிக்க வண்மைசெய்தே. 72

    3965@
    வண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும்
    தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய்
    உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்
    திண்மையல் லாலெனக் கில்லை, மற் றோர்நிலை தேர்ந்திடிலே. 73

    3966@
    தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
    கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனையவண்மை
    ஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில்
    சேரா தவரைச் சிதைப்பது அப் போதொரு சிந்தைசெய்தே. 74

    3967@
    செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர்
    கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பே
    மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழே
    மொய்த்தலைக் கும்வந்து இராமா னுச.என்னை முற்றுநின்றே. 75

    3968@
    நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்
    குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
    உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்
    என்றனக் கும்அது,இராமா னுச இவை யீந்தருளே. (2) 76

    3969@
    ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப்
    பாய்ந்தனன் அம்மறைப் பல்பொரு ளால்,இப் படியனைத்தும்
    ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர்பறியக்
    காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே? 77

    3970@
    கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
    வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே
    திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
    பொருத்தப் படாது, எம் இராமா னுச மற்றோர் பொய்ப் பொருளே. 78

    3971@
    பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே
    மெய்மைப் புரக்கும் இராமா னுசன்நிற்க, வேறுநம்மை
    உய்யக் கொளவல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே
    ஐயப் படாநிற்பர் வையத்துள் ளோர்நல் லறிவிழந்தே. 79

    3972@
    நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப
    வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,,அவர்க்கே
    எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்
    சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே. 80

    3973@
    சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால்
    சார்வின்றி நின்ற எனக்கு,அரங் கன்செய்ய தாளிணைகள்
    பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமா னுச.இனியுன்
    சீரொன் றியகரு ணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே. 81

    3974@
    தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,வெந் தீவினையால்
    உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்
    பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ.
    தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே. 82

    3975@
    சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும் என்னும்
    பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பதயுகமாம்
    எர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
    கார்கொண்ட வண்மை இராமா னுச.இது கண்டுகொள்ளே. 83

    3976@
    கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே
    தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்
    விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்
    றுண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே. 84

    3977@
    ஓதிய வேதத்தின் உட்பொரு ளய், அதன் உச்சிமிக்க
    சோதியை நாதன் எனவெறி யாதுழல் கின்றதொண்டர்
    பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும்பெரியோர்
    பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை. 85

    3978@
    பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
    உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல்
    கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம்
    பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே. 86

    3979@
    பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட்
    குரியசொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில்மிக்கோர்
    தெரியும்வண் கீர்த்தி இராமா னுசன்மறை தேர்ந்துலகில்
    புரியுநன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும்கலியே. 87

    3980@
    கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான்
    ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால்
    வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம்
    புலிமிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே. (2) 88

    3981@
    போற்றருஞ் சீலத் திராமா னுச,நின் புகழ்தெரிந்து
    சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர்தனக்கோர்
    ஏற்றமென் றேகொண் டிருக்கிலு மென்மனம் ஏத்தியன்றி
    ஆற்றகில் லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே. 89

    3982@
    நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே
    எனையாள வந்த இராமா னுசனை இருங்கவிகள்
    புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
    வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே. 90

    3983@
    மருள்சுரந் தாகம வாதியர் கூறும்,அவப்பொருளாம்
    இருள்சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டியசீர்
    அருள்சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
    பொருள்சுரந் தான், எம் இராமா னுசன்மிக்க புண்ணியனே. 91

    3984@
    புண்ணிய நோன்பு புரிந்துமி லேன்,அடி போற்றிசெய்யும்
    நுண்ணருங் கேள்வி நுவன்றுமி லேன்,செம்மை நூற்புலவர்க்
    கெண்ணருங் கீர்த்தி இராமா னுச.இன்று நீபுகுந்தென்
    கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்றவிக் காரணம் கட்டுரையே. 92

    3985@
    கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர்சொல்லும்
    பெட்டைக் கெடுக்கும் பிரனல்ல னே,என் பெருவினையைக்
    கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி
    வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே. 93

    3986@
    தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சலி யாப்பிறவிப்
    பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்
    திவந்தரும் தீதில் இராமா னுசன்தன்னைச் சார்ந்தவர்கட்
    குவந்தருந் தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே. 94

    3987@
    உண்ணின் றுயிர்களுக் குற்றன வேசெய்து அவர்க்குயவே
    பண்ணும் பரனும் பரிவில னாம்படி பல்லுயிர்க்கும்
    விண்ணின் தலைநின்று விடளிப் பானெம் இராமானுசன்
    மண்ணின் தலத்துதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே. 95

    3988@
    வளரும் பிணிகொண்ட வல்வினை யால்,மிக்க நல்வினையில்
    கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத்தலையூன்
    தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்
    குளரெம் இறைவர் இராமா னுசன்றன்னை உற்றவரே. 96

    3989@
    தன்னையுற் றாட்செய்யும் தன்மையி னோர்,மன்னு தாமரைத்தாள்
    தன்னையுற் றாட்செய்ய என்னையுற் றானின்று தன்தகவால்
    தன்னையுற் றாரன்றித் தன்மையுற் றாரில்லை என்றறிந்து
    தன்னையுற் றாரை இராமா னுசன்குணம் சாற்றிடுமே. 97

    3990@
    இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்
    சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல்பிறப்பில்
    நடுமே யினிநம் இராமா னுசன்நம்மை நம்வசத்தே
    விடுமே சரணமென் றால், மன மே நையல் மேவுதற்கே? (2) 98

    3991@
    தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்
    சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்
    நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
    பொற்கற் பகம், எம் இராமா னுசமுனி போந்தபின்னே. 99

    3992@
    போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
    ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
    ஈந்திட வேண்டும் இராமா னுச.இது அன்றியொன்றும்
    மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே. 100

    3993@
    மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதிமயங்கித்
    துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி
    உயக்கொண்டு நல்கும் இராமா னுச.என்ற துன்னையுன்னி
    நயக்கும் அவர்க்கி திழுக்கென்பர், நல்லவர் என்றும்நைந்தே. 101

    3994@
    நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந்தெம்
    ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அருவினையேன்
    கையும் தொழும்கண் கருதிடுங் காணக் கடல்புடைசூழ்
    வையம் இதனில், உன் வண்மையென் பாலென் வளர்ந்ததுவே? 102

    3995@
    வளர்ந்தவெங் கோட மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன்
    கிளர்ந்தபொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து
    விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய்வினைநோய்
    களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற் கனியென்னவே. 103

    3996@
    கையிற் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன்
    மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
    தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ
    செய்யில் தரிப்பன் இராமா னுச என் செழுங்கொண்டலே. 104

    3997@
    செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக்கீழ்
    விழுந்திருப் பார்நெஞ்சில் மேவுநன் ஞானி,நல் வேதியர்கள்
    தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும்பெரியோர்
    எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே. (2) 105

    3998@
    இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும்
    பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந்
    திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந்
    திருப்பிடம் என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே. (2) 106

    3999@
    இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
    என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
    துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே
    அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே. (2) 107

    4000@
    அங்கயல் பாய்வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
    பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்
    தங்கிய தென்னத் தழைத்துநெஞ் சே நந் தலைமிசையே
    பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூமன்னவே. (2) 108

    திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்
    எம்பெருமானார் திருவடிகளே சரணம்