MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    ஐந்தாம் பத்து

    முதல் திருமொழி - வாக்குத்தூய்மை

    எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

    433:
    வாக்குத்தூய்மையிலாமையினாலே
    மாதவா. உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்
    நாக்குநின்னையல்லால்அறியாது
    நானதஞ்சுவன்என்வசமன்று
    மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
    முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்
    காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
    காரணா. கருளக்கொடியானே. (2) 1.

    434:
    சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
    சங்குசக்கரமேந்துகையனே.
    பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
    பொறுப்பது பெரியோர்கடனன்றே
    விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
    வேறொருவரோடுஎன்மனம்பற்றாது
    உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
    ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே. 2.

    435:
    நன்மைதீமைகளொன்றும்அறியேன்
    நாரணா. என்னும்இத்த்னையல்லால்
    புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப்
    புகழ்வானன்றுகண்டாய்திருமாலே.
    உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
    ஓவாதேநமோநாரணா. என்பன்
    வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
    வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே. 3.

    436:
    நெடுமையால்உலகேழுமளந்தாய்.
    நின்மலா. நெடியாய். அடியேனைக்
    குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
    கூறைசோறுஇவைவேண்டுவதில்லை
    அடிமையென்னுமக்கோயின்மையாலே
    அங்கங்கேஅவைபோதரும்கண்டாய்
    கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை
    கோத்தவன்தளைகோள்விடுத்தானே. 4.

    437:
    தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை
    துடவையும்கிணறும்இவையெல்லாம்
    வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே
    வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்
    நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது
    நச்சுவார்பலர்கேழலொன்றாகி
    கோட்டுமண்கொண்டகொள்கையினானே.
    குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே. 5.

    438:
    கண்ணா. நான்முகனைப்படைத்தானே.
    காரணா. கரியாய். அடியேன்நான்
    உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
    ஓவாதேநமோநாரணாவென்று
    எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
    வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
    நண்ணாநாள் அவைதத்துறுமாகில்
    அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே. 6.

    439:
    வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
    மெத்தையாகவிரித்து அதன்மேலே
    கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
    காணலாங்கொல் என்றாசையினாலே
    உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
    உரோமகூபங்களாய் கண்ணநீர்கள்
    துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
    சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே. 7.

    440:
    வண்ணமால்வரையேகுடையாக
    மாரிகாத்தவனே. மதுசூதா.
    கண்ணனே. கரிகோள்விடுத்தானே.
    காரணா. களிறட்டபிரானே.
    எண்ணுவாரிடரைக்களைவானே.
    ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே.
    நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
    நன்மையேஅருள்செய்எம்பிரானே. 8.

    441:
    நம்பனே. நவின்றேத்தவல்லார்கள்
    நாதனே. நரசிங்கமதானாய்.
    உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
    ஊழியாயினாய். ஆழிமுன்னேந்தி
    கம்பமாகரிகோள்விடுத்தானே.
    காரணா. கடலைக்கடைந்தானே.
    எம்பிரான். என்னையாளுடைத்தேனே.
    ஏழையேனிடரைக்களையாயே. 9.

    442:
    காமர்தாதைகருதலர்சிங்கம்
    காணவினியகருங்குழல்குட்டன்
    வாமனன்என்மரகதவண்ணன்
    மாதவன்மதுசூதனன்தன்னை
    சேமநன்கமரும்புதுவையர்கோன்
    விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்
    நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
    நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே. (2) 10.

    இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
    (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே
    விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.)

    அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    443:
    நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
    கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின்
    மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார்
    பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2) 1.

    444:
    சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி
    வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார்
    முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன்
    பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே. 2.

    445:
    வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி
    கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி
    எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப்
    பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 3.

    446:
    மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
    இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின்
    சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர்
    பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 4.

    447:
    மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே
    பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி
    மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர்.
    பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5.

    448:
    உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
    பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர்
    அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர்
    பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6.

    449:
    கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி
    அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை
    வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி
    பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 7.

    450:
    ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே
    பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து
    போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில்
    பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 8.

    451:
    உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே.
    அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே.
    இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள்.
    பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். (2) 9.

    452:
    அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும்
    அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து
    பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை
    பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. (2) 10.

    மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
    (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்)

    அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    453:
    துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து
    புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ ?
    மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில்
    சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். (2) 1.

    454:
    வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்
    ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை
    அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று
    தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய். 2.

    455:
    உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன்
    தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய்
    புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று
    இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய். (2) 3.

    456:
    காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன்
    பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன்
    தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று
    பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 4.

    457:
    காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல்
    மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா
    மாலுகளாநிற்கும்என்மனனே. உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன்
    சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய். 5.

    458:
    எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும்
    ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை
    மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா. மறுபிறவிதவிரத்
    திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய். 6.

    459:
    அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால்
    இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய்
    சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும்
    செக்கர்நிறத்துச்சிவப்புடையாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 7.

    460:
    எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே
    இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன்
    மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்.
    சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய். 8.

    461:
    அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்
    இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே?
    சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால்
    தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 9.

    462:
    சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள்
    நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய்
    பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன்
    ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. (2) 10.

    நாலாம் திருமொழி - சென்னியோங்கு
    (எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார்
    தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்)

    அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    463:
    சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய். உலகு
    தன்னைவாழநின்றநம்பீ. தாமோதரா. சதிரா.
    என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
    நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? (2) 1.

    464:
    பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின்
    பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால்
    இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்
    அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே. 2.

    465:
    எம்மனா. என்குலதெய்வமே. என்னுடையநாயகனே.
    நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்?
    நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம்
    சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே. 3.

    466:
    கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல்
    உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன்
    கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா
    தடவரைத்தோள்சக்கரபாணீ. சார்ங்கவிற்சேவகனே. 4.

    467:
    பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல்
    உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்
    உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன்
    என்னப்பா. என்னிருடீகேசா. என்னுயிர்க்காவலனே. 5.

    468:
    உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம்
    என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன்
    மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ.
    என்னிடைவந்துஎம்பெருமான். இனியெங்குப்போகின்றதே? 6.

    469:
    பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல்
    திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய்
    மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய். என்றென்றுஉன்வாசகமே
    உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. 7.

    470:
    அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என்
    மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்.
    நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக
    நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே. 8.

    471:
    பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்
    மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ.
    தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று
    உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. (2) 9.

    472:
    தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல்
    சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி.
    வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும்
    இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. (2) 10.

    473:
    வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
    கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை
    ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை
    சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. (2) 11.

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.