MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 1- 473)

    திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்
    நாதமுனிகள் அருளிச் செய்தது

    குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
    நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக|
    ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
    த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி||

    பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
    இருவிகற்ப நேரிசை வெண்பா

    மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
    சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள்
    கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும்
    வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து

    பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று
    ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய
    வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
    பாதங்கள்யாமுடையபற்று.

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

    ஸ்ரீ:
    ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

    பெரியாழ்வார் அருளிச்செய்த
    திருப்பல்லாண்டு

    காப்பு
    குறள்வெண்செந்துறை

    1:
    பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
    பலகோடிநூறாயிரம்
    மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
    செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2)
    அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1.

    2:
    அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
    வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
    வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
    படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே. (2)

    3:
    வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
    கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
    ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
    பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. 3

    4:
    ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
    கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
    நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
    பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. 4

    5:
    அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
    இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
    தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
    பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. 5.

    6:
    எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
    வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
    அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
    பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6.

    7:
    தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
    கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
    மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
    பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 7.

    8:
    நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
    கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
    மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
    பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. 8.

    9:
    உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
    தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
    விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
    படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9.

    10:
    எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
    அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
    செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
    பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. 10.

    11:
    அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
    செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன்
    நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
    பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே. (2) 11.

    12:
    பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
    வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
    நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
    பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. (2) 12.